<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-14025163</id><updated>2011-11-27T05:06:33.840-08:00</updated><title type='text'>Tamil Archives</title><subtitle type='html'>Tamil articles, stories from various sources</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://e-arc.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14025163/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://e-arc.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>Chandramukhi</name><uri>http://www.blogger.com/profile/16507154480362737534</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>36</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-14025163.post-115651547888356320</id><published>2005-06-29T07:17:00.000-07:00</published><updated>2006-08-25T07:17:58.893-07:00</updated><title type='text'>தமயந்தி</title><content type='html'>எஸ்.ராமகிருஷ்ணன்&lt;br /&gt;&lt;br /&gt;கயிற்று ஊஞ்சல்&lt;br /&gt;&lt;br /&gt;ஈரோட்டில் உள்ள முதியோர் காப்பகம் ஒன்றுக்குப் பார்வையாளராகச் சென்றிருந்தேன். நகரை விலக்கிய சிறிய கிராமம் ஒன்றின் மரங்கள் அடர்ந்த பகுதியில் தனித்திருந்தது. உள்ளே நுழைகையில் இலைகளுக்குள் ஒளிந்துகொண்டு பறவைகள் சப்தமிடுகின்றன. ஐம்பதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் தங்கியிருந்தார்கள். காப்பகத்துக்குள் நுழைந்தபோது, அது மாலை பிரார்த்தனை நேரம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பனிச் சிற்பங்களைப் போல உறைந்துபோன நிசப்தத்தில் முதியவர்கள் வணங்கியபடி நின்றிருந்தனர். உதடுகள்கூட அசையவில்லை. பிரார்த்தனைப் பாடலைப் பாடும் பெண்ணின் குரல் நடுங்கிக்கொண்டு இருந்தது. பிரார்த்தனை முடிந்து வெளியேறும் பலரது கண்கள் கசிந்திருந்தன. அழுதிருக்கிறார்கள். அதைத் துடைத்துக்கொள்ளக்கூட மனதற்று நெற்றி நிறைய திருநீறும் வேதனையை அடக்கிய முகமுமாக அவர்கள் மரத்தடிக்கு வந்து சேர்ந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அநேகமாக அவர்களைத் தேடிப் பார்வையாளர்கள் வருவது வெகு அபூர்வம் என்பது புரிந்தது. குழந்தைகள் ஒருவரையருவர் இடித்துக்கொண்டு உட்காருவதுபோல நெருக்கமாக உட்கார்ந்திருந்தார்கள். ஒவ்வொருவராக அறிமுகப்படுத்திக்கொண்டபோது, ஒன்றிரண்டு முகங்களில் வயதை மீறி கூச்சமும் வெட்கமும் கலந்து வெளிப் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன பேசுவது என்று தெரியவில்லை. மாலை வெயில் மரங்களுக்கிடையில் கசிந்துகொண்டு இருந்தது. ரெம்ப்ராண்டின் ஓவியம் ஒன்றின் முன் அமர்ந்திருப்பது போல, இமைக்காத கண்களும் சலனமற்ற முகமுமாக என் முன் அமர்ந்திருப்பவர்களைப் பார்த்தேன். பெரும்பான்மையான முதியவர்களின் கண்கள் உலர்ந்துபோயிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;பேச்சை எங்கிருந்து துவங்குவது என்று யாருக்கும் தெரியவில்லை. எதையோ மறந்துபோனவரைப் போல ஒரு முதியவர் தன் அறைக்குள் சென்று, கண்ணில் விடும் சொட்டு மருந்தை எடுத்து வந்து இன்னொரு வயோதிகரிடம் தந்தார். அவரும் பாட்டிலைத் திறந்து சொட்டு மருந்து போட்டுவிட்டார். பிறகு இருவரும் பால்யத்திலிருந்து பழகி வந்த இரண்டு சிறார்களைப் போல ஒருவர் தோள் மீது மற்றவர் கையைப் போட்டுக் கொண்டு அமர்ந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்கிருந்தோ ஒரு மயில் அகவும் ஓசை கேட்டது. முதல்முறையாக ஒரு பாட்டி லேசான புன்னகையோடு சொன்னார்... ‘‘மயிலு சார்!’’ மற்றவர் களும் தலையாட்டிக்கொண்டார் கள். ஆனால், பேச்சு துளிர்க்கவே இல்லை. தண்ணீர் வற்றிப்போன கிணற்றைப் போல சொற்களும் மனதில் வற்றிப் போய்விட்டனவா?&lt;br /&gt;&lt;br /&gt;மரத்தடியில் அமர்ந்திருந்த பெண் களில் ஒரேயருவர் மட்டும் நெற்றியில் ஒரு ரூபாய் நாணயமளவு குங்குமம் வைத்திருந்தார். அவர் யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் குனிந்த படியே இருந்தார். அவரது பெயரைக் கேட்டபோதும் தரை பார்த்தபடியே பதில் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;நரைத்த தலையும் சாந்தமான முகமுமாயிருந்த ஒரு பெண்மணி மட்டும் எழுந்து நின்று, பாதி மலையாளம் கலந்த தமிழில் சொன்னார்... ÔÔநான் பாரத் சர்க்கஸில் வேலை செய்தவளாக் கும். எங்க சர்க்கஸ் பல நாடுகள் சுற்றி வந்திருக்கு. எந்தெந்த தேசம் என்று பெயர் மறந்துபோச்சு. பார் விளையாடுறதுல நான் எக்ஸ்பர்ட். பன்னிரண்டு வயசிலே சர்க்கஸ்ல சேர்ந்தது. இருபத்தஞ்சு வருசம் அதில இருந்தாச்சி... இப்பவும் கயிற்றிலே நல்லா ஆடுவேன். ஆனா, வயசாகி தலை நரைச்சவள் பார் ஆடுறதை யார் பாக்கிறது சொல்லுங்கோ... அதான் என்னை வீட்டுக்கு அனுப்பி வச்சிட்டாங்க. சர்க்கஸ்ல இருந்துட்டதால சொந்தம் பந்தம் எல்லாம் விட்டுப் போயாச்சு. அதுனால, வெளியே வந்தப்புறம் எங்கே போறதுன்னு தெரியலை. சர்க்கஸ் கயிற்றிலே ஊஞ்சலாடினப்பகூட பயமா இல்லை. ஆனா, அங்கிருந்து வெளியே வந்தப்புறம்தான் பயம்னா என்னன்னு தெரிய ஆரம்பிச்சது. யார் வீட்லயும் இருக்க முடியலை. எங்கே போறதுன்னும் தெரியலை. அதான் இங்கே வந்து சேர்ந் துட்டேன். சர்க்கஸ்ல ட்ரெயினிங் எடுத்த வளாக்கும்! ஒரு நோய்நொடி கிடையாது. ஆயிரம் தடவை கை தட்டு வாங்கியிருக்கேன். இப்போ எனக்குன்னு யாருமில்லை. தனியா என் கையை நானே தட்டிக்கிட வேண்டியதுதான்’’ &amp; பேச்சைப் பாதியில் நிறுத்திக்கொண்டு, அமைதியாகி விட்டார். மிருகங்களுக்குக்கூட அடைந்து கிடக்க ஒரு கூண்டு இருக்கிறது. ஆனால், சர்க்கஸில் வேலை செய்து வெளியேற்றப்பட்டவளுக்கு போக்கிடமில்லை என்பது மனதை உறுத்துவதாக இருந்தது. இருட்டு ஒரு புகையைப் போல எங்கும் பரவத் துவங்கியது. அவர்கள் மரத்தடியிலிருந்து கலைந்து போகத் துவங்கினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளே வரிசையாக படுக்கைகள் போடப்பட்டு இருந்தன. சிறிய மரக் கட்டில், அதன் ஓரத்தில் சிறிய மர அலமாரி. அதில் துவைத்து மடித்துவைத்த துணிகள். ஒரு மெழுகுவத்தி, தீப்பெட்டி. கொசுவத்திச் சுருள். நாலைந்து பழைய கடிதங்கள். அழுகைக் கறை படிந்த தலையணைகள். விட்டத்தை வெறித்துப் பார்த்தபடி அவரவர் கட்டிலில் ஏறிப் படுத்துக்கொண்டார்கள். இன்றைய நாள் முடியப்போகிறது. ஒவ்வொரு நாளையும் அவர்கள் மனதுக்குள்ளாகக் கணக்கெடுத்துக் கொள்கிறார்கள். உறக்கமும் விழிப்புமற்ற ஒரு சயன நிலையில் அவர்கள் கண்கள் சொருகியிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;காப்பகத்தின் நிர்வாகி அனைவரை யும் சாப்பிட அழைத்தார். நிழல்களைப் போல அவர்கள் நடந்து போகிறார்கள். உணவருந்தும் சப்தம்கூட கேட்கவில்லை. பின் மெதுவாக படுக்கைக்குத் திரும்பு கிறார்கள். ப்ளாக்போர்டில் ஈரத் துணியை வைத்து அழித்தபடியே நிர்வாகி சில பெயர்களை எழுதுகிறார். அது என்னவென்று கேட்டபோது, ÔÔஒவ்வொரு நாளும் சிலர் மௌன விரதம் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. அதன்படி, நாளைக்கு மௌன விரதம் இருப்பவர்களின் பெயர்கள் இவைÕÕ என்று சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே மௌனத்தின் தாழிக்குள் வீழ்ந்து கிடப்பவர்கள்தானே, இனி எதற்காக தனியே ஒரு நாள் மௌன விரதம் என்று கேட்க நினைத்தேன். பார்த்துக்கொண்டே இருந்தபோது நாள் முடிந்து இரவின் நீண்ட பொழுதுக்குள் யாவரும் ஒடுங்கிக் கொண்டு விட்டார்கள். உறக்கத்தில் அவர்களுக்குக் கனவுகள் வருமா? நிச்சயமாகத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பிரார்த்தனைகளும் மௌன விரதமும் அவர்களுக்கு என்ன தந்துவிட முடியும்? அவர்கள் யாசிப்பது சாப்பாட்டை அல்ல, மனித உறவை! அதுவும் ஒரே ஒரு ஆள் தன்னைப் புரிந்தவர் இருந்தால்கூடப் போதும், சமாதானமாகி விடுவார்கள். ஆனால், அதுகூடச் சாத்தியமாவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மனிதனைப் புறக்கணிப்பதும், தனிமைப்படுத்திவிடுவதும்தான் அவனுக்குத் தரும் மாபெரும் தண்டனை. மகாபாரதத்தில்கூட கௌரவ சேனையின் கடைசி ஆளாக மிஞ்சும் அஸ்வத்தாமா, பாஞ்சாலியின் ஐந்து பிள்ளைகளையும் கொன்று விடுகிறான். உத்திரையின் கர்ப்பத்திலிருக்கும் சிசுவின் மீதுகூட அம்பு எய்கிறான். அவனுக்குக் கிடைக் கும் தண்டனை விசித்திரமானது.&lt;br /&gt;&lt;br /&gt;உலகில் நண்பர்கள் யாருமற்றுப் போய், சாவும் இல்லாமல் அவன் சுற்றியலைய வேண்டும் என்று சாபம். வில்லாளிகளில் இந்திரனுக்குச் சமமானவனும் துரோணரின் புத்திரனு மான அஸ்வத்தாமா, இந்த கடுமையான தண்டனையைச் சுமந்துகொண்டு சாவை விலக்கியவனாக தனிமையில் இன்றும் அலைந்துகொண்டு இருக்கிறான் என்கிறது மகாபாரதம்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுவயதில் நமக்கிருந்த பிரச்னை தூக்கத்தில் சிறுநீர் கழித்துவிடுவது. முதுமையிலும் அதுதான் பிரச்னை என்று மார்க் ட்வைன் ஒரு முறை எழுதியிருந்தார். நிஜம்தானே! குழந்தை கள் அழுது ஆர்ப்பாட்டம் செய்து தங்கள் கவனத்தை ஈர்த்துக்கொண்டு விடுகின்றன. முதுமையில் அதற்கும் சாத்தியமில்லை. இந்தத் தனிமைக்குப் பயந்துதான் பல வயோதிகர்கள் அவமானங்களைச் சகித்துக் கொண்டு வாழப் பழகிவிடு கிறார்கள். குடும்பங்களில் குழந்தை கள் அளவுக்கு வயோதிகர்களும் வசையும் திட்டும் வாங்குவது அன்றாடமாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்வுக்கான போராட்டம் சிக்கலாகத் துவங்கியதும் உறவுகளும் நம்மைச் சுற்றிய மனிதர்களுடன் உள்ள நெருக்கமும் சிக்கலாகிவிடு கின்றன. இதைத் தனது கதையன்றின் மூலம் மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் தமயந்தி. இவரது Ôஅனல்மின் நிலையங்கள்Õ என்னும் கதை குடும்ப உறவுகளின் உண்மையான முகங்களை வெளிப்படுத்துகிறது. தமயந்தி, 15 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து எழுதிவரும் தீவிர படைப்பாளி. இவரது கதைகள் உழைக்கும் பெண்களின் போராட்டங் களைப் பிரதிபலிக்கின்றன. சுய அடையாளமற்றவளாக பெண் நடத்தப்படுவதைச் சகித்துக்கொள்ள மறுக்கும் எதிர்ப்புக் குரல் இவர் கதைகளின் அடிநாதமாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;‘அனல் மின் நிலையங்கள்’ கதை ஒரு மீனவக் குடும்பத்தின் வாழ்க்கைப் பாட்டினை விவரிக்கிறது. குறிப்பாக, தூத்துக்குடி கடற்கரையில் உருவாக்கப் பட்ட அனல்மின் நிலையத்தின் காரண மாக அங்குள்ள மீன்பிடித் தொழில் எப்படி மறைமுகமாகப் பாதிக்கப் பட்டுள்ளது என்பதைப் பற்றியகதை.&lt;br /&gt;&lt;br /&gt;கடலில் ஆஷ்டைக் எனப்படும் சாம்பல் களம் அமைக்கப்பட்டு அதன் வழியாக அனல் மின் நிலையத்தின் கழிவு நீர் கடலில் கலந்துவிட ஏற்பாடு செய்யப்படுகிறது. அதன் காரணமாக சாம்பல் கற்கள் பாறை போலாகி இறுக்கமாகிவிடு கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கழிவின் பாதிப்பால் இனப்பெருக்கமற்று மீன்கள் குறைந்தும் அழிந்தும் போய்விடு கின்றன. இதனால் அவர்களின் பிரதான மீன் பிடிப்பாக இருந்த சிங்கரால் பிடிப்பு அறவே பாதிக்கப் பட்டுவிடுகிறது. அப்படி பாதிக்கப் படும் ஒரு மீனவன்தான் செபஸ்தியான். அவனுடைய தாய்க்கு முன்பு போல வீட்டில் வளமை இல்லை என்ற குறைபாடு இருந்துகொண்டே இருக்கிறது. இதனால் அவள் தினமும் செபஸ்தியானின் மனைவி கிரேஸோடு சண்டையிட்டுக் கொண்டு இருக்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் கிரேஸின் அண்ணன் விருந்தாளியாக வருகிறான். அன்றும் அந்தச் சண்டை நீள்கிறது. இனிமேல் கிழவியை தங்களோடு வைத்துச் சமாளிக்க முடியாது என்று கிரேஸ் அழுது கூப்பாடு போடுகிறாள். வழியில்லாமல் செபஸ்தியான் அம்மாவைத் தன் அண்ணன் வீட்டில் கொண்டு போய் விட்டுவிடலாம் என்று முடிவு செய்கிறான். ஆனால், அம்மா போக மறுக்கிறாள். கட்டயாப்படுத்தி விருதுநகரில் உள்ள அண்ணன் வீட்டுக்கு கூட்டிப் போகிறான் செபஸ்தியான்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே அவன் மதினி அவர்களை வீட்டுக்குள்ளேயே விட மறுக்கிறாள். என்ன செய்வது என்று மறுபடியும் அம்மாவைத் தன் வீட்டுக்கே அழைத்து வருவதற்காக பஸ் ஏறிக் கூட்டி வருகிறான். வழியில் அம்மாவின் பசிக்குத் தேவையான பிஸ்கட்டும் டீயும் வாங்கித் தருகிறான். பஸ் கோவில்பட்டிக்கு வந்து சேர்கிறது. அங்கே பஸ் ஸ்டாண்டில் அம்மாவைத் தனியே உட்கார வைத்துவிட்டு, தூத்துக்குடி பஸ் இருக்கிறதா என்று பார்த்து வருவதாகச் சொல்லி, புறப்பட்டுக் கொண்டு இருக்கும் ஒரு தூத்துக்குடி பஸ்ஸில் ஏறி அவளுக்குத் தெரியாமல் ஊருக்கு கிளம்பிவிடு கிறான் செபஸ்தியான் என்பதோடு கதை முடிந்து விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பயன்படுத்தி எறிந்த காலி டப்பாக்கள், பழைய காகிதங்களுக்குக்கூட ஏதோ ஒரு விலை, மதிப்பு இருக்கிறது. ஆனால், வயோதிகத்துக்கு அந்த மதிப்புகூட இல்லாமல் போய்விட்டிருக்கிறது. காலம் வயோதிகத் தின் பட்டியலில் நம் பெயரையும் ஒரு நாள் எழுதும் என்பதை நாம் மறந்துவிடுவதுதான் காரணமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கில இலக்கி யத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள தமயந்தி, திருநெல்வேலிக்காரர். இவருடைய முதல் கதை 1978&amp;amp;ல் ஆனந்த விகடனில்வெளி யானது. தமயந்தி சிறுகதைகள் என்பது இவரதுமுதல் சிறுகதைத் தொகுப்பு, அக்கக்கா குருவிகள் என்கிறஇவரது சிறுகதைத் தொகுப்பு மிகவும் முக்கியமானது. தற்போது இவர் திருநெல்வேலியில் சூரியன் எஃப்.எம் வானொலியில் பணியாற்றி வருகிறார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14025163-115651547888356320?l=e-arc.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://e-arc.blogspot.com/feeds/115651547888356320/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14025163&amp;postID=115651547888356320' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14025163/posts/default/115651547888356320'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14025163/posts/default/115651547888356320'/><link rel='alternate' type='text/html' href='http://e-arc.blogspot.com/2005/06/blog-post_115651547888356320.html' title='தமயந்தி'/><author><name>Chandramukhi</name><uri>http://www.blogger.com/profile/16507154480362737534</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14025163.post-115651541722219817</id><published>2005-06-29T07:16:00.000-07:00</published><updated>2006-08-25T07:16:57.226-07:00</updated><title type='text'>கோணங்கி</title><content type='html'>http://www.vikatan.com/av/2005/sep/04092005/av0602.asp&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.ராமகிருஷ்ணன்&lt;br /&gt;&lt;br /&gt;புகை நடுவில்&lt;br /&gt;&lt;br /&gt;பின்னிரவில் பெய்யும் மழையை படுக்கையில் இருந்தபடியே கேட்டுக்கொண்டிருக்க மட்டும்தான் முடியும். வெளியில் எழுந்து போய்க் காண முடியாது. எப்போதாவது உறக்கத்திலிருந்து எழுந்து பால்கனியில் வந்து நின்றால், இருளைக் கரைத்துக்கொண்டு யாருமற்ற தெருவில் மழை தனியே நடந்துபோய்க்கொண்டு இருக்கும் அபூர்வ காட்சியைக் காண முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;பால்யத்தின் பொழுதுகளும் பின்னிரவு மழைக் காட்சிகள்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென, எப்போதோ உடன்படித்த சிறுவர்களின் முகம் கனவில் ததும்பத் துவங்குகிறது. பெயர்கூட மறந்துபோன வகுப்புத் தோழன், காக்கி டிராயரும் வெள்ளைச் சட்டையும் திருநீறு பூசிய முகமுமாய் கனவின் படிகளில் வந்து அமர்ந்திருக்கிறான். என்ன சொல்வ தற்காக அவன் கனவில் பிரவேசிக்கிறான் என்று தெரியாது. ஆனால், அடுத்த நாள் முழுவதும் மனம் பிரிவின் துக்கத்தில் ஊறிக்கொண்டே இருக்கும். ஏதேதோ நகரங்களில் சுற்றியலையும்போது, இது போன்று வெவ்வேறு வயதில் நடந்தவை கனவுகளாக வந்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஆண்டின் மழைக்காலத்தில் மதிய பொழுதில் எனக்கொரு போன் வந்தது. போனில் பேசிய பெண் மிகவும் தயக்கமான குரலில், நான் எஸ்.ராமகிருஷ்ணன் தானா என்று நாலைந்து முறை கேட்டு ஊர்ஜிதப்படுத்திக்கொண்டாள்.அவள் பெயர் சித்ரா என்றும், என்னோடு பள்ளியில் படித்தவள் என்றும் அவள் நினைவுகூர்ந்தபோதும் அவளது முகத்தை என்னால் நினைவு படுத்திப் பார்க்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் திருத்தணியில் வசிப்பதாகவும் என்னைச் சந்திக்க வேண்டும் என்றும் சொன்னாள். எப்போது வேண்டு மானாலும் வரலாம் என்று சொல்லிய பிறகு, ‘எனக்கு ஒரு உதவி செய்யணும். உன்னால முடிஞ்சா நீ செய்வாயா?’ என்று மிக உரிமையுடன் கேட்டாள். ‘கட்டாயம் செய்கிறேன்’ என்று அவளை வீட்டுக்கு வருமாறு அழைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று மாலையில், அவள் தன் இருபது வயது மகனை அழைத்துக் கொண்டு வந்திருந்தாள். நேரில் பார்த்தபோதும், மனதில் அதற்கு முன்பு அவளை பார்த்திருந்த நினைவின் அடையாளங்களே இல்லை. அவளின் தலை பாதி நரைத்துப் போயிருந்தது. முகத்துக்குப் பொருந்தாத கண்ணாடி அணிந்திருந்தாள். ஏதோ நேற்றுதான் பள்ளியிலிருந்து பிரிந்து சென்றதைப் போல, கடகடவென ஏதோ கேட்கத் தொடங்கினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் எந்த வகுப்பில் எப்போது படித்திருப்பாள் என்று நானாக நினைவில் தேடிக் கொண்டேயிருந்தேன். சில நேரம் அவள் பரிச்சயமானவள் போல் தோன்றினாள். சில வேளை யோசிக்கையில் முற்றிலும் அறியாதவளாக இருந்தாள். அவளின் மகன், விருப்பமில்லாத ஒரு இடத்துக்குத் தன்னை அழைத்துக் கொண்டு வந்திருப்பதைப் போல தலைகவிழ்ந்தபடியே உட்கார்ந்திருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவளது கையில் சிறிய மஞ்சள் பை இருந்தது. அவள், தான் காதிகிராஃப்டில் வேலை செய்வதாகவும், தனக்கு மூன்று குழந்தைகள், இரண்டு பெண்கள், இவன் ஒருவன் மட்டும்தான் பையன் என்றும், அவளின் கணவன் அம்பத்தூரில் வெல்டராக வேலை பார்ப்பதாக வும் சொன்னாள். இரண்டு நிமிஷங் களுக்கு ஒரு முறை, அடுத்து என்ன பேசுவது என்று தெரியாத புகை மூட்டம் உருவானது.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு, அவள் தன் பையில் இருந்து திருமண அழைப்பிதழ் ஒன்றை எடுத்து கையோடு கொண்டு வந்திருந்த சிறிய தட்டில் வைத்து, தன் மகளுக்குத் திருமணம் என்று சொல்லி நீட்டினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் திருமணப் பத்திரிகையை வாங்கிப் பிரித்துக்கொண்டு இருந்த போது அவள் தயக்கத்தோடு திரும்பவும் கேட்டாள்... ‘‘உன்கிட்டே ஒரு உதவி கேட்கணும்னு சொன்னேனில்லே... கேட்கக் கூச்சமா இருக்கு’’ என்றாள். ‘‘பரவாயில்லை, சொல்லு!’’ என்றதும், வார்த்தைகளை மென்று விழுங்கிய படியே சொன்னாள்... ÔÔஎன் பொண்ணு கல்யாணத்துக்கு நாலு பேர்கிட்டே தானம் கேட்டு பணம் வாங்கி தாலி செய்றேன்னு கோயில்ல வேண்டிட்டு இருக்கேன். அவளுக்குக் கல்யாண தோஷம். அதுக்குத்தான் இந்த வேண்டு தல். ஆறாயிரம் ரூபாய் வேணும். சொந்தக்காரங்க யார்கிட்டேயும் கேட்டு வாங்கக் கூடாது. எனக்கு ஃப்ரெண்ட்ஸ்னு யாரு இருக்கா... அப்போதான் உன் நினைப்பு வந்துச்சு. சரி, கேட்டுப் பார்க்க லாமேனு உன் போன் நம்பரை பத்திரிகை ஆபீஸ்ல கேட்டு வாங்கினேன்!ÕÕ&lt;br /&gt;&lt;br /&gt;‘‘அதனால என்ன... நான் தருகிறேன்’’ என்று சொன்னதும் அவள் முகத்தில் லேசான வெட்க மும், சந்தோஷமும் துளிர்த்தது. என்னுடைய அறையில் இருந்த புத்தகங்களை வேடிக்கை பார்த்தபடி இருந்தவள், ‘‘எப்பவும் புத்தகம் படிச்சுட்டே இருப்பியா?’’ என்று கேட்டாள். நான் இல்லை என்று தலையாட்டினேன். பிறகு, அவளுக்கும் என்னிடம் பேசுவதற்கு வார்த்தைகள் அற்றுப் போனதைப் போல மௌனமாக என்னைப் பார்த்துச் சிரிக்கத் தொடங்கினாள். அந்த சிரிப்பின் நுனியில் சொல்ல முடியாத வேதனை படிந்திருப்பதைக் காண முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பர்ஸிலிருந்து பணத்தை எடுத்து அவளிடம் தந்தபோது அவள் கைகள் லேசாக நடுங்குவதைக் கவனித்தேன். நான் கட்டாயம் திருமணத்துக்கு வர வேண்டும் என்று நாலைந்து முறை கேட்டுக் கொண்டாள். பிறகு அவள் பையில் இருந்து பழைய புகைப்படம் ஒன்றை எடுத்து என்னிடம் நீட்டினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அது 1979&amp;ல் திருப்பத்தூரில் உள்ள ஒரு பள்ளியில் எடுக்கப்பட்ட புகைப்படம். அந்த போட்டோவில் இரண்டாவது வரிசையில் நிற்கும் சிறுவனைக் காட்டி, ‘‘நீ எப்படி இருந் திருக்கே, பாரு’’ என்றாள். நான் மௌனமாகச் சிரித் துக்கொண்டேன். ‘‘இந்த போட்டோ வில் நான் எங்கே இருக்கேன் என்று உன்னால் சொல்ல முடிகிறதா?’’ என்று கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் தயக்கத் துடன் சொன்னேன்... ‘‘திருப்பத்தூரில் நான் படித்ததே இல்லை. இந்த போட்டோவில் இருப்பது நான் இல்லை.’’ அவள் முகம் சட்டென மாறியது. பதற்றம் அடைந்தவள் போல சொன்னாள்... ‘‘இல்லை, எனக்கு நல்லா ஞாபகமிருக்கு. திருப்பத்தூர்ல கோயில் பக்கம் உங்க வீடு இருந்தது. உங்க அக்கா பேருகூட சுந்தரிதானே?’’&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. எனக்கு அக்காவே கிடையாது; வேறு யாரையோ நினைத் துக்கொண்டு பேசு வதாகச் சொன்னேன். அவள் என்ன செய்வதெனத் தெரியாமல், ‘‘பேருகூட ராமகிருஷ்ணன்னு போட்டிருக்கு’’ என்றாள். ‘‘அது நானில்லை’’ என்று உறுதியாகச் சொன்னதும், அவள் சேலை நுனியால் தனது முகத்தைத் துடைத்துக் கொண்டவளாக,&lt;br /&gt;&lt;br /&gt;‘‘அப்போ அது வேறு யாரோவா? ஸாரி சார்! என்கூடப் படிச்சவர்னு நினைச்சுத் தப்புப் பண்ணிட்டேன்!’’ என்றபடி மஞ்சள் பைக்குள் போட்டிருந்த பணத்தை அவசரமாக எடுத்து என்னிடமே திரும்பக் கொடுத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘பரவாயில்லை, வெச்சுக்கோங்க’’ என்றபோதும் கேட்க வில்லை. ‘‘இல்லை சார்! உங்க போட்டோவைப் பார்த்தப்ப தெரிஞ்ச முகம் மாதிரி இருந்துச்சு. நான் ஏமாத்தணும்னு செய்யலை. என்னை மன்னிச்சிருங்க’’ என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் பணத்தை வாங்க மறுத்தவனாக, ‘‘அதனால் என்ன, இப்போயிருந்து நாம ஃப்ரெண்டாக ஆகிக்கொள்ளலாம் தானே?’’ என்றேன். அவளால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தரையை வெறித்துப் பார்த்தபடி இருந்தவள், பணத்தை எனது மேஜையில் வைத்துவிட்டு, அதன் மேல் ஒரு புத்தகத்தை எடுத்து வைத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘உங்களோட படிக்காம போனதுக்காக நான் உண்மையில் இப்போதான் வருத்தப்படுறேன்’’ என்றேன். கைகளைப் பிசைந்துகொண்டே இருந்தவள், பிறகு அந்தப் பள்ளிக்கூட புகைப்படத்தை வாங்கிக்கொண்டு, தான் புறப்படுவதாகக் கிளம்பினாள். எப்படி அவளைச் சமாதானம் செய்வது என்று தெரிய வில்லை. வாசல் வரை போனவள் திரும்பவும் உள்ளே வந்து, ‘‘என்னை மன்னிச்சிடுங்க சார்! உங்களைச் சிரமப் படுத்திட்டேன். நீங்க கல்யாணத்துக்கு அவசியம் வரணும்’’ என்று சொல்லியபடி விடுவிடுவென நடந்து போனாள். அவளோடு படிக்கவில்லை என்ற உண்மையை எதற்காகச் சொன்னேன் என்று என் மீதே கோபமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பால்யத்தின் புகைமூட்டத்தில் நாம காண்பது எல்லாம் அழிந்த சித்திரங்கள் தானா? அந்தப் பெண்ணின் திருமணப் பத்திரிகையைப் பார்க்கும்போதெல்லாம் குற்ற உணர்ச்சி மேலோங்கிக் கொண்டே இருந்தது. உலகில் மிகக் குறைவான நிமிடங்களில் தோன்றி மறைந்த நட்பு இதுவாகத்தான் இருக்கக் கூடுமோ? என்ன உறவு இது!&lt;br /&gt;&lt;br /&gt;பால்யத்தின் அழியாத சித்திரங்களை தனது கதைகள் எங்கும் படரவிட்ட தமிழின் அரிய கதைசொல்லி ‘கோணங்கி’. அவரது கோப்பம்மாள் என்ற கதை மிக நுட்பமாகவும் கவித்துவமாகவும் எழுதப்பட்ட அரிய கதையாகும். நவீன தமிழ் இலக்கிய உலகில் மிகவும் முக்கியமான சிறுகதையாசிரியரான கோணங்கி, தனக்கென தனியான புனைவுலகை உருவாக்கியவர்.&lt;br /&gt;&lt;br /&gt;கோப்பம்மாள் என்ற சலவைத் தொழிலாளி வீட்டுச் சிறுமியின் வாழ்வை விவரிக்கிறது இக்கதை. கோப்பம்மாளுக்குப் பள்ளிப் படிப்பைவிடவும் வீட்டு வேலைகள் அதிகம் இருந்தன. வீடு வீடாகப் போய் ஊர்க்கஞ்சி எடுக்க வேண்டும். தெருவில் திரியும் கழுதைகளை வீடு கொண்டு வந்து சேர்க்க வேண்டும். பள்ளிக்குப் போகும்போது கூடவே தம்பியைத் தூக்கிக்கொண்டு போக வேண்டும். அவனோ பள்ளியில் ஆய் இருந்து வைத்துவிடுவான். அதற்காகத் தினமும் வாத்தியாரிடமும் கோப்பம்மாள் அடிபட நேரிடும். இப்படியிருந்த அவளது வாழ்வில், அவளோடு படிக்கும் மாரியப்பன் என்ற சிறுவன் மட்டுமே மிக நட்பாக இருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனையும் கோப்பம்மாளையும் ஒரு நாள் சீருடை அணிந்து வராததற்காக ஆசிரியர் வகுப்பை விட்டு வெளியேற்றி விடுகிறார். தன்னிடம் ஊதாச் சட்டைகளைத் தவிர வேறு சட்டைகளே இல்லை, அந்தச் சட்டைகளும்கூட, இறந்துபோன தனது அய்யாவின் சட்டையை வெட்டித் தைத்தவைதான் என்கிறான் மாரியப்பன். அதிலிருந்து இருவருக்குள்ளும் பெயர் தெரியாத சிநேகம் ஒன்று ஏற்பட்டுவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் வீடு வீடாகப்போய் ஊர்க்கஞ்சி வாங்கி வரும்போது, அதில் ஒரு கவளம் அள்ளி உண்பான் மாரியப்பன். அதை ரசித்தபடியே கோப்பம்மாளே இன்னொரு கவளம் அள்ளித் தருவாள். இப்படியிருந்த அவள், ஒரு நாள் ருதுவாகிறாள். அது முதல் அவள் வெளியே வருவது இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மாரியப்பனும் படிப்பைத் துறந்து ஆடு மேய்க்கப் போய்விடுகிறான். அதன்பிறகு கோப்பம்மாளுக்குப் பதில் அவளது அம்மா கஞ்சி எடுக்க வருகிறாள். கோப்பம்மாளைப் பார்ப்பதே அரிதாகிவிடுகிறது. பின்னொரு நாள் அவளைப் பெண் கேட்டு தெற்கிலிருந்து ஆள் வருகிறார்கள். ஊரைவிட்டுப் போவதற்குள் ஒரு தடவையாவது மாரி யப்பனைப் பார்க்க வேண்டும் என்று கோப்பம்மாள் ஆசைப்படுகிறாள். ஆனால், பார்க்க முடியவேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;என்றோ துவைப்பதற்காக எடுத்து வைத்திருந்த மாரியப்பனின் பழைய ஊதா சட்டை மட்டும் கந்தல் கந்தலாகி அழுக்கு மூடடையில் கிடக்கிறது. உப்பரித்துப்போன அந்தச் சட்டையை மார்போடு அணைத்துக்கொண்டு யாரும் கேட்டுவிடாமல் கேவிக் கேவி அழுகிறாள் கோப்பமாள். பிறகு திருமணம் முடிந்து போகும்போது, கொண்டு போகவேண்டிய மஞ்சள் பையில், அந்த ஊதா சட்டையையும் எடுத்து வைத்துக்கொள்கிறாள். அதை இருள்பூச்சிகள் பார்த்தபடி சத்தமிட்டுக் கொண்டிருப்பதோடு கதை முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பிராயத்தின் நினைவுகள் மழை விட்டும் மரக்கிளைகளில் இருந்து சொட்டிக்கொண்டு இருக்கும் மழை நீரைப்போல உதிர்ந்துகொண்டுதான் இருக்கும்போலும்! என்னோடு படிக் காமலே எனக்கு மிகவும் நெருக்க மாகிப்போன சித்ராவின் நட்புக்காக இப்போதும் மனதில் மெல்லிய ஏக்கம் படர்ந்துகொண்டுதான் இருக்கிறது. என்ன உறவில் அவளோடு நான் பேசுவது என்றுதான் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் நவீன கதையுலகின் தனித்துவமான குரல் கோணங்கி யுடையது. கவிதைக்கு மிக நெருக்க மாக உள்ள உரைநடையும், அரூபங்களைமொழியில் சாத்திய மாக்கிக் காட்டும் விந்தையும் கொண்டது இவரது கதையுலகம். கல்குதிரை என்ற சிற்றிதழின் ஆசிரியர்.&lt;br /&gt;&lt;br /&gt;மதினிமார்களின் கதை, கொல்லனின் ஆறு பெண் மக்கள், பொம்மைகள் உடைபடும் நகரம், பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம் போன்ற சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவரது பாழி, பிதுரா என்ற இரண்டு நாவல்களும் தமிழ் நாவலுக்கென்ற மரபான தளங்களை தவிர்த்து, புதிய கதை சொல்லும் முறையில் எழுதப்பட்டு மிகுந்த கவனம் பெற்றவை.&lt;br /&gt;&lt;br /&gt;47 வயதாகும் முழுநேர எழுத்தாளரான கோணங்கியின் இயற்பெயர் இளங்கோ. தற்போது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வசிக்கிறார். சுதந்திர போரட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மதுரகவி பாஸ்கரதாசின் பேரன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14025163-115651541722219817?l=e-arc.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://e-arc.blogspot.com/feeds/115651541722219817/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14025163&amp;postID=115651541722219817' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14025163/posts/default/115651541722219817'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14025163/posts/default/115651541722219817'/><link rel='alternate' type='text/html' href='http://e-arc.blogspot.com/2005/06/blog-post_115651541722219817.html' title='கோணங்கி'/><author><name>Chandramukhi</name><uri>http://www.blogger.com/profile/16507154480362737534</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14025163.post-115651535987859696</id><published>2005-06-29T07:15:00.000-07:00</published><updated>2006-08-25T07:15:59.886-07:00</updated><title type='text'>கரிச்சான குஞ்சு</title><content type='html'>எஸ்.ராமகிருஷ்ணன்&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றிருந்த வீடு&lt;br /&gt;&lt;br /&gt;வங்கியில் பணிபுரியும் என் நண்பர் சரவணன், கிழக்குத் தாம்பரத்தின் உள்ளே ஓர் இடம் வாங்கி, புதிதாக வீடு கட்டியிருந்தார். வழக்கமாக புதிய வீடு கட்டிக் கிரகப்பிரவேசம் செய்பவர்கள் காலையில்தான் விழா நடத்துவார்கள். ஆனால், சரவணன் யாவரையும் மாலையில் தனது வீட்டுக்கு அழைத்திருந்தார். நான்கு படுக்கையறைகள் கொண்ட வீடு. வீட்டின் வெளியே, சிறிய தோட்டம் அமைப்பதற்காக இடம் விட்டிருந்தார்கள். விருந்தினர்களுக்காக இரவு உணவு, ஒரு பக்கம் தயாராகிக்கொண்டு இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டைச் சுற்றிக் காட்டும்போதே, இருட்டத் தொடங்கியிருந்தது. வீட்டில் ஒவ்வொரு அறையிலும் விதவிதமான விளக்குகள். ஒரு அறையில் பெரிய லாந்தர் விளக்கு தொங்கிக்கொண்டு இருந்தது. சுவர்களில் நவீன டியூப்லைட்கள். போதாததற்கு சிறியதான மெர்க்குரி விளக்குகள். வெளிச்சம் ஒரு நீருற்று போல வீடெங்கும் பொங்கிக்கொண்டு இருந்தது. வீட்டின் வெளியிலும் நான்கு மூலைகளிலும் டியூப் லைட்டுகள். ஏன் இத்தனை விளக்குகள் என்று எண்ணும்படி அவை அமைக்கப் பட்டு இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;சரவணன் அதைக் கவனித்தவர் போலச் சொன்னார்... ‘Ôவீட்ல மொத்தம் நாற்பத்தெட்டு லைட் போட்டிருக்கேன் சார். ராத்திரியானா மொத்த லைட்டையும் எரியவிட்றணும். விடிய விடிய எரியட்டும். வீடு எப்பவும் வெளிச்சமா இருக்கணும்...’’&lt;br /&gt;&lt;br /&gt;நான் வேடிக்கையாகக் கேட்டேன்... ‘Ôதூங்கும்போதுகூட விளக்கை அணைக்கமாட்டீர்களா?’Õ&lt;br /&gt;&lt;br /&gt;அவர் தலையசைத்தபடியே சொன்னார்... ‘Ôபத்து வருஷமா நான் தூங்கும்போதுகூட லைட் எரிஞ்சுகிட்டேதான் இருக்கும். இல்லைன்னா பயமா இருக்குது.’’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு குழந்தையைப் போல பேசுகிறாரே என்று தோன்றியது. வீட்டைப் பார்க்க வந்தவர்கள், வீட்டிலிருந்த விளக்குகளைப் பற்றி வியந்து பாராட்டிவிட்டுப் போனார்கள். அருமையான உணவுக்குப் பிறகு, நட்சத்திரங்கள் சிதறிக்கிடந்த வானத்தின் அடியில், நாங்கள் நாற்காலி போட்டு உட்கார்ந்துகொண்டோம். சரவணன், தான் கட்டிய வீட்டைத் தானே பார்த்துக் கொண்டு இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ÔÔஇந்த வீடு கட்ட ஆரம்பிச்ச அன்னியிலேர்ந்து தினம் இங்கே வந்து இதே இடத்தில் உட்கார்ந்து பார்த்துட்டேயிருப்பேன். பாதி கட்டி முடிஞ்சபோது சிமென்ட் பூசாத சுவரை தடவிக் கொடுப்பேன். சில நேரம் அந்த ஈர வாசனையை நுகர்ந்து கிட்டிருப்பேன். வீடு கட்டுறது ஒரு தனி யான அனுபவம். எத்தனையோ பிரச்னை, சிக்கல்னு வந்தாலும் கண்ணு முன்னாடி வீடு கொஞ்சம் கொஞ்சமா வளர்றதைப் பாக்குறது தனி சுகம்!&lt;br /&gt;&lt;br /&gt;கதவில்லா வீட்டைப் பாக்கும்போது அது நம்ம தோள் மேல கை போட்டு நின்னு பேசிட்டிருக்கிற மாதிரி ஒரு நெருக்கம் வந்திடும். ஒவ்வொரு புது வீடு கட்றதுக்கு பின்னாடியும் கண்ணுக் குத் தெரியாத எத்தனையோ அவமான மும் ரணமும் இருக்கத்தான் செய்யுது.&lt;br /&gt;&lt;br /&gt;வீடு கட்டி முடிச்சு, கதவு ஜன்னல் எல்லாம் பொருத்தி வெச்ச அன்னிக்கு கை நடுங்குது. கரகரனு கண்ணுல தண்ணி கொட்டிருச்சு. நிஜமா அழுதுட் டேன். வீடு வெறும் இடம் இல்லை. ‘நான் தோத்துப்போகலை. நல்லாதான் வாழறேன்’னு காட்ற சாட்சி அது.&lt;br /&gt;&lt;br /&gt;மதுரைல நாங்க வாழ்ந்த வீட்டை, கடன் வாங்குறதுக்காக அப்பா அடமானம் வெச்சுட்டாரு. வட்டி கட்ட முடியலைனு வீட்டு கரன்ட்டை கட் பண்ணிட்டாங்க. எல்லாரும் பள்ளிக்கூடத்தில் படிக்கிற வயசு. வீட்ல பகல்லயே குண்டு பல்பு எரிஞ்சா தான் வெளிச்சம் வரும். கரன்ட் போனதில் இருந்து, வீட்ல எப்பவும் இருட்டுதான். எங்கம்மா ஆத்திரத்தில், கெரசின் விளக்குகூட வைக்கக் கூடாதுனு பிடிவாதமா இருந்தாள். இருட்டுலியேதான் சாப்பிடுவோம். இருட்டுலியேதான் படுத்துக்குவோம். தினம் ராத்திரில யாராவது அழுகிற சத்தம் கேட்கும்.. அக்காவா, அண்ணனா, அண்ணியா, அம்மாவானு முகம் தெரியாது. இருட்டு எங்களைக் கொஞ்சம் கொஞ்சமா தின்னுகிட்டே இருந்துச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;கடன் தொல்லை தாங்க முடியாம அப்பா வீட்டைவிட்டு ஓடிப் போயிட் டாரு. வீட்டை வித்துட்டுப் புறப்பட லாம்னு நினைச்சாக்கூட கடன்ல இருந்து தப்ப முடியாதுனு தெரிஞ்சுபோச்சு. வேற வழியில்லாம ராத்திரியோட ராத்திரியா யாருக்கும் தெரியாம, கொஞ்சம் துணியை மட்டும் எடுத்துக்கிட்டு வீட்டை அப்படியே சாமான்களோட விட்டுட்டு மெட்ராஸ§க்கு வந்துட் டோம். முப்பது வருஷமாச்சு! ஒரு தடவைகூட எங்க வீடு என்ன ஆச்சுனு பாக்கப் போகவே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நடுவுல ஒரு தடவை எங்க அண்ணன் மட்டும் போய்ப் பாத்துட்டு வந்தான். ‘வீட்டை இடிச்சு அந்த இடத்தில் பெரிய செருப்பு கடை வந்திருச்சு’ன்னு சொன்னான். வீட்டை இடிக்கிறப்போ எங்க சாமான்களை எல்லாம் அள்ளி தெருவில் போட்டாங்களாம். அந்த நாற்காலியை ஆயிரம் ரூபாய் கொடுத்து அண்ணன் வாங்கிட்டு வந்தான். அதைப் பாக்கப் பாக்க ரெண்டு நாளைக்கு யாருக்கும் சாப்பாடு இறங்கலை.&lt;br /&gt;&lt;br /&gt;எங்க எல்லோரோட உடம்புலயும் இருட்டு ஒட்டிக்கிட்டே இருக்கிற மாதிரிதான் இருக்கு. எப்படியோ வேலை செஞ்சு மேலே வந்துட்டோம். இப்போ அண்ணன் பெங்களூர்ல வீடு கட்டியிருக்கான். அக்கா காஞ்சிபுரத்துல இருக்கா. அவளும் பெருசா வீடு கட்டிட்டா. நான்தான் பாக்கி. நானும் இப்போ வீடு கட்டிட்டேன். சொல்லுங்க சார், இருட்டுலியே சாப்பிட்டு இருட்டுலியே முகம் கழுவி வாழ்ந்ததை மறக்க முடியுமா?’’&lt;br /&gt;&lt;br /&gt;வானில் இருந்த நட்சத் திரங்கள் ஒடுங்கியிருந்தன. சரவணன் வீட்டின் பிரகாச மான வெளிச்சத்தைக் காணும் போது விளக்கிச் சொல்ல முடியாத வேதனை என் உடலைக் கவ்வுவதாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வர்ணம் பூசப்பட்டு ஒளிரும் வீடுகளுக்குப் பின்னால் கறுப்பும் வெளுப்புமான கதைகள் ஒளிந்திருப்பதுதான் வாழ்வு சொல்லும் நிஜம் போலும்! கூடாரத்தைத் தூக்கிக் கொண்டு ஆட்டு இடையர்கள் ஊர் ஊராகப் போவது போல நகர வாழ்வில் வீடு மாற்றி வீடு என்று அலைபவர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டை உருவாக்கிக்கொள்வது எளிதானதில்லை. அது நீண்ட கனவு. சிலருக்குச் சில வருடத்தில் அது சாத்தியமாகிறது. பலருக்கு அது எட்டாக்கனவாகவே எஞ்சி விடுகிறது. மகாகவி பாரதிகூட காணி நிலத்தில் அழகிய தூண்கள் கொண்ட வீடு கட்டி வாழ்வதற்கு தானே ஆசைப்பட்டிருக்கிறான்!&lt;br /&gt;&lt;br /&gt;வீடு பறிபோவதுதான் வாழ்வு நசிவதற்கான முதல் அடையாளம். எத்தனை கடன்கள் இருந்தாலும் வீடு இருக்கும் வரை யாவும் திரும்ப கிடைத்து விடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. வீட்டை இழந்த பிறகு வாழ்வில் மிஞ்சுவதெல்லாம் போக்கிடமற்ற தனிமையும் அவமானமும்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய அவமானத்திலிருந்து மீள முடியாத மனிதன் மூர்க்கமாகி விடுகிறான்; அல்லது, புத்தி பேதலித்து விடுகிறான். இந்த நிகழ்வுக்கு சாட்சி சொல்வது போலிருக்கிறது ‘கரிச்சான குஞ்சு’வின் ரத்த சுவை என்கிற கதை. சம்ஸ்கிருதத்தில் ஆழ்ந்த புலமை கொண்ட கரிச்சான் குஞ்சு, மிகக் குறை வாகவே தமிழில் எழுதியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ராமு என்பவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று கேள்விப்பட்டு அவனைக் காண்பதற்காகச் செல்லும் அவனது நண்பரின் பார்வையில் கதை சொல்லப்படுகிறது. ஊரில் சுற்றித் திரியும் மூர்க்கமான குரங்கு ஒன்றை வேடிக்கை பார்த்துக்கொண்டு குரங்கு போகும் இடங்களுக்கெல்லாம் தானும் கூடவே அலைகிறான் ராமு.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் குடும்பம், கடன் தொல்லை யால் வீட்டை இழந்து நொடித்துவிட்டது. வீட்டை காலி செய்வதற்கு கோர்ட் இரண்டு மாத காலம் அவகாசம் தந்திருக்கிறது. அந்த நிலையில்தான் ராமுவுக்கு புத்தி பேதலித்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ராமுவின் வீட்டைக் கடனுக்காக எழுதி வாங்கியவர் கோபாலய்யர். அவர் வேண்டும் என்றே வட்டியை அதிகமாக வாங்குவதற்காக பம்பாயில் இருக்கிற தன் தங்கையின் பெயரால் கடன் பத்திரம் எழுதித் தருகிறார். அதனால் ஒவ்வொரு முறை கடனை முடிக்கப் போகும்போதும் பத்திரம் தங்கையிடம் இருப்பதாகச் சொல்லி வட்டியை மட்டும் வசூல் செய்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சில வருடங்களில் வட்டி அதிகமாகி, கடனைக் கட்ட முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. அதனால் வீடு கடனில் மூழ்கிப் போய்விடுகிறது. அன்றிலிருந்து ராமு சித்தம் கலங்கிவிட்டது என்கிறார்கள் ஊர்க்காரர்கள். ராமுவைச் சந்தித்துப் பேசுகிறான் ஒரு நண்பன். ராமு தனக்கு உண்மையில் சித்தம் கலங்கிவிடவில்லை என்றும், ஒரு நாள் தான் ஒரு முரட்டுக் குரங்கைப் பார்த்தாகவும், அது ஒரு நாய்க்குட்டியைத் தூக்கிச் சென்று அதன் கழுத்தை நெரித்துக் கொன்று விட்டதாகவும், அப்போது குரங்கு தன் கையில் வழியும் நாயின் ரத்தத்தைச் சுவைத்துப் பார்க்கவே அந்த ரத்த ருசி அதற்குப் பிடித்துவிட, அன்றிலிருந்து அது மாமிச பட்சிணியாக மாறி விட்டதாகவும் சொல்கிறான். அதைக் கேட்ட நண்பன், ‘‘குரங்கு அப்படியானதில் உனக்கு என்ன பிரச்னை?’’ என்று கேட்க, ‘‘தாவர பட்சிணியான குரங்குகூட ரத்த சுவைக்குப் பழகி, மாமிசபட்சிணியாக மாறிவிடு வதைப் போன்றதுதான் கோபாலய்யர் வேலையும். அவர் கடன் கொடுக்கத் தொடங்கி அதுவே பின்பு வட்டித் தொழிலாகி இன்று ரத்தம் குடிக்கப் பழகிவிட்டார். நான் கோபாலய்யரின் பின்னால் அலைவது போல நினைத்துக்கொண்டுதான் குரங்கின் பின்னால் அலைகி றேன். அது என்ன செய்யும் என்று எனக்குப் புரியவே இல்லை’’ என்கிறான் ராமு.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போதே அந்த முரட்டுக் குரங்கு இன்னொரு குரங்காட்டி கொண்டு வந்திருந்த பெண் குரங்கு ஒன்றைத் தூக்கிக் கொண்டு போய் அதையும் கொன்று விடுகிறது. குரங் காட்டி முரட்டுக் குரங்கை சுருக்குப் போட்டுப் பிடித்துவிடு கிறான். ஆனால், ஊர்க்காரர்கள் அது தெய்வாம் சம் கொண்டது என்று விட்டு விடச் சொல் கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;குரங்காட்டி விட மறுக்கவே அவனை அடித் துப் போட்டு விட்டு குரங்கை அவிழ்த்து விடுகிறார்கள். கோபாலய்யரும் குரங்கும் ஒன்று தான் என்று தெரிந்ததால் தானோ என்னவோ ராமு குரங்கைப் பார்த் துக்கொண்டே இருக்கிறான். ஊர்க்காரர்கள் அவனைப் பைத்தியம் என்று சொல்கிறார்கள் என்பதோடு கதை முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ருஷ்ய விவசாயி கள், புதுமனை புகுவிழா நாளில், வீடு ஒரு விருட்சத் தைப் போல நன்றாக வேர்விட்டு மண்ணை இறுக்க மாகப் பற்றிக் கொள்ளட்டும் என்று வாழ்த்து வார்களாம். காற்றையும் வெளிச்சத்தையும் தனக்குள்ளாக வாங்கிக்கொண்டு வீடும் சதா எதையோ பாடிக் கொண்டுதான் இருக்கிறது. ஏனோ வீட்டின் பாடல், நம் செவிகளுக்குக் கேட்பதே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‘பசித்த மானுடம்’ என்ற அரிய நாவலை எழுதி, தமிழ் நாவல் உலகில் தனக்கெனத் தனி இடம் பிடித்தவர் கரிச்சான் குஞ்சு. தஞ்சை மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ள சேதின்புரத்தில் பிறந்த இவரது இயற்பெயர் நாராயணசாமி. இவரது நெருங்கிய நண்பர் எழுத்தாளர் கு.ப.ராஜ கோபாலன் ‘கரிச்சான்’ என்ற புனைபெயரில் எழுதியதன் நினைவாக, தன் பெயரை ‘கரிச்சான் குஞ்சு’ என்று மாற்றிக் கொண்டவர். இசையில் ஆழ்ந்த புலமை படைத் தவர். கும்பகோணத்தில் வாழ்ந்து மறைந்த இவர், இந்தியத் தத்துவங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; http://www.vikatan.com/av/2005/aug/28082005/av0602.asp&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14025163-115651535987859696?l=e-arc.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://e-arc.blogspot.com/feeds/115651535987859696/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14025163&amp;postID=115651535987859696' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14025163/posts/default/115651535987859696'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14025163/posts/default/115651535987859696'/><link rel='alternate' type='text/html' href='http://e-arc.blogspot.com/2005/06/blog-post_115651535987859696.html' title='கரிச்சான குஞ்சு'/><author><name>Chandramukhi</name><uri>http://www.blogger.com/profile/16507154480362737534</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14025163.post-115651513876445024</id><published>2005-06-29T07:12:00.000-07:00</published><updated>2006-08-25T07:15:22.156-07:00</updated><title type='text'>கிருஷ்ணன் நம்பி</title><content type='html'>மிதந்து செல்லும் கனவு&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.ராமகிருஷ்ணன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாலை நேரமொன்றில் புத்தம் புதிய எண்டோவர் காரை நாகேஸ்வரராவ் பார்க்கின் முன்னால் நிறுத்திவிட்டு, இருவர் உள்ளே இறங்கிச் செல்வதைப் பார்த்தேன். இரண்டு நிமிஷ நேரத்தில் புழுதி படிந்த வேஷ்டியும் அரைக்கை சட்டையும் அணிந்து கையில் வேர்க்கடலைப் பொட்டலத்துடன் வந்த ஒரு பெரியவர், அந்த காரின் அருகில் வந்து, எக்கி நின்றபடி உள்ளே எட்டிப் பார்த்தார். குனிந்து டயர்கள் எப்படி இருக்கின்றன என்றும் பார்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு, நீண்ட நாள் பரிச்சயமானவர் போல டிரைவர் முன்பு வேர்க்கடலைப் பொட்டலத்தை நீட்டியபடி, ‘வண்டி திருச்சி ரிஜிஸ்ட்ரேஷனா?’ என்று கேட்டார். டிரைவர் தலையாட்டினார். ‘வண்டியின் விலை என்ன? ஏ.சி. எப்படி வேலை செய்கிறது? பெட்ரோலா, டீசலா?’ என்று அடுத்தடுத்து கேட்டுக் கொண்டே இருந்தார். டிரைவர் சலிப்புற்றவராக, ‘நீங்கள்லாம் வாங்க முடியாது சார். எதுக்கு வீண் பேச்சு?’ என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதைக் கேட்டதும் பெரிய வருக்குக் கோபம் பொங்கிக்கொண்டு வந்தது. Ôஏன்... விலைக்கு வாங்காட்டா காரைப் பத்தித் தெரிஞ்சுக்கிடக் கூடாதா? உலகத்தில் இல்லாத அதிசயமான காரு பாரு... நான் ஒண் ணும் படிக்காத முட்டாள் இல்லை. நானும் பத்து கம்பெனில வேலை செஞ்சவன்தான். உனக்குத் தெரிஞ்சதைவிட எனக்கு அதிகம் காரைப் பத்தி தெரியும். தெரிஞ்சு என்ன செய்யப் போறேன்னு நினைக்கிறியா? தாஜ்மகாலை நமக்குப் பிடிக்கும். அதுக்காக அதை விலை கொடுத்தா வாங்குறோம். அதே மாதிரி எட்ட இருந்தே பாத்துட்டுப் போறேன்.’’&lt;br /&gt;&lt;br /&gt;டிரைவருக்குக் கோபம் அதிகமாகி இருக்க வேண்டும். ‘பொழுது போகலைனா என் உசிரை ஏன்யா எடுக்கிறே? வண்டியை தொடாமப் பேசு’ என்றார். பெரியவருக் கும் டிரைவருக்கும் பேச்சு முற்ற, பார்க்கில் என் எதிரில் அமர்ந்து ஏதோ படித்துக்கொண்டு இருந்த ஓர் இளைஞன், அவசரமாக வெளியே போய் அந்தப் பெரியவரை உள்ளே இழுத்து வந்தான். பூங்கா முழுவதும் அந்த நிகழ்ச்சியை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குள் வியர்வை வழிய நடைப் பயிற்சி முடித்துவிட்டு, காரின் உரிமை யாளர்கள் வெளியேற நடந்து வந்தார்கள். விருட்டென பெரியவர் எழுந்து அவர் களிடமே போய், ‘வண்டி ஆன் ரோடு என்ன விலையாகுது சார்?’ என்று கேட் டார். அவர்கள் முறைத்துப் பார்த்தபடி பதில் சொல்லாமல் போனார்கள். பையன் தலை கவிழ்ந்தபடி உட்கார்ந்து இருந்தான். பெரியவர் புல்தரையில் அமர்ந்து தனக்குத்தானே எதையோ பேசிக்கொண்டு இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த இளைஞன் என்னைப் பார்த்து சிரித்தான். Ôஅப்பா சார். அவருக்கு ஒரு சின்ன பிரச்னை’ என்றான். ‘அப்படியா’ என்று தலையாட்டினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;Ôஎதைப் பார்த்தாலும் அவருக்கு ஆசை சார். சிட்டியில ஓடுற கார், புதுசா கட்டுற பிளாட், நியூ மாடல் பைக் இப்படி எதைப் பார்த்தாலும் உடனே விலை விசாரிச்சு நூறு கேள்வி கேட்பாரு. அவ்வளவு ஏன்... அண்ணா நகர்ல புதுசா ஒரு பீட்சா கார்னர் திறந்திருக் கிறதா பேப்பர்ல படிச்சுட்டு, பஸ் பிடிச்சு அங்கே போய் ஒவ்வொரு அயிட்டமா விலை விசாரிச்சிட்டு வந்தார். அவருக்கு வந்திருக்கிறது என்ன நோய்னு எங்களுக்குப் புரியலை. அவரால தினம் தினம் பிரச்னைதான்.’&lt;br /&gt;&lt;br /&gt;பெரியவர், சற்று முன்பு நடந்ததைப் பற்றிக் கவலைப்படாமல் எதிரில் மக்காச்சோளம் விற்பவரிடம் என் னவோ சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டு இருந்தார். பையன் பேச்சின் நடுவே அவர் என்ன செய்கிறார் என்று அடிக்கடி பார்த்துக்கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;Ôஎங்கப்பா முப்பது வருஷம் வேலை பாத்திருக்கார். எல்லா இடத்திலயும் இவரோட பேச்சைத் தாங்க முடியாம வீட்டுக்கு அனுப்பிடுவாங்க. இப்போ வேலைக்குப் போகலை. மந்தவெளில ஆயிர ரூவா வாடகை வீட்ல இருக்கோம். வீட்ல அம்மாவும் மூணு தங்கச்சியும் இருக்காங்க. அப்பாவுக்கு அது எதுவும் பெருசா தெரியலை சார்! எவனோ, எதையோ வாங்கிட்டா இவருக்கு என்ன? உலகத்திலே இவருக்குத் தெரியாம யாரும் எதுவும் வாங்கிரக் கூடாதுனு நினைக்கிறார். எதுக்கு இந்தப் பேராசைனுதான் தெரியலை. ‘சாப்பாடு’னு பேப்பர்ல எழுதிக் காட்டினா வயிறு நிறைஞ்சிடுமா சொல்லுங்க?’ என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;நகரம் ஆசைகளின் விளைநிலம். மாநகரச் சாலையில் நீங்கள் கடந்து போகும் ஒவ்வொரு நிமிஷமும் உங் களை அறியாமலே சிறியதும் பெரியது மாக ஆசைகள் துளிர்ப்பதும் அழிவது மாக இருக்கின்றன. புதுப்புது கார்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், அண் ணாந்து பார்க்கவைக்கும் நட்சத்திர விடுதிகள். விதவிதமான டி.வி., ஹோம் தியேட்டர், நவநவீன உடைகள், காபி ஷாப், சைனீஸ் உணவு விடுதி, புதுப்புது வகை பைக்குகள், நகைக் கடைகள், ஐஸ்கிரீம் பார்லர்கள், பட்டாம் பூச்சி போன்ற இளம் பெண்கள், இப்படி காணும் ஒவ்வொன்றும் எவர் மனதிலோ ஒரு ஆசையின் விதையை ஊன்றுகிறது. அவர்கள் சில நிமிஷ நேர மாவது அந்தக் கனவில் உலவுகிறார்கள். கண்ணால் பார்த்தபடியே அதை ரசிக்கிறார்கள். பிறகு பெருமூச்சு விட்டவர் களாகக் கடந்து போய்விடுகிறார்கள். கடற்கரையில் நடந்து செல்லும்போது பதியும் ஈரமான காலடிகளைப் போல, ஆசைகள் நம் கண் முன்னே உருவாகி, கண்முன்னே அழிந்தும் விடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மத்தியதர வாழ்க்கையை வாழும் மனிதன், ஆசைகளின் நீண்ட பட்டியல் ஒன்றை மனதில் ரகசியமாக எப்போதும் வைத்திருக்கிறான். அதைப் பற்றிச் சொந்த மனைவி, குழந்தையிடம்கூடப் பேசுவது கிடையாது. ஒருவேளை, தான் விரும்பியதை அடைய முடியாமல் போய்விட்டால், அவர்கள் தன்னைக் கேலி செய்வார்களோ, மதிக்க மாட்டார் களோ என்ற பயமாகக்கூட இருக்கக் கூடும். இதில் ஆண் &amp; பெண் என்ற பேதமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கீரைப்பாத்திகளில் கீரை வளர்வதை விடவும் வேகமாக ஆசைகள் வளர்ந்து விடுகின்றன. அடக்கப்பட்ட ஆசைகள் யாவும் அழிந்து போய்விடுவதில்லை. ஒன்றோ இரண்டோ அடங்க மறுத்துப் பீறிடும்போது மனிதன் தன் அவஸ்தை நிலையை மறந்து, ஆசையின் பின்னால் அலையத் துவங்கிவிடுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;புதுமைப்பித்தனின் கதையன்றில் கடவுளைத் தனது வீட்டுக்கு அழைத்து வருவார் கந்தசாமிப் பிள்ளை என்கிற கதாபாத்திரம். வீட்டில் அவரது குழந்தை, ‘அப்பா, எனக்காக என்ன வாங்கி வந்திருக்கிறீர்கள்?’ என்று கேட்கும். கந்தசாமிப் பிள்ளை, ‘என்னைத்தான் வாங்கி வந்திருக்கிறேன்’ என்பார். உடனே குழந்தை, ‘உன்னைத்தான் எப்போதும் வாங்கிட்டு வர்றயே... ஒரு பொட்டுக்கடலை யாவது வாங்கிட்டு வரக் கூடாதா?’ என்று ஆதங்கத்துடன் கேட்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;கந்தசாமிப் பிள்ளை என்ன பேசுவது என்று தெரியாமல் தலை குனிவார். அவருக்கு அருகில் நின்ற கடவுளும் குழந்தையை பார்க்கப் போகும்போது வெறுங்கையோடு வந்துவிட்டோமே என்று சோர்ந்து தலை குனிவார் என்று எழுதியிருப்பார் புதுமைப்பித்தன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் மத்தியதர வர்க்க வாழ்வின் அடையாளம். இந்த வாழ்வில் உழன்று கொண்டு இருக்கும் ஒரு மனிதனின் மன விசித்திரத்தினை வெளிப்படுத்தும் அபூர்வமான கதை கிருஷ்ணன் நம்பியின் எக்ஸென்டிரிக். கிருஷ்ணன் நம்பியின் கதைகள் அன்றாட வாழ்வின் சுகதுக்கங்களைப் பதிவு செய்பவை.&lt;br /&gt;&lt;br /&gt;1959&amp;amp;amp;களில் ஒரு நிறுவனத்தில் குமாஸ்தா வாக வேலை செய்யும் ஒரு மனிதனின் சம்பள நாளில் துவங்குகிறது எக்ஸென்டிரிக் கதை. அவனுக்கு எண்பது ரூபாய் சம்பளம். புது நோட்டுகளாகத் தருகிறார்கள். சம்பளத்தைவிட அதிகக் கடனும் நெருக்கடியும் கொண்ட குடும்ப வாழ்க்கை. வீட்டில் மனைவி அவன் கொண்டுவந்து தரும் எண்பது ரூபாய்க்குள் வாழ்க்கையை எப்படி நடத்துவது என்று தெரியாமல் மூச்சுத் திணறுகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;சம்பளம் வாங்கிக்கொண்டு அலுவல கத்தைவிட்டு வெளியே வரும் அவன், ஒரு காபி குடிப்பதற்காக ஓட்டலுக்குச் செல்கிறான். தினமும் அவனது செலவுக் காக இரண்டணா தருகிறாள் அவனது மனைவி. அதில் ஒன்றரை அணா காபிக்கு, அரையணா ஒரு சிகரெட் பிடித்துக்கொள்வதற்கு. அதனால் ஒரு சிகரெட்டை வாங்கி இரண்டாக உடைத்து வைத்துக்கொண்டு, இரண்டு வேளைகளில் புகைக்கிறான் அவன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓட்டல் வாசலில் நீல நிறத்தில் புத்தம் புதிய கார் ஒன்று நிற்பதைக் காண்கிறான். அதனுள் ஒரு நாய்க் குட்டியை அணைத்தபடி குண்டான பெண் உட்கார்ந்திருக்கிறாள். அந்த காரும், பெண்ணும், நாய்க்குட்டியும் அவனது மனதில் பொறாமையை உருவாக்குகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த காரில் தான் பயணம் போனால் எப்படி இருக்கும் என்று அவன் மனம் கற்பனை செய்கிறது. அந்தக் கற்பனை ஒரு கனவு போல விரிகிறது. கடல் நீலத்தில் ஒரு பட்டுப் புடவை கட்டிக்கொண்டு மனைவி அவனுடன் வர, இருவரும் மிக சந்தோஷமாக சரசமாடுவது போன்று நினைக்கும்போதே மனதில் ஆசை பூக்கத் துவங்கிவிடுகிறது. எல்லாவற்றுக்கும் பணம்தான் தேவையாக இருக்கிறது. ஆனால், அது தன்னிடம் இல்லை. நினைக்க நினைக்க, அவன் மீதே அவனுக்கு ஆத்திரமாக வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;‘பசித்த வேளையில் ஒரு டிபன் சாப்பிடக்கூட முடியாமல் என்ன வாழ்க்கை இது? எதற்காக இப்படி வாழ்கிறோம்?’ என்று தோன்றுகிறது. அதிர்ஷ்டம் நம்மைத் தேடி வராது, நாம்தான் அதைத் தேடிப் போக வேண்டும் என்று நினைத்தவுடன் அவனுக்குத் தனது சம்பளப் பணம் முழுவதையும், அன்று இரவுக்குள் செலவு செய்து தீர்த்துவிட வேண்டும் என்ற வெறி உண்டாகிறது. ஓட்டலுக்குள் புதிய மனிதனாக நுழைகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டில் இருக்கும் ஆயிரம் கடன் களும் அவன் கண்ணைவிட்டு மறைந்து போகின்றன. ஓட்டலின் முன்பு எதிர்ப்படும் மூட்டை தூக்கும் ஒருவனையும் அழைத்துக்கொண்டு சாப்பிட நுழைகிறான். விதவிதமான உணவுகளைத் தருவித்துச் சாப்பிடுகிறார்கள். சர்வருக்கு ஒரு ரூபாய் டிப்ஸ் தருகிறான். ஓட்டலை விட்டு வெளியே வந்து டாக்சி பிடித்து கடற்கரைக்குப் போகிறான். கடற்காற்று ஏகாந்தமாக இருக்கிறது. இந்த ஒரு நாளுக்குள் வகைவகையான இன்பங்களை அனுபவித்துவிட வேண்டும் என்ற ஆசை பொங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பின், டாக்சியில் ஏறி ஒரு சினிமாவுக் குப் போகிறான். படம் விட்டதும் வெளியே வந்து எங்கே போவது என்று தெரியாமல் டாக்சி டிரைவரிடமே எங்கே போகலாம் என்று கேட்கிறான். இருவரும் ஒன்றாகக் குடிக்கிறார்கள். பாலக்காட்டுப் பெண் ஒருத்தியிடம் கூட்டிப் போகிறான் டிரைவர். யாவும் முடிந்து இரவு வெளியே வரும்போது அப்படியும் பத்து ரூபாயும் இரண்டணாவும் மீதமிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வழியில் தென்பட்ட பிச்சைக்கார னுக்கு இரண்டணா தானம் தருகிறான். வீட்டை நெருங்கும்போது பையில் உள்ள பத்து ரூபாயை என்ன செய்வது என்று தெரியாமல் வெளியே எடுக்க முயற்சிக்கிறான். பணத்தைக் காண வில்லை. எங்கோ வழியில் தொலைந்து போயிருக்கிறது. வீட்டுக் கதவைத் தட்டு கிறான். மனைவி தூக்கக் கலக்கத்துடன் கதவைத் திறக்கிறாள். சம்பளம் வாங்க வில்லையா என்று கேட்கிறாள். நாளைக்குத்தான் சம்பளம் என்று சொன்னபடி அவன் வீட்டுக்குள் நுழைவதாக கதை முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எளிய விருப்பங்களைக்கூடப் பூர்த்தி செய்ய முடியாத வாழ்வின் கசப்பு ஒரு நாளில் முற்றிப் பீறிடுவதை இக்கதை துல்லியமாக வெளிப் படுத்துகிறது. விரும்புகிற வாழ்வை ஏற்படுத்திக்கொள்வது எல்லோர்க்கும் எளிதானது இல்லை. அதே நேரம் கிடைக்கும் வாழ்வை அப்படியே ஏற்றுக்கொள்வதும் யார்க்கும் எளிதாக இல்லை. இரண்டுக்கும் நடுவில் மத்தியதர மனிதன் சிலந்தியைப் போல தன்னைச் சுற்றிலும் ஆசையின் மெல்லிய வலையை நெய்தபடி, அதனுள் ஊசலாடிக்கொண்டு இருக்கிறான். என்ன செய்வது... எட்டுக் கால்கள் இருந்தும் சிலந்தி தன் வலைக்குள்தானே ஊர்ந்து அலைகிறது! நாஞ்சில் நாட்டைச் சேர்ந்த அழகிய பாண்டியபுரத்தில் 1932&amp;ல் பிறந்தவர் கிருஷ்ணன் நம்பி. இவரது இயற்பெயர் அழகிய நம்பி. சசிதேவன் என்ற பெயரில் கவிதைகளும், கிருஷ்ணன் நம்பி என்ற பெயரில் கதைகளும் எழுதியிருக்கிறார். நெருக்கடியில் உழலும் மனிதனின் சுகதுக்கங்களை மெல்லிய பகடியான தொனியில் விவரிப்பவை இவரது கதைகள். ‘யானை என்ன யானை’ என்ற குழந்தைகள் கவிதைத் தொகுப்பும் நீலக்கடல், காலை முதல் என்னும் சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. 1976&amp;amp;ம் வருஷம் தனது 44 வயதில், எதிர்பாராத நோய்மையால் மரணமடைந்தார் கிருஷ்ணன் நம்பி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.vikatan.com/av/2005/aug/21082005/av0602.asp&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14025163-115651513876445024?l=e-arc.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://e-arc.blogspot.com/feeds/115651513876445024/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14025163&amp;postID=115651513876445024' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14025163/posts/default/115651513876445024'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14025163/posts/default/115651513876445024'/><link rel='alternate' type='text/html' href='http://e-arc.blogspot.com/2005/06/blog-post_115651513876445024.html' title='கிருஷ்ணன் நம்பி'/><author><name>Chandramukhi</name><uri>http://www.blogger.com/profile/16507154480362737534</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14025163.post-115651509739916876</id><published>2005-06-29T07:10:00.000-07:00</published><updated>2006-08-25T07:14:51.500-07:00</updated><title type='text'>எஸ்.சம்பத்</title><content type='html'>கதாவிலாசம்&lt;br /&gt;&lt;br /&gt;ஒற்றை அறை&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா மேன்ஷன்களி லும் ஐம்பது வயதைத் தொட் டும் திருமணம் செய்துகொள்ளாத ஒரு பிரம்மச்சாரி இருக்கிறார். கல்யாணம் செய்துகொள்ள விரும்பாமல் அவர் இப்படி வாழ் கிறார் என்று சொல்ல முடியாது. சரியான வேலையின்மை, குடும்பப் பிரச்னைகள், வெளியில் தெரியாத தோல்விகள் என ஏதேதோ சிக்கல்கள் அவர்களது கால்களில் கொடியாகச் சுற்றிக்கொண்டு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற அறைகளைப் போல இன்றி அவர்களது அறையில் தினமும் சரியான பூஜை நடக்கிறது. மாலை நேரம் ஜன்ன லில் ஊதுபத்தி கொளுத்தி வைக்கப் படுகிறது. அறையில் படுக்கை, அலமாரி யாவும் சுத்தமானதாக இருக்கின்றன. சுவரில் உள்ள ஹேங்கரில் ஒழுங்காக உடைகள் தொங்கவிடப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;அறையில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடி மட்டும் மிகச் சிறியதாக இருக்கிறது. (கண்ணாடி முன் நின்ற படி தன்னைப் பார்த்துக்கொள்வது அவர்களுக்குச் சுளீர் என்று வலிப்பது போலிருக்குமோ!) காலையில் அலுவலகம் புறப்படும்போது வெளுத்த உடையும் திருநீற்றுக் கீற்றுமாக அவர்கள் சந்தோஷத்துடன் புறப்படுகிறார்கள். ஆனால், அவர்களது மனதில் குளத்துத் தண்ணீரில் தெரியும் மேகம் போல, பெண்களின் மீதான ஆசை ஊர்ந்துகொண்டேதான் இருக்கிறது. அவர்கள் அதை வெளிப்படையாகப் பேசிக்கொள்வது கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;திருமணம் செய்துகொள்ளாததால், ஒருவன் குடும்ப வாழ்வில் இருந்து விடுபடக்கூடும். ஆனால், காமத்திலிருந்து விடுபட முடியுமா? கனியில் துளை யிட்ட புழு, வெளியில் தெரியாமல் கனியைத் தின்றுகொண்டு இருப்பது போல, காமம் பிறர் அறியாமல் உடலினுள் நெளிந்துகொண்டேதான் இருக்கிறது. காமத்தை எதிர் கொள்வதும் வெற்றிகொள்வ தும் எளிதானதில்லை. காமத்தைப் பற்றிய நமது அறிதல் மிக ரகசியமானதாக வும், அறியாமை நிரம்பியதாக வுமே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காமம் குறித்த அறிதல் பதின்பருவத்தில் துவங்குகிறது. வேட்டைக்குச் செல்பவன், மிருகங்களின் கால் தடங்களை வைத்து என்ன மிருகம் அது, எப்படி அதன் உருவம் இருக் கும், எந்தத் திசையிலிருந்து எந்தத் திசை நோக்கிப் போகிறது என்று அடையாளம் கண்டுகொள்வது போல கொஞ்சம் கொஞ்சமாக செவி வழிச் செய்திகளாலும், ரகசிய வாசிப்பாலும் காமத்தை அறிந்துகொள்ளத் துவங்கு கிறோம். அதன் பிறகு, நம் மனதில் நிரம்பி வழிவதெல்லாம் அடக்கப்பட்ட காம உணர்ச்சி தரும் எண்ணங்களும், அதன் விசித்திரக் கற்பனைகளுமே!&lt;br /&gt;&lt;br /&gt;ஆணோ, பெண்ணோ எவராயினும், காமம் உடலில் தோன்றும் ஒரு சூறாவளி. அது எப்போது கரையைக் கடந்து செல்லும் என்று எவராலும் சொல்ல முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இங்மர் பெர்க்மனின் ‘வர்ஜின் ஸ்பிரிங்’ என்றொரு படத்தில், மிகப் பரந்த பசுமையான புல்வெளி ஒன்று காட்டப்படுகிறது. தொலைவில் நாலைந்து ஆட்டிடையர் ஆடு மேய்த்துக்கொண்டு இருக்கிறார்கள். தேவாலயத்துக்குச் செல்கிற ஓர் இளம்பெண் கையில் பூக்கூடையுடன் கடக்கிறாள். ஏகாந்தமான காற்றும், அழகும் அவள் முகத்தில் சந்தோஷத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்துபோகும் வழியில் உள்ள இடையர்களைக் கண்டு அவள் சிரிக்கிறாள். அவர்களும் கபடமின்றிச் சிரிக்கிறார்கள். ஆனால், நிமிஷ நேரத்தில் அவர்களது முகம் மாறுகிறது. ஒரு மிருகத்தைப் போல காமம் அவர்களது கண்களில் கொப்பளிக்கிறது. அந்தப் பிராந்தியத்தில் யாருமில்லை என்பதைக் கண்டுகொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே பாய்ந்து, அந்தப் பெண்ணைத் தங்களது இச்சைக்குப் பலியாக்கிவிடுகிறார்கள். யாருமற்ற அந்தப் பிரதேசத்தில் ஒரு பெண் உருக்குலைந்து, உதிரப் பெருக்கோடு கிடக்கும் காட்சியைப் பெர்க்மன் காட்டுகிறார். அப்போதும் அதே புல்வெளி, பசுமை மாறாமல் காற்றில் அலைந்துகொண்டுதான் இருக்கிறது. காம சுகிப்பை இப்படித் திரையில் காணும்போது முகத்தில் அறைவது போலத்தான் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஏதோ கற்காலத்தில் நடந்த சம்பவம் அல்ல. சம காலத்திலும்கூட காமம் இப்படி ஒரு மூர்க்கத்தையும் வன்முறையையும் கொண்டுள்ளதை நாம் அன்றாடம் காண முடி கிறது. பெண் வீழ்த்தி நுகரப்பட வேண்டிய வள் என்ற எண்ணம் காலங்காலமாகவே மனதில் ஆழமாக வேரூன்றி உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண், காம உணர்ச்சி களுக்கு எத்தனையோ வடிகால் தேடிக்கொள் கிறான். பெண்களோ காமம் குறித்த தங்களது மனதின் சிறு அசைவுகளைக்கூட வெளிப்படுத்த முடியாதபடி கலாசாரச் சூழல் அவர்களைக் கண்காணித்துக்கொண்டு இருக்கிறது. ஆண்டாள், தனது பாடலில் தனக்குக் காமம் ஏற்படுத்தும் வலியை, பகிரங்கமாகவே வெளிப்படுத்துகிறாள். அது பக்தி என்பதைக் கடந்து, உடலின் தீராத குரல் என்றுதான் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குத் தெரிந்தவரையில் விருப்பத்துடன் தன் கணவனை முத்தமிடுவதற்குக்கூட ஒரு பெண் பல முறை யோசிப்பதுதான் குடும்பங் களில் நடக்கிறது. தாக மிகுதியால் வரும் மிருகம் தண்ணீரைக் கண்டதும் குடிப்பதற்குத் தான் முயற்சிக்குமே தவிர, தண்ணீரில் தனது உருவம் தெரிவதை நின்று ரசிக்காது. அப்படித்தான் விளக்கை அணைத்துவிட்ட வுடன் இருள் அறையைக் கவ்விக்கொள்வது போல, காமம் துளிர்த்த உடல் ஓர் ஆக்டோபஸ் போல கிடைப்பதைப் பற்றிக்கொண்டு இச்சையைத் தீர்த்துவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காமத்தை அறிவது ஒரு கலை என்று இந்திய சமூகம் நூற்றாண்டுகளாகச் சொல்லி வந்தபோதிலும், அது ஒரு வடிகால் என்று மட்டுமே நடைமுறையில் இருக்கிறது. கற்பனைதான் காமத்தை அதிகப்படுத்தும் ஒரே சாதனம். கற்பனையற்றுப் போயிருந்தால் காமம் ஒரு இயந்திர நிகழ்வு போலவே ஆகியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;உடலை நாம் அறிந்துகொள்ளாததுதான் காமத்தைப் பற்றிய தவறான எண்ணங்களுக்கு முதல் காரணம். உடல் சதா கொந்தளிப்பும் பீறிடலும் கொண்ட ஒரு நீரூற்றைப் போன்றது. அது தனக்கென ஒரு இயக்கத்தை எப்போதும் நடத்திக்கொண்டேதான் இருக்கிறது. அதனால்தான் உறங்கும்போது நம் கனவில் புலி பாய்வதாக இருந்தால்கூட உடல் தானே திடுக்கிட்டு விழித்துவிடுகிறது. உண்மையில், உடல் ஒரு விசித்திரமான இசைக் கருவி. அதிலிருந்து நாம் விதவிதமான இசையை வாசிக்க முடியும். ஆனால், அதை நம் கட்டுக்குள் வைப்பதும், மீட்டுவதும் எளிதானது இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குத் தெரிந்த மேன்ஷன்வாசி களில் ஒருவரான நித்யானந்தம், நாற்பத்தைந்து வயதுக்குப் பிறகு திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து, பெண் பார்த்து பேசி ஒப்புக் கொண்டார். திருமணம் தூத்துக்குடி அருகில் உள்ள ஏதோ கிராமத்தில் நடந்தது. மேன்ஷன் அறையில் இருந்த நண்பர்கள் பலரும் தனது திருமணத் துக்கு வரவில்லை என்பதால், சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருப் பதாகத் தனக்குத் தெரிந்தவர்கள், உடன் வேலை பார்ப்பவர்கள் என நூற்றுக்கும் அதிகமானவர்களுக்கு போன் பண்ணி சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஓட்டலில் நடந்தது. அன்று மாலை லேசான தூறல் விழுந்துகொண்டு இருந்தது. நித்யானந்தம் தலைக்கு டை அடித்து, புது கோட்\சூட் அணிந்து, ஆறு மணிக்கே புதுப் பெண்டாட்டியுடன் வந்து நின்றிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் இன்னொரு நண்பனும் போய்ச் சேர்ந்தபோது, அங்கே இரண்டு பேர் மட்டுமே வந்திருந் தார்கள். நித்யானந்தத்தின் முகம் இறுக்கமாக இருந்தது. நேரம் கடந்து போய்க்கொண்டே இருந்தது. எவரும் வரவே இல்லை. மணி ஒன்பதாகியபோது, மழை வலுத்திருந்தது. மண்டபத்தில் பதினோரு பேர் மட்டுமே இருந்தோம். இருநூறு பேருக்குத் தேவையான சாப்பாடு தயாராக இருந்தது. புது மனைவி நகத்தைக் கடித்தபடி நின்றுகொண்டு இருந்தாள். என்ன செய்வது என்று தெரியாத நித்யானந்தம் கோபத்தில் வெடித்துப் பேசினார்...&lt;br /&gt;&lt;br /&gt;‘‘நாப்பத்தஞ்சு வயசில் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்ல... அதான், இந்த அவமானப்படுறேன். கூட இருந்தவன், வேலை பாக்கிறவன்னு ஒருத்தன்கூட வரலை, பாருங்க! எத்தனை பேருக்குத் தேடித் தேடிப் போய்ச் செய்தேன்! எல்லாச் சாப்பாட்டையும் அள்ளிக் கொண்டு போய் நாய்க்குப் போடச் சொல்லு!’’ என்றபடி விடுவிடுவென மனைவியை அழைத்துக்கொண்டு மண்டபத்தை விட்டுப் போய்விட் டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அறைக்கு வந்தபோது பலரும் அவர் சொன்னது போலவே, ‘நித்யானந்தத் துக்கு எதுக்குய்யா அம்பது வயசுல கல்யாணம்? பொம்பளை ஆசை லேசில் விடுதா..? இத்தனை நாள் நம்மகிட்டே நடிச்சிருக்கார். அதான் ஒருத்தனும் ரிசப்ஷனுக்கு போகலை’ என்று கிண்டல் அடித்துக்கொண்டு இருந்தார்கள். சரியாக நான்கு மாதத்துக்குப் பிறகு, நித்யானந்தம் முன்பு போலவே அதே மேன்ஷனுக்கு திரும்பி வந்து சேர்ந்தார். தனக்கும் அந்தப் பெண்ணுக்கும் சரிவரவில்லை என்றதோடு, ‘மனசு ஆசைப்பட்டாலும் உடம்பு ஒப்புக்கலை சார். அதான் காரணம்!’ என்றார். அறைவாசிகள் அதையும் கேலி செய்து சிரித்தார்கள். ஆனால், அதன் பிறகு அவர் சிரித்து எவரும் பார்க்கவே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பால் உணர்ச்சிகள் குறித்த கதைகள் பெரும்பாலும் மலிவான தளத்தில் எழுதப்பட்டு வரும் சூழலில், அதன் நுண்மையான அதிர்வுகளைப் பதிவு செய்த கதை... எஸ்.சம்பத் எழுதிய ‘சாமியார் ஜூவிற்கு போகிறார்’. சம்பத், நவீன தமிழ் இலக்கியத்தின் தனிக் குரல். மிகக் குறைவாக எழுதியவர். குறைவான காலமே வாழ்ந்த வரும்கூட. அவர் எழுதிய சிறுகதைகளில் மறக்க முடியாததும், வெகு நேர்த்தி யானதும் இக்கதையே!&lt;br /&gt;&lt;br /&gt;தினகரன் தனது மனைவி மற்றும் குழந்தையை அழைத்துக் கொண்டு டெல்லியில் உள்ள மிருகக்காட்சி சாலைக்குச் செல்கிறான். அன்று விடுமுறை நாள். அவனது மனைவி பத்மா காலையிலிருந்தே பால் உணர்ச்சிமிக்கவளாகத் தாபத்தில் இருக் கிறாள். கணவனிடம் எப்படி அதை வெளிப்படுத்துவது என்று தெரியாத நிலையில், அவர்கள் மிருகக்காட்சி சாலைக்குப் புறப்பட்டுவிடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவளுக்கு எப்படியாவது அன்று முழுவதும், கணவனைத் தனது பிடியிலே வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நினைப்பு உருவாகிறது. இதனால் அவனுக்குக் கிளர்ச்சியை உண்டு பண்ணும் ஜார்ஜெட் புடவையை உடுத்திக்கொள்கிறாள். மிருகக்காட்சி சாலையில் அன்று ஏகக் கூட்டம். அதைப் பயன்படுத்திக்கொண்டு சிறிதுசிறிதாக கணவனுடன் சரசம் செய்கிறாள். அன்று எதிர்பாராதவிதமாகக் கூண்டில் இருந்த ஒரு புலி தப்பி வெளியே வந்துவிடுகிறது. அதைக் கண்டு, பலரும் அலறி ஓடுகிறார்கள். புலி எங்கே பாய்வது என்று தெரியாது தடுமாறி ஓடுகிறது. முடிவில் அது சுடப்பட்டு இறக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் காட்சி, வீடு திரும்பிய பிறகும் தினகரனுக்கு மிகுந்த மனவேதனையை உருவாக்குகிறது. மனைவியோ காமத்தால் அதிகம் பீடிக்கப்பட்டவளாகிறாள். மனிதன் தன்னால் அடக்க முடியாத வற்றுக்கு கூண்டுகள் உண்டாக்கி, அடக்கி வைத்திருக்கிறான். சுதந்திரத்துக்கு எதிராக நிறைய கூண்டுகள் இருக்கின்றன என்று யோசிக்கும்போது அவனது மனைவியின் காமமும் அந்தப் புலி தப்பியது போன்றது தான் என்று தினகரன் புரிந்து கொள்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று கூடலில், தினகரன் ஒரு பஞ்சைப் போல எடை அற்றவனாக இருப்பதாகச் சொல்கிறாள் அவன் மனைவி. அவனோ புலி, கூண்டை விட்டு வெளியே வந்ததும், தனது சுதந்திரத்தைத் தேடியே! அதை அடைவதற்குள் புலி கொல்லப்பட்டு விட்டதே என்று ஏதேதோ புலம்பியபடி கனவு காணத் துவங்கு கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு விளக்கின் சுடரைப் போல காமம் சதா அசைந்துகொண்டே இருப்பதைப் பற்றி நுட்பமாகச் சித்திரிக்கும் கதை இது. ஒருபுறம் அதிவேக நாகரிகம், காமத்தை மலினப் பொருளாக்கி விற்பனை செய்கிறது. மறுபுறம் கண்களைக் கட்டிக்கொண்டு சித்திரம் வரைவது போல பால் உணர்வுகளின் அறியாமை நம்மைப் பீடித்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காமம் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்கப்பட வேண்டிய ஒரு ரகசியமல்ல; அதே சமயம், கூட்டம் போட்டு உபதேசிக்கப்பட வேண்டியதுமல்ல. சிரிப்பதும், அழுவதும்போல அது ஒரு உணர்ச்சியின் வெளிப்பாடு! அந்த இயல்பை நாம் புரிந்துகொள்ளாதவரை பெர்க்மனின் ஆட்டு இடையர்களைப் போலவே இருப்போம்! எஸ்.சம்பத் 1941&amp;ல் திருச்சி யில் பிறந்தவர். நவீன தமிழ் இலக்கியத்தில் அரிய வகை எழுத்து இவருடை யது. பொருளாதாரத்தில் எம்.ஏ. பட்டம் பெற்ற சம்பத், ஆராய்ச்சி நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங் களிலும் சில காலம் பணியாற்றியுள்ளார். விரல்விட்டு எண்ணக்கூடிய சிறுகதை கள் மட்டுமே எழுதியுள்ளார். இவரது ÔஇடைவெளிÕ என்ற நாவல், மரணம் குறித்த ஆழ்ந்த கேள்விகளை முன் வைத்து எழுதப்பட்ட மிகச் சிறந்த நாவலாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;சம்பத்தின் அப்பா ரயில்வே உயர் அதிகாரியாக வேலை செய்தவர் என்ப தால் வளர்ந்தது, படித்தது யாவும் டெல்லியில்! Ôருஷ்ய எழுத்தாளர் தஸ்தாயெவ்ஸ்கியைப் போன்றதொரு எழுத்துலகை உருவாக்க வேண்டும்Õ என்று ஆசை கொண்ட சம்பத், எதிர்பாராத மூளை ரத்தக்கசிவு நோய் காரணமாக, தனது 42&amp;amp;வது வயதில் மரணமடைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றும் தமிழ் இலக்கியத்துக்கு புதிய வழிகாட்டுதலாக இவரது எழுத்துகள் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.vikatan.com/av/2005/aug/07082005/av0602.asp&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14025163-115651509739916876?l=e-arc.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://e-arc.blogspot.com/feeds/115651509739916876/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14025163&amp;postID=115651509739916876' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14025163/posts/default/115651509739916876'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14025163/posts/default/115651509739916876'/><link rel='alternate' type='text/html' href='http://e-arc.blogspot.com/2005/06/blog-post_115651509739916876.html' title='எஸ்.சம்பத்'/><author><name>Chandramukhi</name><uri>http://www.blogger.com/profile/16507154480362737534</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14025163.post-115651502137021333</id><published>2005-06-29T07:09:00.000-07:00</published><updated>2006-08-25T07:13:48.696-07:00</updated><title type='text'>சா.கந்தசாமி</title><content type='html'>கதாவிலாசம்&lt;br /&gt;&lt;br /&gt;நிழல் குதிரை&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.ராமகிருஷ்ணன்&lt;br /&gt;&lt;br /&gt;நமண சமுத்திரம். புதுக்கோட்டை அருகில் உள்ள சிற்றூர்.இங்கே நடைபெறும் குதிரை எடுப்புத் திருவிழாவைக் காண்பதற்காகச் சென்றிருந் தேன். அய்யனார் கோயிலுக்கு நேர்சை செய்து, காணிக்கையாக மண் குதிரைகள் செய்து வந்து செலுத்துவது பிரார்த்தனை!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மரங்கள் அடர்ந்த சோலையின் நடுவில் நூற்றுக்கணக்கில் மண் குதிரைகள் நிற்பதைக் காணும்போது, போர்க்களக் காட்சி போலத் தோணும். குதிரைகளின் கம்பீரமும், அவை கால் தூக்கி நிற்கும் அழகும் வியப்பளிக்கும். குறிப்பாக, குதிரையின் மிரட்டும் கண்கள், அதன் வேகம் சொல்லும். மண் குதிரைகள் என்று நம்புவதற்கு இயலாதபடி அதன் வார்ப்பு, காலம் கடந்தும் அங்கே புத்துரு கலையாமல் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் கூட்டத்தில் ஒரு பெரியவரைக் கண்டேன். அறுபதைக் கடந்திருக்கும். செம்புழுதியேறிய வேஷ்டி. தலை, எண்ணெய் காணாமல் சிக்குப்படிந்திருந்தது. பீடிக் கம்பெனியின் விளம்பர பனியனை அணிந்திருந்தார். கோயிலின் இருபுறமும் அடுக்கிவைக்கப்பட்டு, மழையாலும் காற்றாலும், தலையும் கால்களும் வீசி எறியப்பட்ட குதிரைகளின் முன் நின்றபடி, தானாக ஏதோ பேசிக்கொண்டு இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சாமிக்குச் செலுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்டு வெளிர் மஞ்சளும் நீலமும் பூசப்பட்ட புதுக் குதிரைகள் ஓரிடத்தில் வைக்கப்பட்டு இருந்தன. வயசாளி மெதுவாக நடந்து, அந்தக் குதிரைகளை தன் விரலால் சுண்டிப் பார்த்தார். முகத்துக்கு நேராகத் தன் கைகளை நீட்டிப் பார்த்தார். பிறகு எரிச்சல் அடைந்தவரைப் போல, ‘‘குதிரையா இது..? கோவேறுக் கழுதை மாதிரியில்ல இருக்கு’’ என்று திட்டினார். அவரை யாரும் சட்டைசெய்யவேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பகல் முழுவதும் அவரைக் கவனித்தபடியே இருந்தேன். அவருக்கு அந்தத் திருவிழாவோ, அதன் மேளதாளங்களோ, சந்தோஷமோ, எதுவுமே பிடிக்கவில்லை. மேளம் அடிப்பவர் முன் போய் நின்றபடி, ‘‘என்னய்யா சாணி மிதிக்கிற மாதிரி அடிக்கிறீங்க..?’’ என்று சத்தம் போட்டார். சாமி கும்பிட வந்த பெண்களைப் பார்த்து, ‘‘சாமி கும்புட வந்தவுளுக மாதிரி தெரியலை... சர்க்கஸ்காரிக மாதிரி மினுக்குறாளுக...’’ என்று ஏசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;திருவிழாவின் சந்தோஷம் அவரைத் தீண்டவே இல்லை. நீண்ட நேரத்துக்குப் பிறகு, அவராக நடந்து போய், வெளிறியிருந்த ஒரு மண் குதிரையின் முன் உட்கார்ந்து, அதை ஆசையாகத் தடவி விட்டபடி இருந்தார். அவர் அருகில் போய் அமர்ந்தேன். என் காதுபடச் சொன்னார்... ‘‘மண் குதிரைதானேன்னு நினைச்சுக்கிட்டாங்க. இதுக்கும் உசிரு இருக்குய்யா! கையை நீட்டிப் பாரு... அது மூச்சு விடுறது உன் புறங்கையில தெரியும். இங்கே நிக்கிற குதிரைங்க எல்லாம் ராத்திரி எல்லோரும் போன பிறகு ஒண்ணுக் கொண்ணு பேசிக்கிட்டு இருக்கும் தெரியுமா... இப்போ செலுத்துற குதிரைங்க எல்லாமே ஊமைக் குதிரைங்க!’’.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஆமோதித்துத் தலையசைத் தேன். அவர் தொலைவில் உள்ள ஒரு குதிரையைக் காட்டி, ‘‘அது காது அழகைப் பாரேன், செஞ்சுவெச்சு அம்பது வருசமாச்சு... புதுப் பெண்டாட்டி மாதிரி எம்புட்டு அழகா இருக்குது!’’&lt;br /&gt;&lt;br /&gt;அவர் காட்டிய திசையில் இருந்த குதிரையைத் திரும்பிப் பார்த்தபோது, அவர் சொன்னது உண்மையாகவே இருந்தது. ‘‘கண்ணுட்டுப் பார்த்தா போதாது... கையால தொட்டுப் பார்த்துட்டு வா!’’&lt;br /&gt;&lt;br /&gt;எழுந்து அந்தக் குதிரையைத் தொட் டுப் பார்த்தேன். என்ன அருமையான வார்ப்பு! ‘‘எப்படி இருக்கு?’’ என்று கேட்டார் பெரியவர். நன்றாயிருப் பதாகச் சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘மண் குதிரையைத் தொடுறப்போ அதைச் செஞ்சவன் கையைத் தொடுற மாதிரி உணர்ச்சி வரணும். அதெல்லாம் யாருக்கு இருக்கு? பானை, சட்டி, பொம்மைன்னு மண்ல எத்தனையோ செய்றாங்க. அதுல சோறாக்குறோம், கொழம்பு வெக்கிறோம், ஆனா, அதைச் செஞ்சவன் விரல் ரேகையும் அதில் படிஞ்சிருக்குன்னு நாம பாக்குறதே இல்லை!’’ | பெருமூச்சிட்டபடி அவரிடமிருந்து வந்த வார்த்தைகளைக் கேட்டதும், யாரோ என் முகத்தில் அறைந்தது போல இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் அவரின் கைகளை அப்போதுதான் பார்த்தேன். அகலமான கைகள். ‘‘நீங்கள் குயவரா?’’ என்று கேட்டேன். அவர் வேண்டாவெறுப்பாக, ‘‘இங்க இருக்க பாதிக் குதிரைக நான் செஞ்சதுதான்!’’ என்றார். கோபத்துக்கும் எரிச்சலுக்குமான காரணம் அப்போது தான் புரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இருவரும் ஒரு மரத்தடியில் அமர்ந் தோம். அவர் கையைத் தொட்டுப் பார்க்க வேண்டும் போலிருந்தது. ஒரு சிறுவனைப் போல ஆசையை அடக்க முடியாமல் கேட்டேன்... ‘‘உங்க கையைத் தொட்டுப் பார்க்கலாமா..?’’&lt;br /&gt;&lt;br /&gt;அவர் லேசாகச் சிரித்தபடி, ‘‘கையில் என்னய்யா இருக்கு? மனசுல இருக்கு... அதுதான் மண்ணை வனையுது. மண் லேசுப்பட்டது இல்ல. அதுக்கும் குணம் இருக்கு, வாசம் இருக்கு. கட்டுன பெண்டாட்டியாவது நம்ம சொல் பேச்சுக் கேட்பா... மண்ணு லேசில் படியாது!’’ என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று முழுவதும் அவரோடு இருந்தேன். சிதிலமடைந்துபோன குதிரைகளின் தலைகளை, கால்களை அவர் ஓரமாக அடுக்கிவைத்தபடி இருந்தார். திருவிழாவில் உற்சாகம் கரைபுரண்டு ஓடிக்கொண்டு இருந்தது. பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் குதிரைகளின் கண்கள் கூச்சம்கொண்டு அசைவது போலவே தெரிந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட உரையாடலுக்குப் பின்பு அவரிடம், ‘‘எதற்காக உங்களுக்கு எதையுமே பிடிக்கவில்லை?’’ என்று கேட்டேன். அவர் ஆத்திரமடைந்தவர் போல, ‘‘நமக்கு என்ன மதிப்பிருக்கு சொல்லுங்க? எல்லாப் பயலுகளும் குடிக்கிறதுக்கும், ஆடுறதுக்கும்தான் வர்றாங்க. மூளி மூளியா மண்ல செஞ்சு கொண்டு வந்து வெச்சா, சாமி எப்படி தரிசனம் கொடுக்கும்? எல்லாம் ஏமாத்தாப் போச்சு! மண்ணோட உள்ள உறவு தாய்ப்பால் மாதிரி. நாம தான் சப்பிச் சப்பிக் குடிக்கத் தெரிஞ்சுக்கணும். அது வத்தாம பாலைக் குடுத்துக்கிட்டுத்தான் இருக்கும்ÕÕ என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;தனது கலை அழிந்து வருகிறது என்ற கோபத்தின் கீழே வேறு ஏதோ காரணம் இருப்பது போலத் தெரிந்தது. இருட்டில் இருந்து நடந்து சாலையின் விளிம்புக்கு வந்தபோது கேட்டேன், ‘‘உங்ககூட யாரு வந்திருக்கா..?’’&lt;br /&gt;&lt;br /&gt;அவர் உடைந்து போன குரலில் சொன்னார், ‘‘இந்த மண் குதிரைகளைத் தவிர, எனக்கு வேற யாருமே இல்லைய்யா! பெத்த பிள்ளைக எல்லாம் பிழைப்பு தேடி மெட்ராசு, பாம்பேனு போயிட்டானுக. ஒருத் தனுக்கும் இந்தத் தொழில் பிடிக்கலை. எனக்கு இதைவிட்டா வேறு தொழில் தெரியாதுய்யா! பரம்பரையா குசவங்க நாங்க. இன்னிக்கு இருக்கனா, செத்தனான்னு பார்க்கக்கூட எனக்கு யாரும் இல்லை. பெரியவங்களை விடுங்க... ஆறு பேரப் பிள்ளைக இருக்குதுங்க. ஒருத்தருக்கும் என்னை வந்து பார்க்கத் தோணலை. என்கிட்ட என்ன இருக்கு? என்னால முடிஞ்சது மண்ணுல ரெண்டு பொம்மை செஞ்சு தருவேன். பேரன், பேத்தி எல்லாம் டவுன்ல இங்கிலீஷ் படிக்கிறவங்க. இதெல்லாம் பிடிக்குமா? ஏழையாப் போயிட்டா, சொந்தத் தாத்தானுகூட பார்க்காம உறவு அத்துப்போயிரும்னு ஆகிப் போச்சுய்யா. நானும் குதிரை செய்றதையெல்லாம் விட்டுட்டேன். மிச்சமிருக்கிறது தலை போன இந்தக் குதிரைகதான். அதுககூட பேசிக்கிட்டுக் கெடக்கிறேன்!’’&lt;br /&gt;&lt;br /&gt;என்ன பேசுவது என்று தெரியாத அமைதி என்னைக் கவ்விக்கொண்டது. அங்கிருந்த மண் குதிரைகளைத் திரும்பிப் பார்க்க குற்ற உணர்வு ஏற்பட்டது. அவர் ஆத்திரம் அடங்கா தவர் போலச் சொன்னார்... ‘‘பத்து வருசத்துக்கும் மேலாச்சு... திருவிழாவுக்குக்கூட ஊருக்கு வர மாட்டாங்க. நானும் எந்தப் பிள்ளை வீட்டுக்கும் போறது இல்லை. எவன் கிட்டயும் கையேந்த மாட்டேன். இந்த மண்ணு இருக்கிற வரைக்கும் பொழச்சுக் கிடப்பேன். இல்லேன்னா மண்ணுக்குள்ளேயே அடங்கிருவேன். நானெல்லாம் மண்புழு மாதிரிதேன். எனக்குத் தெரிஞ்சதெல்லாம் மண் ருசி மட்டும்தான்! என்ன... வயசு ஆக ஆக மனசு கேட்க மாட்டேங்குது. பேரன் பேத்திகளைத் தேடுது. வீட்ல நிறைய விளையாட்டுச் சாமான் செஞ்சு போட்டிருக்கேன். என்னிக்காவது என்னைத் தேடி வந்தா விளையாடட்டும். இல்லேன்னா நான் செத்ததும் குழியில அந்தப் பொம்மைகளையும் சேத்துப் பொதைச்சிர வேண்டியதுதான்!’’&lt;br /&gt;&lt;br /&gt;பேச்சு அடங்கி நாவு ஒடுங்கிவிட்டது. அவர் கைகளைப் பற்றிக்கொண்டேன். அது நடுங்கிக்கொண்டே இருந்தது. மண் குதிரைகளில் இவரும் ஒருவர் போலாகிவிட்ட நிலை புரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ரத்த உறவுகள் துண்டிக்கப்பட்டு, பேரன், பேத்தியைப் பார்க்கக்கூட முடியாத நிலை என்பது எத்தனை துக்ககரமானது. அப்படி வாழ்வது மண் குதிரைக்குச் சமமானதுதானோ?&lt;br /&gt;&lt;br /&gt;திருவிழா முடிந்து அந்த மைதானமே காலியாகி இருந்த போதும், அதை விட்டு வெளியேறிப் போக மனதற்றுப் போய்விட்டிருந்தது. கண்ணுக்குத் தெரியாத வலி காற்றில் சுற்றிக்கொண்டு இருந்தது. திரும்பி வரும் வழியில் எனக்கு சா.கந்தசாமியின் ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’ கதை நினைவுக்கு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தாத்தாவுக்கும் பேரனுக்குமான உறவைப் பற்றிய கதை. இருவரும் மீன் பிடிக்கப் போகிறார்கள். ஒரு மீன் அவர்களது தூண்டிலில் சிக்காமல் அலைக்கழிக்கிறது. அதை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்று தாத்தா முயற்சிக்கிறார். அவரால் முடியவில்லை. பேரன் அதை தான் பிடித்துவிடுவதாக சவால்விட்டு, தூண்டிலோடு போய் மீனைப் பிடித்துவிடுகிறான். பேரனின் வெற்றி தாத்தாவின் சுயபெருமையின் மீது விழுந்த அடிபோல் ஆகிவிடுகிறது. தன்னால் பிடிக்க முடியாத மீனை, பேரன் பிடித்ததை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பேரனைத் திட்டுகிறார். ஆனால், அன்றிரவு அவர் மனது பேரனின் சாகசத்தை நினைத்துப் பெருமைப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வெளிப்படாத அன்பு என்பது கல்லுக்குள் தேரை இருப்பது போல, தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமலே வாழ்வது போன்றது. தாத்தாவின் அன்பு யாரும் திறக்காத சிப்பிக்குள் உள்ள முத்தைப் போன்றது. அதைத் தீண்டுவதும் கைவசமாக்குவதும் என்றோ அபூர்வமாகவே நடந்தேறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா வீடுகளிலும் வெளிப் படுத்த முடியாத அன்போடு யாராவது ஒருவர் இருக்கிறார் கள். நம் நிழல் கூடவே வந்தாலும், அது எதையும் பேசுவது இல்லை. அதுபோல இவர்களின் அன்பும்!&lt;br /&gt;&lt;br /&gt;அருவியாகச் சப்தமிடும் போதுதான் தண்ணீரை வியந்து பார்க்கிறோம். குளத்தில் அடங்கியுள்ள நீரின் மௌனம் ஒருபோதும் புரிந்துகொள்ளப்படுவதே இல்லைதானோ?&lt;br /&gt;&lt;br /&gt;சாகித்திய அகாடமி விருது பெற்ற சா.கந்தசாமி, தமிழின் முக்கியமான சிறுகதை ஆசிரியர். இவரது ‘சாயாவனம்’ நாவல் தமிழில் குறிப்பிடத்தக்கது. ஓவியம், நுண்கலைகள் மீது அதிக ஈடுபாடுகொண்ட சா.கந்தசாமி, குறும்படம் மற்றும் ஆவணப் படங்களைத் தயாரித்து வருகிறார். சா.கந்தசாமி தொகுத்த ‘தற்காலத் தமிழ்ச் சிறுகதைகள்’ தொகுப்பு, மிகக் கவனமாகவும் நுட்பமாகவும் தொகுக்கப்பட்டது. இவருடைய கதைகள் பல்வேறு இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. ‘சா.கந்தசாமி கதைகள்’ என்ற பெயரில் இவரது சிறுகதைகள் மொத்தமாகவும் தொகுக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.vikatan.com/av/2005/jul/31072005/av0602.asp&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14025163-115651502137021333?l=e-arc.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://e-arc.blogspot.com/feeds/115651502137021333/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14025163&amp;postID=115651502137021333' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14025163/posts/default/115651502137021333'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14025163/posts/default/115651502137021333'/><link rel='alternate' type='text/html' href='http://e-arc.blogspot.com/2005/06/blog-post_115651502137021333.html' title='சா.கந்தசாமி'/><author><name>Chandramukhi</name><uri>http://www.blogger.com/profile/16507154480362737534</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14025163.post-115651412888009853</id><published>2005-06-29T06:54:00.000-07:00</published><updated>2006-08-25T07:13:10.513-07:00</updated><title type='text'>கு.ப.ராஜகோபாலன்</title><content type='html'>எஸ்.ராமகிருஷ்ணன்&lt;br /&gt;நினைவு முகம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருப்பதி செல்லும் ரயிலில் அந்தத் தம்பதியைப் பார்த்தேன். இருவருக்கும் அறுபதைக் கடந்த வயது. தாத்தா ஜன்னல் ஓரமாக உட்கார்ந்திருந்தார். அன்றைக்கு ரயிலில் கூட்டம் இல்லை. அவர் படிப்பதற்காக வாங்கி வைத்திருந்த ஆங்கில பேப்பர், பிளாஸ்டிக் கூடையில் செருகப்பட்டிருந்தது.&lt;br /&gt;ரயில் வேகமாகக் கடந்து செல்லும்போது, அவர் தொலைவில் உள்ள வயலில் வந்திறங்கும் கொக்குகளைக் காட்ட, ஒரு குழந்தையின் வியப்பில் வெளியே எட்டிப் பார்த்தார் அந்தப் பாட்டி. பயணம் முழுவதும் அவர்கள் தணிவான குரலில் எதையோ பேசிச் சிரித்துக்கொண்டே வந்தார்கள். இடையிடையில் தாத்தா சாக்லெட் சாப்பிடுவதும், பாட்டி அதில் பாதியைப் பிடுங்கி வைத்துக்கொள்வதுமாக ஒரு விளையாட்டு நடந்துகொண்டு இருந்தது. பிறகு, தாத்தாவின் தோளில் சாய்ந்து படுத்துக்கொண்டார் பாட்டி. அவரது நரையோடிய கேசம் காற்றில் பறந்து தாத்தாவின் முகத்தில் படர்ந்தது.&lt;br /&gt;ஓடும் ரயிலில், தாத்தா டம்ளரில் தண்ணீர் ஊற்றி குடிக்க முற்பட்டபோது, தண்ணீர் சிதறி எதிரில் இருந்த எங்கள் மீதும் தெறித்தது. ‘‘இன்னும் சின்னப் பிள்ளையாட்டம் இருக்கீங்களே... கல்யாணமாகி நாப்பது வருசமாச்சு. உங்களை மாத்தவே முடியலை’’ என்று பாட்டி சொல்ல, ‘‘நாப்பது எங்கடி ஆச்சு? நாப்பத்தஞ்சு முடிஞ்சிருச்சு’’ என்றார் தாத்தா சிரிப்புடன். ‘‘அதெல்லாம் கரெக்டா கணக்கு வெச்சிருங்க’’ என்றபடி ஈரத்தைத் துடைத்தார் பாட்டி.&lt;br /&gt;நாற்பத்தைந்து வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தும், களிப்பும் கேளிக்கையுமாக வாழ்வை அப்படியே பாதுகாக்கும் அந்த ரகசியம் என்னவென்று கேட்கலாம் போலத் தோன்றியது. அவர்களோ தீராத மையலில் புதையுண்டவர்களைப் போல் இருந்தார்கள். வாழ்வில் சுவை துவங்கும்போது தித்திப்பாக இருக்கலாம், ஆனால், அதன் கடைசி விளிம்பில்கூட இத்தனை இனிப்பு இருக்க முடிவது ஆச்சர்யம் தந்தது.&lt;br /&gt;என்னுடன் வந்திருந்த நண்பன், தன் மனைவியிடம் அவர்களைக் காட்டி, ஏதோ சொன்னான். அவன் மனைவி, ‘‘அதான் நரையேறிப் போச்சுல்ல... இன்னும் என்ன கொஞ்சல் வேண்டியிருக்கு?’’ என்றாள். ‘‘நீ எல்லாம் நினைச்சாலும், இந்த வயசுல இப்படி இருக்க முடியாதுடி!’’ என்றான் நண்பன். ‘‘ம்ம்ம்... இந்த மூணு வருஷமே போதும் போதும்னு இருக்கு. வயசானா நான் உங்களை விட்டுட்டுப் பையன்கூட அமெரிக்கா போயிருவேன்’’ என்றாள். அருகில் இருந்த அவர் களின் இரண்டு வயதுப் பையன் எதுவும் புரியாமல், சிப்பர் டம்ளரில் பால் குடித்துக் கொண்டு வந்தான். வாழ்தலின் சுவை நாளுக்கு நாள் திரிந்து கொண்டே இருக்கக் கூடியதுதானோ?&lt;br /&gt;திருப்பதியில் நண்பனின் குழந்தைக்கு மொட்டை போடு வதற்காக டிக்கெட் வாங்கிக் காத்திருக் கும்போது, திரும்பவும் அந்த வயதான தம்பதி யைப் பார்த்தேன் அந்தப் பாட்டி கையில் டிக்கெட் டுடன் நிற்க, தாத்தா அவருடைய கையைப் பிடித்தபடி எதையோ சொல்லிச் சிரித்தார். பாட்டியும் சிரித்தபடியே நாவிதர்கள் அமர்ந்திருந்த இடத்தின் அருகே வந்து தன் கையில் இருந்த சீட்டைத் தந்து, தன் தலையை மொட்டையடிக்கும்படி சொன்னார்.&lt;br /&gt;சவரக்கத்தியை நன்றாகத் தீட்டி, பாட்டியின் தலையில் தண்ணீர் தெளித்து மழிக்கத் துவங்கியதும், அருகில் உட்கார்ந்திருந்த தாத்தாவின் கண்கள் தானே கசியத் துவங்கின. பாட்டியின் தலைமுடி கற்றை கற்றை யாக தாத்தாவின் கைகளில் வந்து விழுந்தன. அவர் அழுகையை அடக்க முடியாதவரைப் போல வெளியே எழுந்து போய், ஒரு மரத்தடியில் குழந்தை யைப் போல நின்று விசும்பினார்.&lt;br /&gt;குளித்துவிட்டு, மொட்டையடிக் கப்பட்ட தலையும் ஈரப்புடவையுமாக வந்தார் பாட்டி. வயதானவரின் முகத்தில் இருந்த துயரக் களையைக் கண்டது போல, பாட்டி ஆறுதல் சொல்லும் தொனியில், ‘‘சாமி காரியம். இதுக்குப் போயி கண்ணைக் கசக்கிட்டு இருக்கீங்க. தொடச்சுக்கோங்க’’ என்றார். மொட்டையடிக்கப்பட்ட பிறகு பாட்டி, ஒரு துறவி போலிருந்தார்.&lt;br /&gt;அன்று மாலையில் நல்ல மழை பெய்தது. காற்றோடு கூடிய திடீர் மழை. தரிசனத்தை முடித்துவிட்டு வந்தபோது மழை பிடித்துக்கொண்டது. நாங்கள் நனைந்தபடியே ஓடி வெளிப் பிராகாரத்தில் உள்ள மண்டபத்தில் ஒதுங்கினோம். அங்கே அந்தப் பாட்டியும் தாத்தாவும் ஜமுக்காளத்தை விரித்து உட்கார்ந்திருந்தனர். ஒரு துண்டைக் கொடுத்து எங்களைத் தலை துவட்டிக்கொள்ளச் சொன்னார் பாட்டி. பிறகு, முறுக்கும் லட்டும் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார்.&lt;br /&gt;மழை விடும் வரை அருகிலே இருந்தோம். நண்பனின் மனைவி, ‘‘வேண்டுதலுக்காக மொட்டை போட்டீங் களா?’’ என்று கேட்டார். ‘‘சொன்னா சிரிப்பீங்க. அது ஒரு கதை’’ என்று தாத்தாவைக் காட்டியபடி சொல்லத் துவங்கினார் பாட்டி. ‘‘இவர் என் அத்தை பையன். நாங்க அப்போ திருக்கடையூர்ல இருந்தோம். அத்தை வீட்ல ரொம்ப வறுமை. அதனால இவர் எங்க வீட்லதான் தங்கிப் படிச்சார். அப்போ எனக்கும் இவர் மேல ரொம்ப ஈடுபாடு இருந்தது. இது என் வீட்ல யாருக்கும் பிடிக்கலை.&lt;br /&gt;அப்பா எனக்கு திருநாகேஸ்வரத்துல இருந்து ஒரு மாப்பிள்ளை பாத்து நாள் குறிச்சிட்டாரு. கல்யாணத்துல எனக்கு இஷ்டம் இல்லை. என்ன செய்றதுனும் தெரியலை. முகூர்த்தத்துக்கு ரெண்டு நாள் முன்னாடி ஒரு யோசனை வந்தது. யாருக்கும் தெரியாம ஒரு நாவிதர்கிட்டே போயி, என் தலையை மொட்டை போட்டுட்டு வந்துட்டேன். அப்போ எனக்கு கருகருனு அவ்வளவு கேசம்.&lt;br /&gt;மொட்டைத் தலையா வந்து நின்ன என்னைப் பாத்து வீடே பயந்து போயிருச்சு. ஒரே ரகளை. அப்பா வுக்கு அப்படி ஒரு கோபம். விஷயம் மாப்பிள்ளை வீடு வரைக்கும் போயி, கல்யாணம் நின்னு போச்சு. அப்புறம் வேற வழியில்லாம இவருக்கே என்னைக் கட்டி வெச்சிட்டாங்க. பிரச்னையில்லாம கல்யாண மாகி குழந்தை பிறந்தா இங்கே வந்து மொட்டை போடுறேன்னு அப்போ மனசில வேண்டிட்டு இருந்தேன். இவருக்கு வடக்கே வேலை கிடைச்சது. பாட்னாவில் வேலை, நாற்பது வருஷம் அங்கேயே இருந்தாச்சு. குழந்தைகள் இல்லை. ஆனா, வேண்டுதல் அப்படியே இருக்கேன்னுதான் வந்து மொட்டை போட்டுட்டேன். இத்தனை வருஷமா இவர் என் தலையை மொட்டை அடிக்க விடவே இல்லை. வயசாறது இல்லையா... இனி எவ்வளவு காலம் இருக்கப் போறோம்னுதான் புறப்பட்டு வந்தோம்’’ என்றார் பாட்டி. தாத்தாவின் முகம், மேலும் வேதனையில் ஆழ்ந்ததைக் கவனிக்க முடிந்தது.&lt;br /&gt;பேச்சற்றவர்களாக நாங்கள் மழையை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தோம். திடீரென தாத்தா தன் மௌனத்தைக் கலைத்தவரைப் போல, ‘‘அப்படி என்கிட்டே என்ன பிடிச்சிருக்கு?’’ என்று கேட்டார். ‘‘ஆங்... அதையெல்லாம் எனக்குச் சொல்லத் தெரியாது. சொன்னாலும் உங்களுக்குப் புரியாது’’ என்றார் பாட்டி.&lt;br /&gt;மழை நின்ற பிறகு நாங்கள் இறங்கி நடக்கத் துவங்கினோம். அந்தப் பாட்டி சொன்னது மறுக்க முடியாத உண்மை. ஒரு ஆணிடம் என்ன பிடித்திருக் கிறது என்று எந்தப் பெண்ணாலும் முழுமையாகச் சொல்லிவிட முடியாது. அதோடு வாழ்வைக் கொண்டு செலுத்துவது, ஒருவரைப் பற்றி மற்றவர் கொண்டிருக்கும் கற்பனையும் ரகசிய எண்ணங்களும்தானே என்றும் தோன்றியது. என்றோ மனதில் ஒரு விதையைப் போலத் துவங்கிய ஆசையை இன்று விருட்சமான பிறகும் பாட்டி வளர்த்துக்கொண்டே இருக்கிறார். வாழ்வின் நிஜமான சுவை இதுதான் போலும். வீடு திரும்பும் வரை அவர்கள் நினைவில் வந்து கொண்டே இருந்தார்கள்.&lt;br /&gt;பெண்ணின் வாழ்வு திருமணத்தால் மட்டுமே அளவிடப்படுகிறது. திருமணத் துக்காக பாதியில் படிப்பை, வேலையை, எழுத்தை, இசையை விட்ட ஆயிரமாயிரம் பெண்கள் இருக்கிறார்கள். மருந்துக்குக் கூட ஒரு ஆண் இப்படி நடந்து கொண்டது கிடையாது. திருமண வாழ்வு இனித்தாலும் கசந்தாலும் அதுதான் அவளது தலைவிதி. அதற்கு மாற்றும் கிடையாது.&lt;br /&gt;கணவனை இழந்த ஒரு பெண்ணின் மன உலகை மிக நேர்மையாகவும் நுட்பமாகவும் பதிவு செய்த கதை கு.ப.ராஜகோபாலனின் ‘திரை’. பெண்களின் வெளிப்படுத் தப்படாத ஆசைகளையும் கனவுகளையும் தனது படைப்பு களின் மூலம் கவனப் படுத்தியவர் கு.ப.ரா. அவரது கதைகள் மன உலகின் விசித் திரங்களைச் சித்திரிப்பவை.&lt;br /&gt;பால்ய வயதில் திருமண மாகும் கால கட்டம் அது. ஆகவே, உரிய காலம் வரை மனைவி அவளது பெற்றோர் வீட்டில்தான் இருப்பாள். அப்படி பெற்றோர் வீட்டில் இருக்கும் தன் மனைவி ராஜத்தைக் காண்பதற்காக அவள் கணவன் வந்து சேர் கிறான். கடந்த சில மாதங் களாக தனது பெற்றோருக்குத் தெரியாமல் ராஜம் உருகி உருகி கணவனுக்குப் பல கடிதங்கள் எழுதி இருக் கிறாள். அந்தக் கடிதங்கள் தந்த மனமயக்கத்தில் விரகதாபம் ஏற்பட்டு வந்து சேர்கிறான் ராஜத்தின் கணவன். ஆனால், வீட்டுக்கு வந்த நாள் முதல் அவனை ராஜம் கவனிக்கவே இல்லை. எதற்காக இப்படி நடந்துகொள்கிறாள் என்று அவனுக்கும் புரியவில்லை.&lt;br /&gt;அந்த வீட்டில் ராஜத்தின் அக்கா சரஸ்வதி விதவையாகி யார் கண்ணிலும் படாமல் தனியே இருக்கிறாள். ஒரு நாள் வீட்டில் உள்ளவர்கள் திருவிழா பார்க்கப் போய்விடுகிறார்கள். சரஸ்வதி மட்டும் தனியே உட்கார்ந்து வீணை வாசித்துக்கொண்டு இருக்கிறாள். அவள் பாடும் பாடலைக் கேட்டதும், இதுவரை தனக்குக் கடிதங்கள் எழுதியதுகூட இவளாக இருக்குமோ என்று ராஜத்தின் கணவனுக்குச் சந்தேகம் வந்துவிடுகிறது. அவன் சரஸ்வதியிடம் போய், ‘‘நீதானே எனக்குக் கடிதங்கள் எழுதினாய்?’’ என்று கேட்கிறான். அவள் உண்மை வெளியாகி விட்ட பதற்றத்தில், ‘‘அது என் தங்கையின் நல்வாழ்வுக்காக எழுதினேன்’’ என்று சமாளிக்கிறாள். ‘‘இல்லை, உன் மனதில் உள்ள ஆசைகள், கனவுகளைத்தான் கடிதமாக வெளிப்படுத்தி இருக்கிறாய். அதை இப்போதுதான் நான் புரிந்து கொண்டேன்’’ என்று அவன் அவள் மீது மோகம்கொள்ளும்போது, சரஸ்வதி, அவன் ராஜத்துக்கு மட்டுமே உரியவன் என்றும், இப்படிக் கடிதம் எழுதுவதன் மூலம் மட்டுமே தன்னை சாந்தப் படுத்திக்கொள்ள முடிவதாகவும், விதவைக்கு வேறு வழி இல்லை என்றும் சொல்லி, அவன் மனதை மாற்றுகிறாள். அப்போது வீட்டில் உள்ளவர்கள் வந்துவிடுகிறார்கள். சரஸ்வதி தன் அறைக்குப் போய் விடுகிறாள். அவர்கள் இருவருக் குள்ளும் முன்போல கண்ணுக்குப் புலப்படாத திரை விழுந்துவிடுகிறது என்று முடிகிறது கதை. காலம் ஒரு திரையை விலக்கும் போது இன்னொரு திரையை உண்டாக்கிவிடுகிறது போலும்! இன்று விதவையைத் திருமணம் செய்து கொள்வது எளிதாகி, அந்தத் திரை விலக்கப்பட்டுவிட்டது. ஆனால் காதல் திருமணமோ, வீட்டார் பார்த்து வைக்கும் திருமணமோ எதுவாயினும் திருமணத்தின் மூலம் உருவான அன்பும் காதலும் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே இலவம் பஞ்சு காற்றில் பறப்பது போலப் பறந்துபோய்விடுவது மட்டும் ஏன் என்று புரியவில்லை. திருமணம் இன்றும் விலக்கப்பட முடியாத நூறு திரைகள் கொண்டதாகவே இருக்கிறது.&lt;br /&gt;பரமபதத்தில் பாம்பு எது... ஏணி எது என்று பார்த்தவுடனே தெரிந்துவிடுகிறது. வாழ்வில் பாம்பையும் ஏணியையும் பிரித்தறிவது அத்தனை எளிதானதில்லையோ!&lt;br /&gt;மணிக்கொடி காலச் சிறுகதை ஆசிரியர்களில் முக்கியமானவர் கு.ப.ரா. 1902&amp;ல் கும்பகோணத்தில் பிறந்த இவர், முழு நேர எழுத்தாளராக வேண்டி, சென்னைக்கு இடம் மாறி கஷ்ட ஜீவனத்தை மேற்கொண்டவர். தமிழ்ச் சிறுகதையின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட முக்கியமானவர்களில் கு.ப.ராவும் ஒருவர். விடியுமா, கனகாம்பரம், நூருன்னிசா போன்ற இவரது கதைகள் மிகுந்த சர்ச்சைக்குள்ளாகி இருக் கின்றன. 42 வருடங்களே வாழ்ந்த கு.ப.ரா. மிகக் குறைவான சிறுகதைகளே எழுதியிருக்கிறார். ‘ஆண் &amp;amp; பெண் உறவை நுட்ப மான பரிசோதனைக்கு உட்படுத்துகின்றன இவரது கதைகள்’ என்கிறார் க.நா.சு. இவரது எழுத்தின் பாதிப்பு தி.ஜானகிராமன், கரிச்சான்குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம் எனப் பலரிடம் காணப்படுகிறது.&lt;br /&gt;http://www.vikatan.com/av/2005/jul/24072005/av0602.asp&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14025163-115651412888009853?l=e-arc.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://e-arc.blogspot.com/feeds/115651412888009853/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14025163&amp;postID=115651412888009853' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14025163/posts/default/115651412888009853'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14025163/posts/default/115651412888009853'/><link rel='alternate' type='text/html' href='http://e-arc.blogspot.com/2005/06/blog-post_29.html' title='கு.ப.ராஜகோபாலன்'/><author><name>Chandramukhi</name><uri>http://www.blogger.com/profile/16507154480362737534</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14025163.post-111997339765720378</id><published>2005-06-28T08:42:00.000-07:00</published><updated>2005-06-28T08:43:17.656-07:00</updated><title type='text'>Proverbs</title><content type='html'>தேனைத் தொட்ட கை நக்கத்தான் செய்யும்&lt;br /&gt;கோயில் பூனை சுருவத்துக்கு அஞ்சாது (சுருவம்னா சிலை)&lt;br /&gt;யான வாழ்ந்தா என்ன பூன தாலிய அறுத்தா என்ன (எனக்கென்ன எக்கேடோ கெட்டுப் போங்க)&lt;br /&gt;ஆயிரம் பீத்தச் சுளவு கூடினாலும் ஒரு அப்பத்துக்கு மாத் தெள்ளாது (சுளவுன்னா முறம். மான்னா மாவு. தெள்ளுறதுன்னா புடைத்துச் சுத்தம் செய்றது)&lt;br /&gt;கோனாத மாமியுமில்ல, கோனாத தென்னயுமில்ல (எல்லார்கிட்டயும் குறை இருக்கத்தான் செய்யுமாம். இதெல்லாம் சகஜமப்பாங்கறாங்க)&lt;br /&gt;மழைக்கால் இருண்டாலும் மந்தி கொப்பிழக்கப் பாயாது (மழை இருட்டிக்கிட்டு வர்றபோதும் குரங்கு சரியாத்தான் பாயுமாம், கொப்பை நழுவ விடாதாம். எந்த சூழ்நிலையிலயும் சமத்தா இருக்கவருக்கு)&lt;br /&gt;அப்பனுக்குக் கச்ச கட்டத் துணியில்லயாம், மவன் தஞ்சாவூர் மட்டுக்கும் வெள்ளை விரிச்சானாம் (தகப்பனின் கஷ்டத்தப் புரிஞ்சுக்காம செலவு செய்யும் ஊதாரிப் பிள்ளைக்கு. வெள்ளைன்னா விரிப்புக் கம்பளம்)&lt;br /&gt;வந்தவுடன் மாமியா பந்தலிட்டாளாம், வர வர மாமியா நொந்து போனாளாம்.&lt;br /&gt;வேலயக் கெடுத்துதாம் சாரம் (கைலி இல்ல. வீடு கட்டுறப்ப கட்டும் சாரம். யாரோ ஒருத்தர் எழுதின பழைய கவிதை வருது. காற்றுக்காக சன்னலைத் திறந்தேன், காற்றே சன்னலை மூடியது)&lt;br /&gt;உடையார் வீட்டு மோருக்கு அகப்பைக் கணக்கு இல்ல (இங்க உடையார்னா வாரி வழங்கும் வள்ளல். கணக்கில்லாம குடுப்பாராம்)&lt;br /&gt;ஈண்ட மாடு இரைப்பையைக் கடிக்குமாம் (குழந்தை பெத்தவுடன் தாய்க்கு ரொம்பப் பசிக்குமாம்)&lt;br /&gt;கொக்கு டொக்கறியும் காக்கா நோக்கறியும் (சின்ன சத்தம் கேட்டாலும் கொக்குக்குத் தெரிஞ்சிரும், காக்காய்க்கோ நம்ம கண்ணைப் பாத்தாலே என்ன செய்யப் போறோம்னு தெரிஞ்சிருமாம்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14025163-111997339765720378?l=e-arc.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://e-arc.blogspot.com/feeds/111997339765720378/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14025163&amp;postID=111997339765720378' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14025163/posts/default/111997339765720378'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14025163/posts/default/111997339765720378'/><link rel='alternate' type='text/html' href='http://e-arc.blogspot.com/2005/06/proverbs.html' title='Proverbs'/><author><name>Chandramukhi</name><uri>http://www.blogger.com/profile/16507154480362737534</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14025163.post-111997331953039845</id><published>2005-06-28T08:40:00.000-07:00</published><updated>2005-06-28T08:41:59.540-07:00</updated><title type='text'>அத்துவான வெளி - மௌனி</title><content type='html'>அத்துவான வெளி&lt;br /&gt;-மௌனி&lt;br /&gt;தன் வீட்டிலே சும்மாத் தலையோடு வாசல் நடந்துகொண்டு சுகமாக வாழலாம் என எண்ணியவனுக்கு எதிரே வாசலில் பெரிய மரமொன்று பார்வைகொள்ள நிற்கிறது. வாயிற்பக்கம் எப்போதாவது வந்து நின்று போவோர் வருவோர்களைச் சும்மா நின்று கவனிப்புக் கொள்வதில், இந்த மரத்தையும் பார்வையில் பட்டுப்போகுமளவிற்கு வெறித்து நோக்குவது உண்டு. எந்த யுகத்திலிருந்து இது இப்படிக்கு இங்கே ஸ்தலவிருக்ஷமென நிற்கிறது என்பது புரியவில்லை. ஆனந்தமாக அது ஆகாயத்திற்கும் பூமிக்குமாக வளர்ந்து எட்டுத் திக்கையும் நோக்கிப் படர்ந்ததென இருப்பது எதற்காகவென்றும் தெரியவில்லை. தன் வீடு ஒரு திக்கை நோக்கி நிற்பது சரியெனப் புரிந்தாலும் இந்த மரம் எந்தப் பக்கம் பார்த்து நிற்பது என்ற சம்சயம் யோஜனையினால் விடுபட முடியாது இவன் திகைப்பது உண்டு. அந்தமரம் ஒருபோதும் நிசப்தம் கொள்ளாது. எந்நேரமும் பக்ஷிஜாலங்களின் கூக்குரலைக் கொடுத்துக்கொண்டிருப்பது வினோதமாகப்படும். சிற்சில சமயம் ஊரை நாசம்செய்ய வானரங்களும் குடும்ப சகிதம் அதில் குடியேறி, வால்பிடிப்பில் தலைகீழாகத் தொங்கி கிரீச்சிட்டு கத்தி ஆடி அட்டகாசம் செய்யும். அது எச்சாதி மரமென்பதும் தெரியாது. காலையில் மரத்தடியில், மலர்கள் பாய் விரித்தாற்போல் வீதியில் சிதறிக் கிடந்து காட்சியளிக்கும்போது, வாசனை நெடியெனக் காற்றடித்த வாக்கில் உலகில் பரவிக்கொண்டிருக்கும். கும்பல் கும்பலாகப் பிள்ளைகள் அதைப் பொறுக்க வருவதையும் இவன் கவனிப்பது உண்டு.&lt;br /&gt;பின்னிருந்து 'என்ன சார் ஸௌக்கியமா? பார்த்து ரொம்ப நாளாச்சு' என்ற குரல் கேட்டதென திரும்பினான். அந்த அந்திவேளையில், தன் நிழல்கூட இவனுக்குத் தெரிய நியாயமில்லை - கண்டு கூப்பிட்டதென நினைக்க. எனினும் சுற்றிச்சுற்றி யாரென இவன் காண அவனும் சுற்றியதுபோன்று ஒருவர் முகம் ஒருவர் பார்க்க இவன் எதிரில் வந்தவன், 'என்ன ஸார், உங்களைப் பார்ப்போமென்று வந்தால் இப்படி ஊரையெல்லாம் சுற்றுகிறீர்களே' என்று சிரித்துச் சொல்லிக்கொண்டே ஒருவன் இவன் எதிரில் நிற்பதை உணர்ந்தான். எதிரில் கண்டதும் இவன் மேலே கடந்து போகலானான். அவன் இவனுக்கு மரியாதையாக ஒதுங்கிப் போகிற வழி விட்டு இவனைத் தொடரலானான். அவனை யாரெனப் புரியாததிலும், இப்போது பார்த்ததில் எப்போதோ பார்த்து மறந்ததென எண்னமும் இவனுக்குத் தோன்ற இருந்தது. மேலும் தனக்கு யாரையும் தெரிந்தும் தெரியாததுபோலவும் இருக்க முடியும் என்ற எண்ணமும் இவனுக்குத் தோன்ற இருந்தது. மேலும் தனக்கு யாரையும் தெரிந்தும் தெரியாததுபோலவும் இருக்க முடியும் என்ற எண்ணமும் கொள்ள யோஜனையில் அவன் புரியாவிட்டாலும் சிறிது அவனோடு பேசுவதில் கண்டுகொள்ளமுடியுமெனவும், அவசியமானால் தெரியவில்லை என நம்பவைத்துத்தான் தன் வழியே போகவும் முடியுமென நினைத்து இவனும் 'ஆமாம் ஸார் . ! ரொம்ப நாளாச்சுப் பார்த்து...' என்றான்.&lt;br /&gt;'தெரியாதவர்களும் தெரிந்தவர்களென ஏமாற்றுவது உண்டு ஸார்...நான் அப்படிஇல்லை. நிச்சயமாக உங்களுக்குத் தெரியும்...எனக்குத் தெரியாதவர்களே ஊர் உலகில் இல்லை ஸார்' என்றது ஒரு விபரீத நியாயமாகப் பட்டது.&lt;br /&gt;'ஆமாம் ஸார் அப்படி நினைப்பது தவறு' என்றான் இவன்.&lt;br /&gt;'இப்போது நீங்களா பேசுகிறீர்கள்-நான்தானே-உங்களைப் பிடித்து நான் பேசாதுபோனால் நீங்கள் தெரிந்தும் தெரியாதது மாதிரித்தானே போவீர்கள்...' என்று உடம்பை நெளித்துக்கொண்டு கெஞ்சும் பாவனையில் பேசிவந்தது இவனுக்குப் பார்க்க பரிதாபமாக இருந்தது. நிச்சயமாக அவனைத் தெரிய ஞாபகம் கொள்ள நினைத்தான். அவன் அசடுமாதிரி அடிக்கடி சிரித்தது மேலும் இவனுக்கு யோஜனைகள் கொடுத்தன, அவனை யாரெனத் தெரிந்துகொள்ள முடியாதபோது, அவன் சிரிப்பிலிருந்தாவது ஞாபகம் வருகிறதா எனக் கவனித்தவனுக்கு, தன்னுடைய சிநேகிதன் ஒருவன் ஞாபகம் வந்தது. அதுவும் தவறென உணர, அந்நண்பன் எப்போதோ செத்து சுடுகாடடைந்ததும்கூட ஞாபகம் இருந்தது. அவனே இல்லாது அவன் சிரிப்புமட்டும் உலகில் இருந்தால், அவனென இவனை இப்போது எப்படிக் கொள்ள முடியும் என்பதும் புரியவில்லை.&lt;br /&gt;'ஆமாம்-' என்றான் இவன். 'நாலுபேரைத் தெரிந்து பிடித்துவிட்டால் எப்படி ஸார் உங்களைப்போல மறக்க முடிகிறதா...' என்றான் அவன்.&lt;br /&gt;'இப்போதெல்லாம் நான் வெளிக் கிளம்புவதில்லை... அதனால்தான்...' என்று தன் குற்றமுணர்ந்த பேச்சென இவன் பேசினான்.&lt;br /&gt;'நானும் அப்படித்தான் நினைத்தேன். இந்த ஊர் உலகைச் சுற்றும் நம் கண்ணில் ஸார் படவில்லையே என்று...' என்றான் அவன்.&lt;br /&gt;பேசிப் பிடித்தது உதறமுடியாது பேசப்பேச பீடிக்கிறதே என இவன் எண்ணலானான். சிறிது பேச்சை நிறுத்தி மௌனமானான்.&lt;br /&gt;உங்களைப் பார்க்க நேர்ந்தது ஏதோ யதேச்சையாக நேர்ந்தது என்று நீங்கள் நினைக்கலாம். உங்களைப் பார்க்கமுடியும் என்ற நம்பிக்கையில் நான் உங்களைப் பிடித்தது எதேச்சையில் இல்லை ஸார். மனுஷாலை நான் சினேகம் கொண்டாடாமல் என்னால் இருக்க முடியாது, உங்களைப்போல என்ன இப்படிப் பேசாது நீங்கள்...' என்றான் அவன்.&lt;br /&gt;'ஒரு சிநேகிதர் வீட்டிற்கு...' என்று ஒரு அறைகுறை முணுமுணுப்பெனக் காற்றிலும் கரையும் போக்கிற்குச் சொல்ல விருந்ததையும் அவன் கேட்டு, 'என்ன ஸார் உங்கள் சிநேகிதர் என் சிநேகிதர் அல்லவா, போவோம்...' என்று சொல்லிக்கொண்டே தொடரலானான். பத்து தப்படிக்குள் இவ்வளவு கூச்சலும் முணுமுணுப்புமென்றால் குரைகாலமும் தன்னால் எப்படி வாழ்க்கையைச் சகித்துக்கொள்ள முடியுமென்பதில் மனது விடுபடமுடியாத ஒரு பயம் குடிகொள்ள இருந்தது. எதிரே தோன்ற முடியாவிட்டாலும் அடிமடியில் புகுந்து பேசுவது போன்றிருந்தது பேச்சுக்கள். நினைக்க நினைக்க மனது பீதி அடைந்தது. அவனை மறந்துவிட முடியுமென்பதற்கில்லை. மறக்க வேண்டியதை அடிக்கடி ஞாபகப்படுத்திக்கொண்டு இருக்க வேண்டியிருப்பதால் மறப்பதை ஞாபகமெனத்தானே கொள்ள முடிகிறது. அவனைப்பற்றி யோஜிப்பதில் யாரெனத் தெரியவில்லை எனக் கொள்ளுவது தனது முக்கிய காரியமென எல்லாவற்றையும் யோஜிக்கலானான். தெரியவில்லையெனக் கொள்வதிலும், தனக்குத் தெரியாத ஒரு பெரிய மனிதனாக அவன் ஏன் இருக்கமுடியாது. இந்த ஜன்மத்தில் இருக்காமலிருந்தாலும் போன அல்லது எந்தப் பிறவியிலாவது இருக்கலாம். தனக்கு முன்காலத்தில் அநேக பிரமுகர்களின் சம்பந்தம் உண்டு என்பதை எண்ணும்போதும் தெரியாத மறதி எனக்கொண்டு தவறெனவும் கொள்ளமுடியாது, சிரிக்கவும் சிரித்துக்கொண்டிருந்தான். இவனை அவசியம் யாரெனக் கண்டுகொள்ளவேண்டியிருப்பது யோஜனைகளின் அவசியத்தையும், சிக்கல்களையும் தோற்றுவித்தன. அவனை விட்டகல ஒரு யோஜனையும் புரியவில்லை. எதிரே ஒரு கோவில் தெரிய இருந்தது. ஒருவகைக்கு ஆறுதலாகவும் போக்கிடமெனவும் தோன்ற அதையே ஆதாரமென நினைத்து நடந்ததில், அதுவும் எதிரே சமீபமாக வந்து நின்றது.&lt;br /&gt;ஊர்த் தெருவில் நின்ற ஒவ்வொரு வீடாக இவனுக்குக் காட்டி, வசிக்கும் அந்த அந்த மனிதர்களை, தனக்குத் தெரியாதவர்கலை, காணப்போவதாகச் சொல்லி, அவனிடமிருந்து தப்பிக்க வழியாக இவனுக்குச் சொல்லி, அவனிடமிருந்து தப்பிக்க வழியாக இவனுக்குச் சொல்ல முடியவில்லை. ஒருக்கால் மறந்து அவனுக்கு அவன் வீட்டையே காட்ட, அது அவன் வீடாக இருந்து அவன் சிரித்தால் தான் வெட்கமடைய முடியாதா என்ற எண்ணத்திலும் யோஜனையைக் கைவிட இருக்கிரது. நிச்சயமாக அவனைத் தெரிந்து அந்த வீட்டுக்காரன் இல்லை என்பதை தீர்மானித்தால் அல்லது எந்த வீட்டுக்காரனாகவும் இவனெனக் கொள்ளமுடிகிறது. இப்படிக்கான விஷயங்களினின்று விடுபடக் கோவில் மகத்துவம் அதிகமாகிக்கொண்டிருந்தது.&lt;br /&gt;கோவில் சென்று சுற்றுவதில் அவனுக்கு வீடு திரும்ப ஆவல்கொண்டு தன்னைவிட்டுச் செல்லலாம் என்ற உத்தேசத்தை வெகு ஜாக்கிரதையாக அவனுக்குப் புரியாது காட்ட எண்ணி 'பார்க்க வேண்டியவர் ஒருக்கால் கோவிலில் இருக்கலாம்...அங்கேயே பார்க்க முடியலாம்...' என முணுமுணுத்துக் கொண்டே கோவிலையடைந்தான். அசட்டு மனிதனென அவமதிப்புக் கொள்ளமுடியவில்லை. அப்படி அவன் நினைவில் தானும் கலந்து தெரிவதால் தனக்கும் அவமானம் தோன்ற இருக்கும். கோவிலில் அவனை அலைக்கடிக்கும் அளவிற்குத் தாமதம் செய்ய உத்தேசித்து, யதோக்தமான தரிசன உத்தேசத்துடன், அர்ச்சனைக்கான பழம் தேங்காய் பாக்கு முதலியன வாங்கிப்போனான் இவன். ஒன்றை மறக்க அதை ஞாபகத்தில் கவனமாக வைத்துக்கொண்டு இருக்கவேண்டியிருப்பதில், எப்படி மறக்க முடிகிறது. இந்த வகையில் சாமியென்ன பூதம் என்ன எல்லாம் ஒரே விதத்தில்தான் சஞ்சலம் கொடுக்க இருக்கின்றன மனிதர்களுக்கு.&lt;br /&gt;தொடருபவனைச் சரிக்கட்ட, கோவில் தரிசனம் செய்துவிட்டு அவரையும் இருந்தால் பார்த்து அழைத்துவருவதாகவும் இவன் சுகமாக இங்கு இருப்பதில் தான் திரும்புகாலில் அவனைச் சேருவதாகவும் சொல்ல நினைத்தவனைத் தடுத்து 'என்ன ஒற்றுமை போங்கோ ஸார் மனது. நானே சொல்ல விருந்ததை நீங்கள் செய்து காட்ட' எனச் சொன்னான், தனக்குப் புரிந்ததை. இல்லை, மன ஒற்றுமை அது இது என்பதிலும், இரு உடல் ஒரு எண்ணமோஒ அல்லது ஒரு உடல் இரு எண்ணமோ ஆக ஒன்றிலும் நம்பிக்கை இல்லை என்பதை-காதலைப்பற்றித் தன் எண்ணமும் அநுபவமும் நினைவுக்குவர இவன் உடம்பு கூசிக்குறுகியது வருத்தமாகவும் இருந்தது. கையில் இருந்த சாமான்களை அவன் பிடுங்கியதுகூட இவனுக்குத் தெரியவில்லை. 'நான் இருக்கும்போது உங்களுக்கு இந்தச் சிரமம் வேண்டாம் ஸார்' என்று கூவிக்கொண்டே சோழனைப் பிடித்தவனையும் மிஞ்சித் தொடரலானான். தன்னையும் தூக்கிக்கொண்டு அவன் தொலைந்தால், அவனோடு போவதில் தன் பொறுப்பு என்ற தொல்லையின்றியாவது வாழலாமெனவும் நடக்குமெனத் தோன்றவில்லை. இப்படி ஏதாவது எதேச்சையில் புண்ணியம் வருமென்றாலும் அதைத் தூக்கிக்கொண்டு போகத்தன் தொடருகிறான் போலும்.&lt;br /&gt;இரவு அந்நேரம் கோவிலில் கூட்டமே இல்லை. அர்ச்சகரும், கவனிப்பை யார் மேல் கொள்வது என்று புரியாமல் பார்த்து விழித்துக் கொண்டிருந்தார். அவனோ மேல் துண்டை இடுப்பில் சுற்றிக்கொண்டு கைகட்டி கண்மூடி நின்று கொண்டு, தேவாரம் திருவாசகப் பதிகங்களை இரைந்து அழுது கொண்டிருந்தான். அப்படி கேட்கவே அவனுக்கு நாராசமாக ஒலித்தது. அவனைப் பார்ப்பதும்கூட. ஒன்றிற்கும் ஒன்றும் செய்யமுடியாது. அர்ச்சனை முடியும். எங்கேயாவது ஓடி மறைய முடியாதா என்று எண்ணி நின்றான். அர்ச்சனை முடிந்தது. பிரசாதங்களையும் அவனே ஏற்றுக்கொண்டு திரும்புகாலில், யார் யாரைப் பீடிக்க இந்த உலகம் இப்படிச் சீரழிந்து கொண்டிருக்கிறது என்ற புனருத்தாரண விசனத்தில் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருந்தான். வெளியே வந்ததும் யார் யாரைத் தொடருகிறது என்பது இல்லாமல் போய்க்கொண்டிருந்தனர். எதிரில் மரம் கண்முன் நிற்க இவன் எங்கேயோ அந்தரத்தில் பறந்து அதன் மேல் உட்காரவோ ஆடவோ முடியாது சுற்றுவது போல இருந்தது மனதிற்கு குஷி கொடுக்க இருந்தது. தனக்கு மட்டும் அவன் தெரிகிறான் என்றும் அவன் தன்னை கண்டுகொள்லமுடியாது எங்கேயாவது சுற்றிக்கொண்டிருக்கும் அவனைத் தான் தெரிந்து கொண்டு 'என்ன ஸார் ஸௌக்கியமா?' என்று திடுக்கிடக் கூப்பிடவேண்டுமெனத் தோன்ற தன்க்குத்தானே இவன் சிரித்துக்கொண்டான்.&lt;br /&gt;அவனோடு சுற்றி நான்கு வீதிப் பிரதக்ஷினமும் முடிந்துவிட்டது. மற்றொரு சந்தையும் அவன் கடந்துவிட்டான். அவன் பேசாது மௌனமாகப் போவதும் மனதிற்குப் பிடிக்கவில்லை. தான் இப்படி அவனுக்குத் தோன்றா வகையில் அந்தர்த்தியானமாகியதை அவன் தெரிந்துகொண்டே பேசாது இருந்தால் தன் மதிப்பு எவ்வளவு குறைபடுகிறது என்று எண்ணியவனுக்கு இப்படியே எவ்வளவு காலம் வாழமுடியுமென்பது புரியவில்லை. வெட்கப்படும் வகைக்கு அவனோடு சல்லாபம் கொள்ளவும் தன்னைத் தயாராக்கிக்கொண்டான்.&lt;br /&gt;இரவு நிசி நேரம் தாண்டிவிட்டது. சினிமாப் பார்த்தவர்களும் திருப்தியுடன் வீடடைந்துவிட்டனர். இவனுக்கு வீடடைய வழியில்லை. அவன் வீடு இவனுக்குத் தெரியாது. அவன் வீட்டை நோக்கிப் போகிறான் என எண்ணவும் அவனைக் கண்காணித்து அவனுடன் சுற்றுவதிலேயே திருஷ்டியாக இருந்தான். சும்மா எங்கே எங்கேயோ கண் காணாது படுத்துத் தூங்கியிருந்த நாய்களெல்லாம் தங்கள் இருப்பு மகத்துவத்தைப் பிரபலப்படுத்தக் குரைக்கவும் ஊளையுடவும் ஆரம்பித்தன. நாய்களுக்கும் தெரிவது தனக்குப் புரியவில்லையே என்ற விசனத்தில்கூட சில சமயம் இவன் ஆழ வேண்டியிருந்தது.&lt;br /&gt;முன்பு அவனைப் பார்த்தவுடன் தெரியவில்லை என்பது தெரிந்தவுடன் 'யார் நீ-' எனத் தைரியத்தில் அதட்டியோ அல்லது நைஸாகக் குழைந்தோ கேட்டிருக்கலாம். அவனும் என்ன பதில் சொல்லுவது எனப் புரியாது தத்தளிப்பதைத் தெரிந்து கொண்டிருக்கலாம். அதையெல்லாம் இவ்வளவு காலம் கடந்து நினைப்பதில் என்ன பயன் என்றும் இப்படி எப்படிச் சும்மா ஊர் உலகைச் சுற்றுவதில் சுகமடைய முடிகிறது என்றும் எண்ணலானான். ஒருவர் ஒருவர் நிழலென மாறி மாறி பற்றிப் போய்க் கொண்டிருந்தனர்.&lt;br /&gt;தன் நிழலென அவனைப் பார்த்தபோது, மனதில் திடீரென ஒரு யோஜனை தோன்றியது. தான் நினைக்கும்போது நினைத்த காரியம் கைகூடி விளையுமானால், எவ்வளவு சுலபமாக அவனை ஏமாற்றித் தான் விடுபட்டு, வாழமுடியும். இறகு முளைக்கத் தான் பக்ஷிஜாலங்களுடன் கூடி அந்த மரத்தில் கத்திக்கொண்டு இருக்கலாம் என நினைத்துத் துள்ளி நடக்கலானான். என்ன வேடிக்கையென அவன் கூவக் கேட்டுக் கொஞ்சம் நிதானமடைந்தான். அவனாகவே தானும் ஆகிக்கொண்டிருப்பதில்தான் அவன் நிழல் தொடருவதினின்றும் விடுபடமுடியும் என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது...&lt;br /&gt;எட்டிய வெளியில் ஒரு விளக்கொளி தெரிந்தது. உலகமே எரியத் தோன்றுவதும் எட்டி இப்படிச் சிறு விளக்கெனத் தோற்றம் கொடுத்து இருக்கலாம். ஒரு லக்ஷியக் குறிப்பாகக் கண்டதில் எப்படிப் போகிறோம் என்ற உணர்வே இவனிடமிருந்து அகன்றுவிட்டது. அதையே குறியெனக்கொண்டு ஒரு பைத்தியக்கார நிதானத்தில் போய்க்கொண்டிருந்தான். நெருங்க நெருங்க அது ஒரு மயானம் என்பதும் பிரேதம் எரியும் ஒளிதான் வீசியது எனவும் புரியலாயிற்று. தன் முன் தான், தன் நண்பன் சென்று கொண்டிருப்பதைப் பார்த்துத் திரும்ப வழியும் இருளில் மறைந்துவிட்டது என்பதையும் திரும்பாமலே இவனுக்குத் தெரிய இருந்தது. பொறுப்பற்றுத் தத்தம் தவறுகளுக்குத் தாம் என்பதின்றித் தோன்ற மயானமும் ஒளிக்கொள்ள வெகு பிரகாசமாகக் கண்கூச நன்கு அழகாகப் பிரேதம் எரிந்துகொண்டிருந்தது இவனுக்கு ஒரு வகையில் திருப்தி அளித்துத் தோன்றியது. மேலும் பூரண திருப்திக்கு, என்று தானும் அதாகி மேலும் ஒளி கொடுக்க எரிய வேண்டுமெனவும், அல்லது தான் தவிர எல்லாம் ஒளி கொடுக்க வேண்டுமெனவும், அல்லது தான் தவிர எல்லாம் ஒளி கொடுக்க எரியவேண்டுமென்ற இருவகை யோஜனையில் ஒருமை காண நின்றுவிட்டான். உயிர் நினைவும் மயான நினைவும் ஒன்றுகூடிப் பயம் காணச் சிறிது நேரம் ஆகியது. பக்கத்தில் துணையிருப்பதை எண்ணி அவனை வெகு பிரியமாகப் பார்த்தான். அவன் அங்கு இருப்பதையோ இல்லாததையோகூட கவனிக்கவில்லை.&lt;br /&gt;ஒரே இருள் அத்துவான வெளி. எங்கிருந்தும் பலப்பல பக்ஷிக் குரல்கள் கேட்டுக்கொண்டிருந்தன. வானரங்களும் மேலும் பூனைகளும் ஏன் நாய் நரியும்கூட ஆகாயத்திலிருந்தௌ பூமியைநோக்கிச் சப்தித்ததும் கேட்டது.....ஒரு பெரிய மரம் எங்கிருந்து பிரும்மாண்டமாக இந்த சப்தத்தில் இங்கு எதிரே வளர்ந்து நிற்க நேர்ந்தது என்பது தெரியவில்லை. அடிமரம் பார்வைகொள்ளும் போதே பெரிதாகிக் கொண்டிருந்தது. நடுவில் யானையெனப் பெரிய பொந்து ஒன்று தெரிந்தது. ஒரு பெரிய யானை மீது ஏறிக்கொண்டு தலையிலும் பெரிய ஒரு முண்டாக கட்டிக்கொண்டு தட்டுப்படாமல் அந்தத் துவாரத்தில் வழியாகப் பாதாளம்வரையில் ஊர்வலம் செல்லலாமெனத் தோன்றியது. கிளைகள், இலைகள் ஒன்றுமில்லையென, ஒரு கரிய கவிந்த வானம் மேகமெனத் தலையில் பரந்து தெரிய, மொத்தமாக ஒரு பெரிய குடை விரித்ததெனத் தோன்ற இருந்தது. வேறு ஒரு விதமாகவும் அது மரமில்லை என அங்கே அப்படி நின்றிருக்கமுட்யாது என்றும் தோன்றவிருப்பதே அது மரமெனத் தோன்றப்போதுமான அத்தாக்ஷியாக இருந்து நிச்சயமாக மரமெனவே இருந்தது. முதலில் எல்லாம் வேடிக்கையாகத்தான் இருக்கமுடியும். மயானம், பிணம் எரிதல், எதிரே ஒரு பெரிய மரம், எல்லாம் தெரிய ஒரு அத்துவானவெளி......ஆனால் யோஜிக்க யோஜிக்கவோ......அல்லது பார்க்கப் பார்க்கவோ இதற்கென அதுவும் அதற்கென இதுவுமாக ஒன்றை ஒன்று நிழலெனக் காட்டிக் கொடுக்க இருந்தது. எல்லாம் வேடிக்கை எனவும் ஒன்றிலும் ஒன்றுமில்லை எனவும் இந்த மயானப் பிரேத ஒளியில் தோன்றவும் தோன்றலாயின. மயான ஒளி இருந்தும் அதைப் பொருட்படுத்தாது பயத்தில் கண்கள் தாமாகவே தீக்ஷண்யம் அடைந்தன. பயமடைந்து கால்கள் பூமியில் புதைவு கொண்டன. தலைதெரிய தான் மறைந்தே எல்லாவற்றையும் பார்ப்ப தான உணர்வு கொண்டான்......கொழுந்துவிட்டெரியும் ஜ்வாலையைச் சுற்றி சிறு சிறு கருப்புத்திட்டுகளெனத் தோன்றியவை கூத்தாடிச் சுற்றி சுற்றி கும்மாளம் போட்டுக் குதிப்பதைப் பார்த்தான். இவைகள் சில்லறைப் பிசாசுகள் என்பது நிச்சயமாகியது. அவைகளின் தலை மேலே கருமையாகப் பறவைக் கூட்டங்கள், கரையாமலும் காகமெனத் தோன்றச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தன. பக்கத்தில் நின்ர அப்பெரிய மரமும் கரைந்து கத்திக்கொண்டு ஆடியது. இந்தக் குட்டிப் பிசாசுகள் எல்லாமுமே தலைகளில் பூச்சூட்டிக் கொண்டிருந்தது தோன்ற நக்ஷத்திரமென மினுக்கும் ஒளிப் பூச்சிச் சுட்டுகளை ஒன்று சேர்த்துக் குல்லாயாகத் தரித்திருந்தன. இவைகளின் ஆட்டத்தைவிட ஒளி கொடுக்க எரியும் பிரேதமும் சேர்ந்து ஆடியதுபோல அவைகளின் நிழலாட்டம் வெகு விநோதமாகத் தெரிந்தது. களைத்ததெனச் சில அடிக்கடி சோர்வு கொண்டு திடீரென கீழே விழுந்து கொண்டு பன்றிகல்லென மேயவும் ஆரம்பித்தன. கண்ட கண்ட நிழல்களைத் தின்று திருப்தியில் உறுவிச் சிரித்தது பயங்கரம் கொடுத்தது. துணையென இப்போது அவனை வேண்டிப் பக்கத்தில் இருப்பதை நினைத்துக்கொண்டு எதிரே பார்த்தான். அவைகளுக்குத் தலைமை தாங்கி அவனும் வெகு குஷியில் குதித்துக் களைக்கும்போது தலையை மட்டும் ஆட்டிக்கொண்டு தாளம் போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் நாதியற்ற பயத்தை இவன் மனது கடுமையாகக் கொள்ள ஆரம்பித்தது. நிழலைப் பறிகொடுத்து நின்ற பிசாசுகள் திடீரென எகிறிக்குதித்து மரத்தின் மேல் போய் மறைந்தன. மறுபடியும் தொடர, நிழலை அடையவேண்டி இரவிலும் நிழல் கொடுக்க நின்றிருக்கும் மரத்திடை மறைந்தது போலும். மரம் சலசலத்து இலைகளும் இரைந்துபேசியது போலும். மொக்குகள் உதிரக் கீழே விழுமுன் பூவாக மாறிக்கொண்டிருப்பதையும் இவன் கவனித்தான். இந்த மரத்திலிருந்து எப்படி விதவிதமானத் தனித்த சப்தங்கள் வரவிருக்கின்றன என்பதைக் கவனிக்கும்போது அநேக பூனைகளும் குரங்குகளும் மற்றவைகளும் வாலைக் கிளைகளில் சிக்கவைத்துக்கொண்டு தலைகீழாகத் தொங்கி ஆடிக்கொண்டு தவிப்பதைப் பார்க்கமுடிந்தது. வால் விடுபட்டோ அல்லது இழக்கப்பட்டோ மரத்தை விட்டோட பயம் கொண்டு வெகு வேகமாக ஆடியவைகல் ஒன்றை ஒன்று சில சில சமயம் இடித்துக் கட்டிக் கொண்டு சல்லாபித்து சண்டையிட்டு அழுவதும்கூட தெரியக்கேட்டது வாலிழந்து விடுபட்டவைகள் கீழே விழுந்து குட்டிப் பிசாசுகளான மீண்டும் நிழலோடு குதித்து ஆடலாயின.&lt;br /&gt;தன் நண்பனுக்குக் களைப்பு. தூங்குமளவிற்கு உண்டாகிவிட்டது. திடீரென மறைந்தவனை இவன் பக்கத்தில் கண்டான். கீழேயும் விழுந்து புரண்டான். சிறிது ஏமாந்து பார்த்துக்கொண்டிருந்ததில் தன்நிழலை அவன் தின்றுவிட்டது நினைவுவரவே......பீதி. மனதிற்கு ஒரே பீதி. பைத்தியமெனச் சிரிப்பு தன் முகத்தில் கண்டதும் மேலும் பீதி அடைந்தான். உடல் கொண்டிருப்பதும் ஒரு அநாதி வழக்க தோஷத்தின் வாழ்க்கை எனவும் மிக அலுப்புக்கொண்டு விழித்தான்.&lt;br /&gt;காலையில் வீட்டு வாசலில் மரம் நின்றிருந்தது-ஆகாயத்திற்கும் பூமிக்குமாக எட்டு திக்கும் பரவி-எந்நேரமும் சப்தம் கொண்டு வாவென்றழைக்கும் தோற்றத்துடன்-சிறுவர்கள் மலர்களைப் பொறுக்கிக்கொண்டிருந்தனர். வீட்டுக்காரர் இன்னும் எழுந்து வீட்டு வாயிலில் நின்று தங்களைப் பார்க்கவில்லை என்பது தெரிந்து மேலே பார்க்காது மேலும் மலர்களை பொறுக்கிச் சென்றனர் சிறுவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்காப்பு மணி: மௌனியின் கதைகளுக்கு இப்போது எவரிடம் காப்புரிமை இருக்கிறதென்று தெரியாது; விற்பனையின் மூலம் மௌனி பெறுவதைவிட இதுபோன்றவற்றின்மூலம் மேலும் சில வாசகர்களைப் பெறக்கூடுமென்ற நம்பிக்கையில் இதை இடுகிறேன்; ஆட்சேபங்களிருப்பின் பின்னூட்டமிடவும், கதையை நீக்கிவிடுகிறேன். இங்கே வந்தபோது கொண்டுவந்த வெகு சில புத்தகங்களுள் ஒன்று. நன்றி: மௌனி கதைகள், பீக்காக் பதிப்பகம்.&lt;br /&gt;Posted by மாண்ட்ரீஸர் : 11:25 PM&lt;br /&gt;Rate this post at www.thamizmanam.com Current rating is: (இதுவரை 7 பரிந்துரைகள்) Click on the stars for voting pad.&lt;br /&gt;Comments:&lt;br /&gt;மௌனி சிறுகதைகள் மீண்டும் தொகுப்பாக பல வருடங்களுக்குப் பின்னர் இப்பொழுது வெளிவந்துள்ளது.&lt;br /&gt;பதிப்பக விவரங்களை வீட்டுக்குப் போய் பார்த்து பின்னர் எழுதுகிறேன்.&lt;br /&gt;Posted by Badri : 4:28 AM&lt;br /&gt;நன்றி பத்ரி: அப்படியே, வலையில் இடுவதில் ஏதேனும் சிக்கல் இருப்பின், தொடர்புக்கு மின்னஞ்சல் முகவரி ஏதேனும் இருப்பினும் இடவும். பிரச்னை எனில் நீக்கிவிடுகிறேன்...&lt;br /&gt;Posted by மாண்ட்ரீஸர் : 9:24 AM&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14025163-111997331953039845?l=e-arc.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://e-arc.blogspot.com/feeds/111997331953039845/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14025163&amp;postID=111997331953039845' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14025163/posts/default/111997331953039845'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14025163/posts/default/111997331953039845'/><link rel='alternate' type='text/html' href='http://e-arc.blogspot.com/2005/06/blog-post_111997331953039845.html' title='அத்துவான வெளி - மௌனி'/><author><name>Chandramukhi</name><uri>http://www.blogger.com/profile/16507154480362737534</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14025163.post-111997314135205430</id><published>2005-06-28T08:37:00.000-07:00</published><updated>2005-06-28T08:39:01.356-07:00</updated><title type='text'>திலீப்குமார்</title><content type='html'>கதாவிலாசம்&lt;br /&gt;எஸ்.ராமகிருஷ்ணன்&lt;br /&gt;மாநகர கோடை&lt;br /&gt;கோடை கருணையற்றது. அது மனிதர்களைத் தங்களது இயல்பிலிருந்து மூர்க்கம் கொள்ளச் செய்துவிடுகிறது. வெருகுப் பூனை காட்டில் அலைவது போல மூர்க்கமாகச் சுற்றிக்கொண்டு இருக்கிறது கோடையின் சூரியன்.&lt;br /&gt;உறங்கி எழும்போதே நாவு உலர்ந்து இருக்கிறது. தண்ணீருக்குள்ளேயே மூழ்கிக்கிடக்க மாட்டோமா என்று மனதும் உடலும் ஏங்குகிறது. மனிதர்கள் மட்டுமல்ல, ஆடு மாடுகளும் மரங்களும் கூட நீர் வேட்கையில் உடல் வெளிறிவிடுகின்றன. வீட்டின் கதவுகள் ஜன்னல்கள் யாவையும் ஊடுருவி பழுப் பேறிய வீட்டின் தரைகளை, சுவர்களைத் துடைத்துச் சுத்தம் செய்கிறது முரட்டு வெயில். யாவையும் அணைத்துக் கொள்கின்றன வெளிச்சத்தின் அகன்ற கைகள். உலகம் வெயிலின் தித்திப்பில் கரைகிறது.&lt;br /&gt;இன்னொரு புறம் பெண்களுக்குக் கோடையைக் கடப்பது என்பது பயமும் பெருமூச்சும் கோபமும் எரிச்சலும் கொண்ட நீள் பயணம். தண்ணீர் லாரிகளின் பின்னே குடங்களுடன் ஓடி நீர் பிடிக்க வேண்டும். உறக்கத்தில் கூட கண் இமைக்குள் வெயில் பிரகாசிக்கும் குழந்தைகளின் அழுகுரலும் சுவர்களில் இருந்து வடியும் வெக்கையுமாக கோடை வாழ்க்கையை ஓர் உலர்ந்த திராட்சைப் பழத்தைப் போல சாறு வற்றிப்போனதாக ஆக்கியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சில வருடங்களுக்கு முன்பு, திருவான்மியூர் பகுதியில் ஒரு நண்பனின் அறையில் இருந்தேன். அந்த வீட்டுக்காரர் பலசரக்குக் கடை வைத்திருந்தார். அவரது ஐம்பது வயது மனைவிதான் வீட்டை நிர்வகித்து வந்தார். கீழே வீட்டுக்காரரும் இரண்டு குடித்தனங்களும் இருந்தார்கள். மாடி இரண்டாகப் பிரிக்கப்பட்டு, அங்கேயும் இரண்டு குடும்பங்கள் இருந்தன. அதற்கும் மேலே ஆஸ்பெஸ்டாஸ் போட்டது எங்களது அறை. அதில் ஆறு பேர் குடியிருந் தோம். வீட்டுக்காரப் பெண்மணி மிகவும் கண்டிப்பானவர். காலை ஆறு மணியில் இருந்து ஏழு மணி வரை மோட்டார் போடுவார். எங்களைப் போன்ற தனிக் கட்டை களுக்கு ஆளுக்கு ஒரு வாளி தண்ணீர். குடும்பத்தினருக்கு தினமும் இரண்டு குடம், இரண்டு வாளி தண்ணீர். இதற்கு மேல் ஒரு குவளை தண்ணீர் கூடக் கிடைக்காது. நண்பர்கள் எவராவது அறைக்கு வந்துவிட்டால், குளிப்பதற்காக அருகில் உள்ள தரமணியில் மாணவர்கள் விடுதிக்குக் கூட்டிச் செல்ல வேண்டிய நிலை. ஆனாலும், அந்தத் தெருவில் இந்த வீட்டில் மட்டும் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. மற்ற தெருவாசிகள் குடங்களுடன் தண்ணீர் லாரியின் பின்னால் ஓடிக்கொண்டு இருந்த காலம் அது.&lt;br /&gt;அக்னி நட்சத்திரம் துவங் கிய நாள்... ஆஸ்பெஸ்டாஸ் அறையில் மதியம் பாயை விரித்துப் படுத்தபடி மோபிடிக் நாவலை வாசித் துக்கொண்டு இருந்தேன். உப்பு உருகிக் கசிவது போல சுவரிலிருந்து வெக்கை பிசுபிசுத்து வழிந்தது. எங்கள் அறையில் மின்சார விசிறி கிடையாது. மின்சாரக் கட்டணமாக நாங்கள் நூறு ரூபாய் மட்டும் தருவதால் எங்களுக்கு இதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. வீட்டு ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டில் யாரோ ஆள் ஏறி நடப்பது போல வெயில் ஆங்காரத்துடன் நடந்து செல்வது தெரிந்தது.&lt;br /&gt;ஒரு குவளை தண்ணீர் கிடைத்தால் போதும், மேலே தெளித்துக்கொள்ளலாம் என்று தேடினால் வாளியில் துளி தண்ணீர் இல்லை, மாறாக வெயிலில் சூடேறி உருகிவிடும் நிலையில் இருந்தது பிளாஸ்டிக் வாளி.&lt;br /&gt;யாருக்கும் தெரியாமல் ஒரு வாளி தண்ணீரைத் திருடி வந்துவிடலாம் என்று யோசனையாக இருந்தது. அநேகமாக கீழ் வீட்டில் யாவரும் உறங்குகிற நேரம் இது. மெதுவாகப் படிகளில் வாளியோடு இறங்கி வரும்போது என்னைப் போலவே கையில் வாளியுடன் மாடி வீட்டில் இருந்த ஒரு கர்ப்பிணிப் பெண் கீழே இறங்கி நீர்த் தொட்டியின் மூடியைச் சப்தமின்றி எடுத்துவைத்துவிட்டு தண்ணீர் அள்ளிக்கொண்டு மாடிக்கு வருவதைக் கண்டேன்.&lt;br /&gt;நான் மாடிப்படியில் நின்றதை அவர் கவனிக்கவில்லை. அருகில் வந்ததும், அவர் என்னைப் பார்த்ததும் திகைத்துப் போனவராகப் பேச்சற்று குனிந்து நின்றார். சில வினாடிகளுக்குப் பிறகு என் கால்களின் அடியில் இருந்த வாளியை பார்த்ததும் லேசாகப் புன்னகைத்தபடி ÔÔரொம்ப வெயிலா இருக்கு!ÕÕ என்றார். நான் பதில்பேசவே இல்லை. அவரை விலக்கி படிகளில் இறங்க முயன்றேன். அதற்கு உடன் பாடில்லாதவர் போல, ‘Ôதொட்டி யில தண்ணி கொஞ்சமாதான் இருக்கு, கீழே போகாதீங்க!Õ’ என்றபடி என் வாளியைப் பிடுங்கி அவரிடமிருந்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றித் தந்துவிட்டு தன் வீட்டுக்குள் போய்விட்டார்.&lt;br /&gt;நானும் அந்தத் தண்ணீருடன் அறைக்குள் சென்று பாய் முழுவதும் தண்ணீரைக் கொட்டி விட்டு அதிலேயே படுத்துக்கொண்டேன். அன்று மாலை, ‘தொட்டியிலிருந்து யாரோ தண்ணீரைத் திருடிவிட்டார்கள்’ என்று வீட்டுக்காரப் பெண் பெரிதாகக் கத்திக்கொண்டு இருந்தார். நானும் நண்பர்களும் அதை வேடிக்கை பார்த்தபடி இருந்தோம். இது நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் பின்னிரவில் அதே பெண் இது போலவே இரண்டு வாளிகளில் தண்ணீர் எடுத்துக் கொண்டு ரகசியமாக வருவ தைப் பார்த்தேன். நான் அதைக் கண்டுகொள்ள வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், எதிர்பாராமல் மின்சாரம் தடைபட்ட ஒரு இரவில் அந்தப் பெண் நீர்த் தொட்டியிலிருந்து தண்ணீர் அள்ளும்போது, தடுமாறி மூடியைக் கீழே போட்டு விட்டார். சப்தம் கேட்டதும் கையில் டார்ச் லைட்டுடன் வீட்டுக்காரப் பெண் வெளியே வந்தார். கர்ப்பிணியால் மாடிக்கும் ஏறிப் போக முடியவில்லை. கையில் ஒரு வாளித் தண்ணீரோடு நிற்கும் பெண்ணைக் கண்டதும் வீட்டுக்காரப் பெண்ணுக்கு ஆத்திரம் தாங்க முடிய வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;‘Ôஏண்டி... நீதான் இத்தனை நாளா தண்ணி திருடுறயா... அதான் தினம் ரெண்டு குடம் நாங்களா தர்றோமில்லையா..? உனக்கு எதுக்குடி இந்த நேரத்தில தண்ணீர். இப்படி நடு ராத்திரி பூனை மாதிரி வந்து தண்ணியை எதுக்குடி திருடுறே? சொல்லு...Õ’&lt;br /&gt;அவள் பேசவே இல்லை. இருளுக்குள் நின்று கொண்டே இருந்தாள். வீட்டுக்காரப் பெண் போட்ட கூச்சலில் யாவரும் திரண்டிருந் தார்கள். இதற்குள் மின்சாரமும் வந்துவிட்டது. கர்ப்பிணிப் பெண்ணின் கணவர் கையைக் கட்டிக் கொண்டு தலை கவிழ்ந்து நின்றிருந்தார். வீட்டுக் காரப் பெண் மிக ஆபாச மாகத் திட்டினார். அவரைச் சமாதானப் படுத்தும் விதமாக, கர்ப்பிணிப் பெண்ணின் கணவர் தனது சட்டைப் பையிலிருந்து பத்து ரூபாயை எடுத்து நீட்டினார்.&lt;br /&gt;ÔÔஏதோ தெரியாம செஞ்சுட்டா பிள்ளைத்தாச்சி! உங்க தண்ணிக்கு உரிய காசை கொடுத்திடுறேன்.ÕÕ&lt;br /&gt;ÔÔபிள்ளைத்தாச்சினா திருடச் சொல்லுதா? உன் பிச்சைக் காசு யாருக்கு வேணும்? நான் தர்றேன் ஆயிரம் ரூபா! இந்தக் கிணத்துல உன்னால தண்ணி நிரப்ப முடியுமா?’Õ இதற்குள் வீட்டுக்காரப் பெண்ணின் மருமகள் மாடியேறி, கர்ப்பிணிப் பெண் வீட்டுக்குள் நுழைந்து ஒரு வாளியைத் தூக்கிக்கொண்டு கீழே வந்தார். ‘Ôஏற்கெனவே ஒரு குடம் கொண்டு போயி ஊத்திட்டு வந்திருக்கா... பாருங்க!’Õ என்றார். சிவப்பு வாளி நிறைய சோப்பு நுரை. வீட்டுக்காரப் பெண்மணி ஆத்திரத்தில் தன் காலால் அந்த வாளியை உதைத்தார். அதில் கர்ப்பிணிப் பெண்ணின் உள்ளாடைகள் நனைந்து கிடந்தன. இதைக் கண்டதும் வீட்டுக்காரப் பெண் ஆத்திரம் தாள முடியாமல் கத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ÔÔகுடிக்கவே தண்ணியில்லாம லோல் படுறோம். இதுல நல்ல தண்ணியில பாவாடை துவைக்குறியா? திமிர் எவ்வளவு இருக்கு பாரு!ÕÕ&lt;br /&gt;அந்தப் பெண் உதடுகள் துடிக்க நின்றிருந்தார். என்ன செய்வது என்று தெரியாத அவரது கணவர் அழுத்தமான குரலில் சொன்னார்... ÔÔரெண்டு நாள் டயம் குடுங்க, வேற வீடு பார்த்துப் போய்க் கிடுறோம்.இவ ஊரு ஸ்ரீவைகுண்டம். வீட்டுக்குப் பக்கத்திலேயே ஆறு ஓடும். அந்தப் பழக் கத்திலே செஞ்சுட்டா... மன்னிச்சிருங்க.ÕÕ&lt;br /&gt;வீட்டுக்காரப் பெண்மணி இன்னொரு வாளியில் இருந்த தண்ணீர் மொத்தத்தையும் திரும்பவும் தூக்கி நீர்த் தொட்டியில் ஊற்றினாள். யாவரும் கலைந்து போனார்கள். சோப்பு நுரைத்த உள்ளாடைகளை அந்தப் பெண் வெறித்துப் பார்த்தார். பிறகு, ஆத்திரத்தோடு அத்தனை துணிகளையும் அள்ளித் தெருவில் எறிந்துவிட்டு, மெதுவாகப் படியேறி தன் வீட்டுக் குப் போய்க் கதவைச் சாத்திக்கொண்டாள்.&lt;br /&gt;எத்தனையோ முறை அந்த வீட்டுக்காரப் பெண்மணியும் மாடி வீட்டுப் பெண்ணும் அந்நியோன்யமாக ஒன்றாக அமர்ந்து உதிரி முல்லைப் பூக்களை வாங்கி பூ கட்டிக்கொண்டு இருப்பதைக் கண்டிருக்கிறேன். கோடை, அவர் களின் இணக்கத்தைத் துண்டித்துவிட்டது. தண்ணீர் &amp; உலகின் கருணையும் தீராப் போராட்டமு மாக இரு தலைகொண்டதாக உருமாறியிருக்கிறது.&lt;br /&gt;மாநகர வாழ்வின் இடர்கள் முற்றிலும் விநோதமானவை. அவற்றை எந்த எழுத்தாளனும் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. குறிப்பாக மத்திய வர்க்கத்துக் கோடை நாட்கள்... பிணக்குகள் ஊற்றெடுக்கும் சுனை. இதை எழுத்தில் கோபிகிருஷ்ணனும் திலீப்குமாரும் மிக அழகாகப் பிரதிபலித்திருக்கிறார்கள்.&lt;br /&gt;குறிப்பாக திலீப்குமாரின் கதைகள், சாதாரண மனிதர் களின் ஆசைகளும் ஏமாற்றங் களும் சார்ந்தது. இவரது கதைகள் சென்னையில் வாழும் குஜராத்தி குடும்பங் களின் உலகை நுட்பமாகச் சித்திரிக்கின்றன. அதிலும் முதியவர்கள், பெண்களின் வெளிப்படுத்த முடியாத ஆசைகளும் இயலாமையுமே இவர் கதைகளில் அதிகம் வெளிப்படுகின்றன. திலீப் குமாரின் கதைகள் மெல்லிய நகைச்சுவைத்தன்மை வாய்ந் தவை. அவை சம்பவங்களின் அபத்தத்தை வெளிப்படுத்து பவை.&lt;br /&gt;&lt;br /&gt;இவரது சிறுகதைகளில் ‘தீர்வு’ என்ற சிறுகதை மிகச் சிறப்பானது. சென்னையின் மின்ட் பகுதியில் வாழும் குஜராத்திகளின் குடியிருப்பில் ஒரு கிணற்றில் எலி செத்துக் கிடக்கிறது. Ôஅந்த எலியை எப்படி வெளியே எடுப்பது? யார் அதைச் செய்வது?Õ என்ற நிகழ்வை விவரிக்கிறது கதை. ஓர் அபத்த நாடகத்தைப் போல கேலியும் மறைமுகமான வலியும் கொண்ட இந்தக் கதை இன்னொரு தளத்தில் ஒடுக்கமானதொரு குடியிருப் பில் ஒரே டாய்லெட்டை முப்பது பேர் உபயோகப்படுத்திக் கொண்டு வாழும் எலி வளை போன்ற அவர்களின் வாழ்க்கை நிலையைப் பரிகசிக்கிறது.&lt;br /&gt;கதை சொல்லியின் மாமா முடிவாக, செத்த எலியை வெளியே எடுத்துவிடுகிறார். ஆனால், எலி மிதந்த அந்தக் கிணற்றுத் தண்ணீரை உபயோகப்படுத்துவதா வேண் டாமா என்று இன்னொரு சர்ச்சை எழுகிறது. இதற்குத் தன்னிடம் ஒரு தீர்வு இருப்பதாகச் சொல்லியபடி, தான் பத்திரப்படுத்தி வைத்திருந்த கங்கா தீர்த்தத்தில் கொஞ்சம் எடுத்துக் கிணற்றில் தெளித்து இப்போது கிணற்றுத் தண்ணீர் சுத்தமாகிவிட்டதாகச் சொல்கிறாள் பாட்டி. யாவரும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதோடு கதை முடிகிறது.&lt;br /&gt;சுத்தமோ, அசுத்தமோ... தண்ணீர் மிக அவசியமாக இருக்கிறது. எளிய சம்பவம் போலத் தோன்றும் இந்தக் கதை ஆழமாக, மாநகரக் குடும்பங்கள் தங்கள் வாழ்க்கைப் போராட்டத்தில் எதையும் ஏற்றுக் கொள்ளத் தயாராகிவிடுவதை வெளிப்படுத்துகிறது. மேலும் மாநிலம் விட்டு மாநிலம் வந்து வாழும் மக்களும் கூட இங்கு நெருக்கடியானதொரு சூழலில்தான் வாழ்கிறார்கள் என்பதையும் வெளிப்படுத்துகிறது. திலீப்குமாரின் கதைகள் வாழ்க்கை நெருக்கடிகள் சார்ந்து புகார் சொல்வதில்லை. மாறாக அது மனிதர்களுக்குள் ஏற்படுத்துகிற உறவுநிலை மாற்றங்களை ஆராய்கிறது.&lt;br /&gt;கோடை ஒரு முற்றுப் பெறாத ஒரு நீள் கதை. ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்!’ என்று ஷேக்ஸ்பியர் எழுதியிருக்கிறார்.&lt;br /&gt;கோடைக்கு எவ்வளவு கண்கள் என்று யாரால் சொல்ல முடியும்!&lt;br /&gt;இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதைகள் எழுதிவருகிறார் திலீப்குமார். இவர் தொகுத்து, பெங்குவின் பதிப்பகத்தால் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள ‘தற்கால தமிழ்ச் சிறுகதைகள்’ என்ற தொகுப்பு தமிழ்க் கதைகளுக்கு இந்திய அளவில் ஒரு விரிந்த தளத்தை உருவாக்கித் தந்தது. இவரது பூர்விகம் குஜராத். சிறு வயதிலே சென்னைக்கு வந்துவிட்டவர். ‘க்ரியா’ பதிப்பகத் தில் சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். ‘மூங்கில் குருத்து’, ‘கடவு’ என்று இரண்டு சிறுகதைத் தொகுதிகள் எழுதியிருக்கிறார். தமிழிலிருந்து ஆங்கிலத்தில் சிறப்பாக மொழிபெயர்ப்பு செய்யக் கூடியவர். அமெரிக்க பல்கலைக் கழகங்களுக்கும் வெளிநாட்டில் தமிழ்கற்றுக் கொள்பவர் களுக்கும் வழிகாட்டுதல் மற்றும் தமிழ்ப் புத்தக விநியோகம் தொடர்பான பணிகளைப் பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறார். திலீப்குமாரின் கதைகளை வாசித்து முடிக்கும்போது பூனை தன் குட்டியை வாயில் கவ்விக்கொண்டு போவது போல சூழ்நிலை மனிதர்களை கவ்விக்கொண்டு போகிறது என்ற உண்மை புரிகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14025163-111997314135205430?l=e-arc.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://e-arc.blogspot.com/feeds/111997314135205430/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14025163&amp;postID=111997314135205430' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14025163/posts/default/111997314135205430'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14025163/posts/default/111997314135205430'/><link rel='alternate' type='text/html' href='http://e-arc.blogspot.com/2005/06/blog-post_111997314135205430.html' title='திலீப்குமார்'/><author><name>Chandramukhi</name><uri>http://www.blogger.com/profile/16507154480362737534</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14025163.post-111997303165642230</id><published>2005-06-28T08:36:00.001-07:00</published><updated>2005-06-28T08:37:11.663-07:00</updated><title type='text'>இந்திரா பார்த்தசாரதி</title><content type='html'>கதாவிலாசம்&lt;br /&gt;நெடுவழிப் பயணம்&lt;br /&gt;ஊர் சுற்றிகளின் மீது எனக்கு எப்போதுமே தனி ப்ரியம் உண்டு. அதிலும், நெடுஞ்சாலை திறந்து கிடக்கிறது என்பதால், நோக்கமற்று எங்குவேண்டுமானாலும் சுற்றித் திரியும் மனிதர்கள் வரம் பெற்றவர்கள்!&lt;br /&gt;ருஷ்யாவின் புகழ்பெற்ற தத்துவஞானியான குர்ஜீப், ஒரு ஊர்சுற்றி! அவரும் அவரது நண்பர்களும் மனம் போன போக்கில் சுற்றி அலைவார்கள். போகுமிடங்களில் என்ன கிடைக்கிறதோ, அவற்றை வாங்கி பிளாட்பாரத்தில் கடை போட்டு விற்று, அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை ஈட்டிக்கொண்டு, அடுத்த ஊருக்குப் புறப்பட்டுச் செல்வார்கள்.&lt;br /&gt;ஒரு முறை பாலைவனத்தைக் கடந்து போகும் நிலை உருவாகிறது. அவர்கள் ஒரு கிராமத்தில் தங்கி, அடுத்து எப்படிப் பயணம் மேற்கொள்வது என்று யோசனை செய்கிறார்கள். ‘பாலைப் புயல் வருவதற்குள் கடந்து போகாவிட்டால், புயல் உங்களை அடித்துக்கொண்டு போய்விடும்’ என்கிறார் அங்கே இருக்கிற கிராமவாசி. ‘பாலைப் புயலில் என்ன நடக்கும்?’ என்று ஆர்வமாகக் கேட்கிறார் குர்ஜீப்.&lt;br /&gt;‘பாலைவனத்தில் புயல் அடிக்கத் துவங்கினால், இருபது அடி உயரம் வரை மணல் மேலே சுற்றிக்கொண்டு வரும். அதனால், நடந்து செல்பவர் களை மணல் மூடிவிடும்’ என்கிறார் கிராமவாசி. குர்ஜீப் உற்சாகமாகி, ‘அப்படியானால் நாம் பாலைவனப் புயல் துவங்கியதும், நம் பயணத்தைத் துவக்கலாம்’ என்று சொல்லிவிட்டு, அங்கேயே தங்கி, இருபது அடி உயரத்துக்கு ஏணி போல ஒன்றைச் செய்து, அதன்மீது ஏறி நின்றபடி பாலைவனத்தில் நடப்பதற்குத் தினமும் பழகுகிறார்கள்.&lt;br /&gt;முடிவில், பாலைப் புயல் உருவாகிறது. அவர்கள் தங்கள் கால்களில் மர ஏணிகளைக் கட்டிக்கொண்டு பாலைவனத்தில் நடந்து போகிறார்கள். தங்கள் காலடியில் புயல் கடந்து&lt;br /&gt;போவதைக் கண்டதாகவும், புயல் நாம் நினைப்பது போல அச்சம் தரக்கூடியது அல்ல, அது ஒரு மூர்க்கமான அழகுடையது என்று குறிப்பிடும் குர்ஜீப், ‘சாகசம்தான் பயணத்தின் உண்மையான சுவை!’ என்கிறார்.&lt;br /&gt;பத்து வருடங்களுக்கு முன்பு, ஒரு முறை சென்னையில் இருந்து மதுரைக்குப் போவதற்காக, இது போன்றதொரு சாகசப் பயணத்தை மேற்கொள்ளத் தீர்மானித்தேன். அதைச் சாகசம் என்று நானாகச் சொல்லிக்கொள்வதற்குக் காரணம், டவுன் பஸ் டவுன் பஸ்ஸாக மாறி சென்னையில் இருந்து மதுரைக்குச் செல்வது என நான் முடிவெடுத் ததுதான்.&lt;br /&gt;பொதுவாக, டவுன் பஸ்ஸில் ஒரு மணி நேரம் செல்வதற்குள், அது இருபது இடங்களில் நிற்கும். மூச்சு திணறக் கூட்டம் தொற்றிக் கொண்டுவிடும். அப்படி யான பஸ்ஸில் மதுரை வரை போவதென்றால், அந்த அனுபவம் எப்படி இருக்கும் என்று அனுபவித்துப் பார்க்கத் தோன்றியது. மறுநாளே அதைச் செயல்படுத்த முடிவு செய்தேன்.&lt;br /&gt;பயணம் கிளம்பும் முன் நானே சில கட்டுப்பாடுகளை உருவாக்கிக் கொண்டேன். டவுன் பஸ்ஸில் மட்டும்தான் போக வேண்டும். இரவில் டவுன் பஸ் ஓடவில்லை என்றால், எங்கே கடைசியாகச் செல் கிறோமோ, அந்த பஸ் ஸ்டாண்டில் இரவைக் கழிக்க வேண்டும். மறுநாள் காலை, முதல் டவுன் பஸ்ஸைப் பிடித்துப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டேன்.&lt;br /&gt;பயணம் சைதாப்பேட்டையில் துவங்கியது. ஒரு டவுன் பஸ்ஸில் மாலை ஏழு மணிக்குப் புறப்பட்டேன். ஒரு மணி நேரத்தில் தாம்பரம் வந்து சேர்ந்தேன். அங்கிருந்து வண்டலூர் வரை ஒரு பஸ், அங்கிருந்து செங்கல்பட்டு வரை ஒரு பஸ் என செங்கல்பட்டு போய்ச் சேர்வதற்குள் இரவாகி விட்டிருந்தது.&lt;br /&gt;அங்கேயே பஸ் ஸ்டாண்டில் தங்கிவிடுவது என்று முடிவு செய்தேன். இரண்டாவது காட்சி சினிமாவுக்குப் போய்விட்டு வந்து பஸ் ஸ்டாண்டில் பாதி இருண்டுகிடந்த கொடிக்கம்பத்தின் முன் வந்து சாய்ந்து உட்கார்ந்தேன்.&lt;br /&gt;வானில் அன்று எக்கச்சக்க நட்சத்திரங்கள். இரவுப் பேருந்து கள் கடந்து சென்றுகொண்டே இருந்தன. பக்கத்துக் கிராமங் களுக்குச் செல்லும் மனிதர்கள் ஒன்றிரண்டு பேர் துண்டை விரித்து ஓரமாக படுத்து உறங்கினார்கள். ஒரு பிச்சைக்காரன் எதிரேயிருந்த அடி பைப் ஒன்றில் தண்ணீர் அடித்து குளித்துக்கொண்டு இருந்தான். காற்று ஏகாந்தமாக இருந்தது. எப்போது உறங்கினேன் என்று தெரியாது.&lt;br /&gt;விடிகாலையின் குளிர் உடலை நடுக்கிய போது, பொழுது விடிந்து, பேருந்து நிலையத் தில் முதல் பஸ்ஸின் வெளிச்சம் தெரிந்தது. பாதித் தூக்கத்தில் ஏறி உட்கார்ந்துகொண்டேன். தூங்கிக்கொண்டே பஸ்ஸில் போய் இறங்கி, அங்கே அடுத்த பஸ்ஸைப் பிடித்து இன்னொரு ஊர் என கசகசப்பும் அசதியுமாக பயணம் நீண்டது. முதல் நாள் மாலை புறப்பட்ட ஏழு மணியையும் கடந்துவிட்டது. அப்போதும் நான் மதுரையை நெருங்கவில்லை. ஒன்பதரை மணிக்கு மேலூரைக் கடந்து, தொலைவில் மதுரையின் மெல்லிய வெளிச்சம் தெரியத் துவங்கியது.&lt;br /&gt;மதுரைக்கு வந்து இறங்கியபோது மணி பத்தைக் கடந்துவிட்டிருந்தது. டவுன் பஸ் டிக்கெட்டுகள் யாவும் என் பையில் நிரம்பியிருந் தன. அப்படியே நண்பனின் அறைக்குச் சென்று கதவைத் தட்டியபோது, அவன் என்னை விநோதமாகப் பார்த்தபடி, ‘எங்கேயிருந்து வருகிறாய்?’ என்று கேட்டான். ‘சென்னையிலிருந்து’ என்று சொன்னதும் சிரிப்போடு, ‘எப்படி நடந்தே வந்தியா?’ என்று கேட்டான்.&lt;br /&gt;இதுவும் நல்ல யோசனையாக இருக்கிறதே என்று தோன்றியது. நான் சிரித்துக்கொண்டே பையில் இருந்த டவுன் பஸ் டிக்கெட்டுகளை எடுத்துக் காட்டினேன். அவனால் நம்ப முடியவில்லை. எதற்காக இந்த முட்டாள்தனம் என்பதுபோல என்னைப் பார்த்துத் திகைத்துப் போயிருந்தான். குளித்துவிட்டு மொட்டை மாடியில் படுத்துக்கொண்டபடி ஏகாந்தமான காற்றை அனுபவித்தபோது, பயணத்தின் உண்மையான ருசி புலப்பட்டது.&lt;br /&gt;எத்தனை விதமான மனிதர்கள், எவ்வளவு பேருந்து நிறுத்தங்கள், எத்தனை கிராமங்களின் பெயர்கள்... உண்மையில் அதிவேகமாகக் கடந்துவிடும் பயணம் என்பது இத்தனையும் இழந்துவிடுவது என்பது அப்போதுதான் புரிந்தது. கூட இருந்த என் நண்பன் சொன்னான்... ‘இப்படித்தானே நமது முன்னோர்கள் ஒரு ஊரைவிட்டு மற்றொரு ஊர் போயிருப்பார்கள்! நீ இந்தக் காலத்து ஆள் இல்லைடா... பழைய ஆசாமி!’ இருவரும் சிரித்துக்கொண்டோம்.&lt;br /&gt;காலம் எவ்வளவோ மாற்றங் களைக் கொண்டுவந்தபடி உள்ளது. அதில் மிக முக்கியமானது வாகனங்கள். சாலை வசதி! இந்தியா முழுவதும் சுற்றி அலைந்தபோதும் தமிழகத்தில் உள்ளது போல இத்தனை அழகான பஸ்களையோ, முறையான சாலைகளையோ வேறு எங்கும் கண்டதில்லை.&lt;br /&gt;அதிலும் இங்குள்ள சொகுசுப் பேருந்துகளைக் காணும்போது அதன் மதிப்பு நமக்குத் தெரிவது இல்லை. மற்ற மாநிலங்களில் பயணம் செய்யும்போதுதான், நாம் எவ்வளவு பாக்கியசாலிகள் என்பது புரியும்.&lt;br /&gt;வட மாநிலங்களில் உள்ள பேருந்துகளும், பேருந்து நிலையங் களும் நாம் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாதபடி இருக்கும். டெல்லியின் புகழ்பெற்ற பேருந்து நிலையம் செங்கல்பட்டு பேருந்து நிலையத்தின் அளவில்தான் இருக்கிறது. அதுவும் அங்கிருந்து கிளம்பும் நூற்றுக்கணக்கான அதிவேகப் புற நகர்ப் பேருந்துகளும் நமது லோக்கல் டவுன் பஸ்ஸைப் போன்றவை. அதன் சிவப்பு நிறமும், ஒருபோதும் மூட முடியாத கண்ணாடி ஜன்னல்களும் என்றும் மாறவே மாறாதவை.&lt;br /&gt;மாநகர வாழ்க்கையில் ஒவ்வொரு வரும் சராசரியாக தினம் இரண்டு மணி நேரமாவது பயணம் செய்கிறார்கள். அதிலும் ரயிலும், பேருந்தும், ஆட்டோக்களும், கார்களும் பகலிரவு பேதமில்லாமல் சாலையைக் கடந்துகொண்டேதான் இருக்கின்றன.&lt;br /&gt;சென்னையில் எவ்வளவு ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன என்று கற்பனை செய்து பார்க்கவே முடிய வில்லை. ஆனாலும், சென்னை ஆட்டோ டிரைவர்களிடம் பேரம் பேசி முடிப்பது பெரிய கலை. அதில் விற்பன்னர் ஆவது எவருக்கும் சாத்தியமானதும் இல்லை.&lt;br /&gt;‘ஹெராக்களிட்ஸ்’ஸின் புகழ்பெற்ற வாசகமான ‘ஓடும் ஆற்றில் இரண்டு முறை ஒரே இடத்தில் இறங்க முடி யாது!’ என்பது போல, சென்னையில் ஒரே இடத்துக்கு, ஒரே வாடகை கொடுத்து இரண்டு முறை பயணம் செய்த சந்தர்ப்பம் இதுவரை வாய்க்கவே இல்லை.&lt;br /&gt;மாநகர வாழ்வில் ஆட்டோக்களைப் பிடிக்கும் சாகசம் ஏற்படும் ஒவ்வொரு முறையும் மனதில் நினைவோடுவது இந்திரா பார்த்தசாரதியின் ‘தொலைவு’ என்ற கதை. இந்திரா பார்த்தசாரதி பல வருடங்கள் டெல்லியில் வாழ்ந்தவர். அவரது இக்கதை, டெல்லியில் ஒரு அப்பாவும் பெண்ணும், ஒரு ஆட்டோ பிடிப்பதற்காக எப்படி அலைகிறார்கள் என்பதைப் பற்றியதே!&lt;br /&gt;ஜன்பத் &amp; டெல்லியின் போக்குவரத்து மிகுந்த இடம். அங்கே வாசுவும் அவரது ஏழு வயது மகள் கமலியும் தங்கள் வீட்டுக் குச் செல்ல ஒரு ஆட்டோ பிடிப்பதற்காகக் காத்திருக்கிறார்கள். டவுன் பஸ் ஏறிப் போக முடியாது. அவ்வளவு கூட்டம். காலியாக ஏதாவது ஒரு ஆட்டோ வந்தால் அதில் ஏறிக்கொண்டுவிடலாம் என்று காத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களின் நேரம் ஆட்டோ கிடைக்கவே இல்லை.&lt;br /&gt;மெதுவாக சாலையில் நடந்தபடியே ஏதாவது ஆட்டோ வருகிறதா என்று பார்த் துக்கொண்டே போகிறார்கள். டாக்ஸியில் போகலாம். ஆனால், அதற்கு மாத வருமானம் இடம் தரவில்லை. தனது குடும்பச் சுமையை நினைத்தபடியே வாசு மெதுவாக நடக்கும்போது, அவன் நண்பன் மூர்த்தி காரில் வருகிறான். அவன், தான் லோதி காலனி வழியாகப் போவதாகச் சொல்லி ஏறிக்கொள்ளச் சொல்கிறான்.&lt;br /&gt;வாசுவுக்கு அது பிடிக்கவில்லை. காரணம், பால்ய வயதில் உதவாக்கரை யாக இருந்த அவன் டெல்லிக்கு வந்து பெரிய ஆளாக மாறியிருப்பது வாசுவுக் குச் சற்றே பொறாமையை உருவாக்குகிறது. அதோடு, முன்பு சில முறை அவன் தன் னைப் பயன்படுத்தி தன் காரியங்களைச் சாதித்துக்கொள்ள முயன்றது நினைவுக்கு வரவே, அவனோடு செல்ல மறுக்கிறான்.&lt;br /&gt;கமலிக்கு இது ஆத்திரமாக இருக் கிறது. அவள் நடந்தே போய்விடலாம் என்று ஆவேசம் கொண்டவள்போல வீம்பாக நடக்கிறாள். முடிவாக, ஒரு ஆட்டோ நிற்பதைக் கண்டு அவர்கள் காத்திருக்கும்போது, வேறு ஒரு பெண் வந்து அதில் ஏறிக்கொண்டு போய் விடுகிறாள். ‘நம் ஊரில் இப்படி ஆட்டோ வுக்குக் காத்துக் கிடக்கவா செய்தோம்! பேசாமல் நடந்தே போய்விடலாம்’ என்று முடிவு செய்தபடி, அவனும் கமலியைக் கூட்டிக்கொண்டு வீறாப்பாக நடக்கத் துவங்குகிறான் என்பதோடு கதை முடிகிறது.&lt;br /&gt;மாநகரின் என்றும் மாறாத காட்சி களில் ஒன்று இக்கதையில் துல்லிய மாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது.&lt;br /&gt;போதி மரத்தில் ஞானம் பெற்ற புத்தனேகூட எண்பது வயது வரை நடந்து சுற்றி இருக்கிறான். கிறிஸ்துவும்கூட தேசம் விட்டு தேசம் அலைந்து திரிந்திருக்கிறார். உலகுக்கு வழிகாட்ட வந்த வர்கள் ஓரிடத்தில் தங்கியிருப்பதில்லை. அல்லது, பயணம்தான் அவர்களை உலகுக்கு வெளிப்படுத்துகிறது.&lt;br /&gt;சாலை நம் வாசலில் துவங்கி, முடிவற்று உலகமெங்கும் விரிந்தோடிக் கொண்டு இருக்கிறது. நமக்குத் தேவையானது எல்லாம் பயணம் போவதற்கான விருப்பமும் மனதும் மட்டும்தான்! கும்பகோணத்தில் 1930&amp;amp;ல் பிறந்த இந்திரா பார்த்தசாரதி தமிழின் தனிச்சிறப்பு மிக்க எழுத்தாளர். இவர் வைஷ்ண சித்தாந்தம் குறித்து ஆய்வு மேற்கொண்டு டாக்டர் பட்டம் பெற்றவர். இவரது குருதிப்புனல் நாவலுக் காக 1978&amp;amp;ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றவர். சிறந்த நாடகாசிரியர். நாடக உலகுக்கு இவர் ஆற்றிய சேவைக்காக சங்கீத நாடக அகாடமி விருது பெற்றவர். இப்படி இரண்டு முக்கிய தேசிய விருதுகள் பெற்ற ஒரே எழுத்தாளர் இவர் மட்டுமே! மழை, போர்வை போர்த்திய உடல்கள், நந்தன் கதை போன்றவை இவரது முக்கிய நாடகங்கள். பாண்டிச்சேரிப் பல்கலைக் கழகத்தின் நாடகத்துறை இயக்குநராக சில காலம் பணியாற்றியுள்ள இந்திரா பார்த்தசாரதி, தற்போது அமெரிக்காவாசி.&lt;br /&gt;http://www.vikatan.com/av/2005/jul/03072005/av0602.asp&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14025163-111997303165642230?l=e-arc.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://e-arc.blogspot.com/feeds/111997303165642230/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14025163&amp;postID=111997303165642230' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14025163/posts/default/111997303165642230'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14025163/posts/default/111997303165642230'/><link rel='alternate' type='text/html' href='http://e-arc.blogspot.com/2005/06/blog-post_111997303165642230.html' title='இந்திரா பார்த்தசாரதி'/><author><name>Chandramukhi</name><uri>http://www.blogger.com/profile/16507154480362737534</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14025163.post-111997298571472509</id><published>2005-06-28T08:36:00.000-07:00</published><updated>2005-06-28T08:36:25.716-07:00</updated><title type='text'>நாஞ்சில் நாடன்</title><content type='html'>எஸ்.ராமகிருஷ்ணன்&lt;br /&gt;எலும்பில்லாத நாக்கு&lt;br /&gt;மதுரை பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டு இருந்த நாட்களில், ரயில்வே நிலையத்தின் வெளியே உள்ள பிளாட்பாரத்தில் உள்ள இட்லிக் கடைகள் தான் எங்களது பசியாற்றுமிடங்கள். நான்கு நட்சத்திர ஓட்டல், ஐந்து நட்சத்திர ஓட்டல் என்பதெல்லாம் இவற்றின் முன் தூசி. (அங்கே இரவில் மர பெஞ்சில் உட்கார்ந்தபடி, கையில் இட்லித் தட்டை வாங்கிக்கொண்டு அண்ணாந்து பார்த்தால், வானில் நூறு நட்சத்திரங்கள் தெரியும்.)&lt;br /&gt;மதுரை, ருசி மிக்க உணவுக்குப் பெயர் பெற்ற ஊர். இரவில் இரண்டு மணிக்குக்கூட ஆவி பறக்கும் இட்லியும் கெட்டி சட்னியும் பொடியுமாக உணவு பரிமளித்துக்கொண்டு இருக்கும். சாப்பிட்டது போதும் என எழும்போது கூட, ‘என்னப்பூ சாப்பிடுறீக... நல்லாச் சாப்பிடுங்கÕ என்று மனதாரக் கேட்டுப் பரிமாறும் அக்காக் கடைகள் தெருவுக்கு இரண்டிருக்கின்றன.&lt;br /&gt;ஓர் இரவு, ரயில் நிலையத் தின் முன்பாக ஏதாவொரு அரசியல் கூட்டம் நடக்க இருக்கிறதென்று, அங்கிருந்த கடைகளை அப்புறப்படுத்தச் சொல்லிக்கொண்டு இருந்தார் கள். அக்காக் கடைகளில் ஒன்றில் சாப்பிடுவதற்காக உட்கார்ந்திருந்த நான், என்ன நடக்கப் போகிறது என்று பார்த்துக்கொண்டே இருந்தேன். இட்லிக்கார அக்கா அதெல் லாம் காலி செய்ய முடியாது என்று மறுத்து விவாதம் செய்துகொண்டு இருந்தாள். உள்ளூர் அரசியல் தலைவர்களில் ஒருவர், ‘எதுக்குடா பேசிக்கிட்டு இருக்கிறே! இட்லி, தோசைக்கு என்ன உண்டோ, அதைக் கொடுத்துட்டு இடத்தைக் காலி பண்ணச் சொல்லுவியா?’ என்று திட்டினார். உடனே கரை வேட்டி ஒருவர், ஐந்து நூறு ரூபாய்த் தாள்களை அவளிடம் நீட்டிய படி, ‘கடையை எடுத்துக் கட்டுக்கா!’ என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவளுக்கு வந்த ரௌத்திரத்தில் கத்தினாள்.&lt;br /&gt;‘பன்னிரண்டு மணி வரைக்கும் அக்கா கடை இருக் கும்னு நினைச்சு சாப்பிட வர்றாங்க பாரு... அவிங்களுக்கு தான் இங்ஙன கடை போட்டிருக்கேன். உன்னை மாதிரி மொள்ளமாறி பயக பேச்சைக் கேட்டுக் கடையை மூடுனா, பசியோட வந்த பிள்ளைக திரும்பிப் போற பாவமில்லே வந்து சேந்துரும். நமக்கு வேண்டாம்டா அந்தப் பணம். கிடைக்கிறது எட்டணா காசா இருந்தாலும், பத்து பேரு பசியாத்தின திருப்தியிருக்கு பாரு, அதுக்குதான் யாவாரம் பண்றேன். உன் காசைப் பொறுக்கி எடுத்துட்டு போய்ச் சேரு. இல்லே... இட்லி அடுப்பிலே வெச்சு உன்னையும் வேக வெச்சிருவேன், பாத்துக்க..!’&lt;br /&gt;எத்தனை சத்தியமான வார்த்தைகள். இட்லி விற்று வாழ்கிறோம் என்பதை விடவும், பத்து பேரின் பசியாற்ற முடிகிறதே என்ற அவளது சந்தோஷம் தான் அவளது உணவுக்கு ருசியைத் தருகிறது என்று அப்போதுதான் புரிந்தது.&lt;br /&gt;உணவுக்கு ருசி சேர்ப்பது உப்பிலோ புளியிலோ இல்லை. சமைப்பவரின் மனதில்தான் இருக்கிறது. சந்தோஷமோ, கவலையோ எதுவாக இருந்தாலும் அது சமையலில் தெரிந்து விடுகிறது. சாப்பாட்டில் உப்பு குறைந்தால் பிரச்னை சாப்பாட்டில் இல்லை. சமையல் செய்யும் மனைவியை, தாயை சரியாகக் கவனிக்கவில்லை என்பதுதான் அப்படி வெளிப்படுகிறது. பேச்சலர் சமையல்களுக்கென்று ஒரு தனி ருசி இருக்கிறது. அது ஒரு முழுமையடையாத உணவு. குழம்பு சிறப்பாக வந்திருந்தால் சாதம் குழைந்திருக்கும். இரண்டும் சரியாக வந்திருந்தால் போதுமான அளவு இல்லாமல் போயிருக்கும். பசியைக் கடந்து செல்வது தான் அதன் முக்கிய நோக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதாவது அபூர்வமான ஞாயிற்றுக்கிழமை களில், நண்பர்கள் பலரும் ஒன்று கூடி வெங்காயம் நறுக்கியபடியோ, வெள்ளை பூண்டு உரித்தபடியோ இலக்கியம், சினிமா, உலக விவகாரம் பேசிக்கொண்டு சமைக்கத் துவங்கி, வியர்த்து வழிய, சூடு பறக்க, தினசரி பேப்பர்களைத் தரையில் விரித்து, சமைத்த உணவை நடுவில் வைக்கும்போது வீடெங்கும் பரவும் மணம் இருக்கிறதே, அது பிரம்மசாரிகளின் அறைகளுக்கு மட்டுமே உரித்தான நறுமணம்.&lt;br /&gt;எத்தனையோ முறை எவரெவர் வீடுகளிலோ திடீர் விருந்தாளியாகச் சென்ற இரவுகளில், உடனடி உப்புமாவைச் சாப்பிட்டிருக்கிறேன். சிலரது வீட்டில் தட்டில் உப்புமா பரிமாறப்பட்ட மறு நிமிடமே, அது எத்தனை தூரம் அவர்களின் தூக்கத்தைக் கெடுத்திருக்கிறது என்று அதன் ருசியிலேயே தெரிந்துவிடும். சிலரது வீடுகளில், இப்படி உப்புமா சாப்பிடுவதற்காகவே நள்ளிரவில் வந்து நிற்கக் கூடாதா என்று தோன்ற வைக்கும். இரண்டுக்கும் காரணம் உணவில்லை. செய்பவரின் மனதும் விருப்பமும்தான்.&lt;br /&gt;குற்றால சீசன் நாளில், ஒரு முறை தென்காசியில் உள்ள சிறிய ஓட்டல் ஒன்றில் சாப்பிடப் போயிருந்தபோது, அந்த ஓட்டலின் உரிமையாளர் குழந்தைகள் சாப்பிடுவதற்கு காசு வாங்க மறுப்பதைக் கண்டேன். Ôசின்ன பிள்ளை என்ன சாப்பிட்டுறப் போகுது. அரை தோசை சாப்பிடுமா... நல்லா சாப்பிடட்டும்! அதுக்குப் போயி பில் போடுறதுக்கு மனசில்லை’ என அதற்கு அவர் சொன்ன காரணம்தான், அந்தக் கடையைத் தேடி யாவரும் போவதற்கான காரணமாக இருந்தது.&lt;br /&gt;பசியை நேர்கொண்டு பழகுவதும், அதன் முணுமுணுப்பை சட்டை செய்யாமல் புகையும் வயிற்றோடு விட்டத்தைப் பார்த்தபடி படுத்திருப்பதும் இருபது வயதில் மட்டுமே சாத்திய மானது போலும்! அவமானங்களும் வடுக்களும் அறிமுகமாகத் துவங்கும் வயது அது.&lt;br /&gt;கல்லூரி நாட்களில் எனக்குத் தெரிந்த நண்பன் ஒருவன், தன் அத்தையின் வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டு இருந்தான். அவர்கள் வீட்டில்தான் சாப்பாடு. அந்த வீட்டில் சாப்பிடுவதற்கே கூச்சமாகத்தான் இருக் கிறது என்பான். காரணம் கேட்டால், ‘பாதிச் சாப்பாட்டில் மறுசோறு வேண்டும் என்று கேட்டால், காது கேட்கா தது போலவே நின்று கொண்டு இருப்பார்கள். ஒவ்வொன்றையும் நாலைந்து முறை கேட்க வேண்டும். நாக்கை வெட்டி எறிந்து விடலாமா என்று அவமானமாக இருக்கும்.&lt;br /&gt;அதை விடவும் கொடுமை, பசித்த நேரங்களில் நாமாகத் தட்டில் எடுத்துப் போட்டுச் சாப்பிட முடியாது. அவர்களாகச் சாப்பிடச் சொல்லும் வரை காத்துக்கொண்டே இருக்க வேண்டும். பல நாட்கள் இரவு நேரங்களில் தட்டில் சோற்றைப் போட்டு ஓரமாக வைத்துவிட்டு உறங்கிவிடுவார்கள். தனியே அந்தச் சோற்றைச் சாப்பிடும்போது இழவு வீட்டில் சாப்பிடுவது போல இருக்கும். இதற்காகவே நான் பல நாட்கள் பட்டினி கிடந்திருக்கிறேன்’ என்பான்.&lt;br /&gt;எல்லோரது உடலிலும் பசியில் பட்ட அவமானங்கள் ஆறாத வடுக்களாக கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கின்றன போலும்! யாரோ சப்பிப் போட்ட மாங்கொட்டையை மண்ணிலிருந்து ஆசையாக எடுத்து மண்ணை ஊதிவிட்டு சுவைக்கும் குழந்தையின் கண்களில் ஒளிந்திருப்பது பசியைத் தவிர, வேறென்ன?&lt;br /&gt;பசியின் கால்தடம் பதியாத இடமே உலகில் இல்லை. பசியின் முன்பாக தலை குனியாத மனிதனும் எவனும் இல்லை. இதை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது ‘நாஞ்சில் நாட’னின் ஒரு கதை.&lt;br /&gt;நாஞ்சில் நாடன் தமிழ்ச் சிறுகதையுலகில் மிகச் சிறப்பான எழுத்தாளர். இவரது எழுத்துலகம் குமரி மாவட்டத்து நாஞ்சில் பிரதேச மக்களும், அதன் மண்ணும் கலந்து உருவானது. தமிழ் எழுத்தாளர்களிடம் அபூர்வமாகவே காணப்படும் நகைச்சுவையும், பகடியும் இவருக்குச் சரளமாகக் கை வரக்கூடியது.&lt;br /&gt;திருவிழா நாள் ஒன்றில் கச்சேரி கேட்பதற்காக மாணிக்கம் என்ற சிறுவனின் அப்பா புறப்படுகிறார். மாணிக்கம் தானும் வருவதாக அவரோடு சேர்ந்துகொள்கிறான். சுசீந்திரம் கோயில் பிரசித்தி பெற்றது என்பதால் அங்கே கே.பி.சுந்தராம்பாள், பாலமுரளி கிருஷ்ணா, ராஜரத்தினம் பிள்ளை எனப் பலரும் வந்து கச்சேரி செய்திருக்கிறார்கள். இதனால் அருகாமை கிராமத்து மக்களுக்கு கொஞ்சம் சங்கீத ரசனை உருவாகியிருந்தது.&lt;br /&gt;மாணிக்கத்தின் அப்பா ஒன்றும் பெரிய இசை ரசிகர் இல்லை. ஆனாலும், கச்சேரி கேட்பதற்காக திருவிழாவுக்குக் கிளம்பி வந்திருந்தார். கச்சேரி கேட்க, ஊரிலிருந்து நடந்தே வந்திருந்தார்கள். கச்சேரி முடிய நள்ளிரவாகிவிட்டது.&lt;br /&gt;அப்பாவும் பிள்ளையும் எதையாவது சாப்பிடுவதற்காக, ஒரு காபிக் கடைக்குள் நுழைந்து ஆளுக்கு நாலு தோசை, ரசவடை, டீ எனச் சாப்பிட்டுவிட்டு வெளியே வருகிறார்கள். அன்று கடையில் நல்ல கூட்டம். யாருக்கு எவ்வளவு பில் என்று கடைப் பையன் கத்திச் சொல்லிக் கொண்டு இருக்கிறான். முதலாளி பில்லை வாங்கிப் போட முடியாதபடி கூட்டம் நெருக்கித் தள்ளுகிறது.&lt;br /&gt;மாணிக்கத்தின் அப்பா கல்லாவை நெருங்கி வந்து இரண்டு டீ மட்டும் குடித்ததாக காசை எண்ணி வைத்துவிட்டு, எதுவும் நடக்காததுபோலப் பையனை கூட்டிக்கொண்டு வெளியே வந்துவிடுகிறார். ‘அப்பா ஏன் இப்படி ஏமாற்றினார்’ என்று மாணிக்கத்துக்குப் புரியவேயில்லை. ஒருவேளை, அப்பா இதற்காகத்தான் வருடம் தோறும் திருவிழாவுக்குத் தவறாமல் வந்துவிடுகிறாரோ என்றுகூடத் தோன்றியது. ஆனால், இனி இவரோடு திருவிழாவுக்கு வரக்கூடாது என்று மாணிக்கம் முடிவு செய்வதோடு கதை முடிகிறது.&lt;br /&gt;பசியின் பெரும் போராட்டம் தான் வாழ்வை ஏதேதோ திசைகளில் கொண்டு செலுத்திக்கொண்டு இருக்கிறது நாவின் சுவை வேண்டுமானால் ஆறாக இருக்கலாம். ஆனால், வாழ்வின் சுவை எத்தனை விதமானது என்று அறுதியிட்டுக் கூற முடியுமா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவரான நாஞ்சில் நாடன் 1947&amp;ல் பிறந்தவர். இயற்பெயர் சுப்ரமணியன். வேலையின் காரணமாகப் பல வருடங்கள் மும்பையில் வசித்தவர். இவரது ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவல் தமிழ் நாவல்களில் குறிப்பிடத்தக்கது. இதை இயக்குநர் தங்கர்பச்சான் ‘சொல்ல மறந்த கதை’ என்ற பெயரில் படமாக்கியுள்ளார். மிதவை, தெய்வங்கள் ஆடுகள் ஓநாய்கள், பேய்க் கொட்டு, சதுரங்கக் குதிரைகள் போன்றவை இவரது முக்கியப் படைப்புகள். நாஞ்சில் நாடன், தற்போது கோயம்புத்தூரில் வசித்து வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;http://www.vikatan.com/av/2005/jun/26062005/av0602.asp&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14025163-111997298571472509?l=e-arc.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://e-arc.blogspot.com/feeds/111997298571472509/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14025163&amp;postID=111997298571472509' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14025163/posts/default/111997298571472509'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14025163/posts/default/111997298571472509'/><link rel='alternate' type='text/html' href='http://e-arc.blogspot.com/2005/06/blog-post_111997298571472509.html' title='நாஞ்சில் நாடன்'/><author><name>Chandramukhi</name><uri>http://www.blogger.com/profile/16507154480362737534</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14025163.post-111997294693505901</id><published>2005-06-28T08:35:00.000-07:00</published><updated>2005-06-28T08:35:46.940-07:00</updated><title type='text'>ச.தமிழ்செல்வன்</title><content type='html'>எஸ்.ராமகிருஷ்ணன்&lt;br /&gt;சரித்திரத்தின் சாலை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீரங்கப்பட்டினத்தில் திப்பு சுல்தானின் மாளிகையின் முன்பாக நின்றிருந்தேன். காவிரியாற்றின் கரையிலிருக்கிறது அந்த அரண்மனை. பசுமையான புல்வெளிகள், காலத்தின் பழமையேறிய கட்டடங்கள்... கர்நாடகாவில் மைசூருக்குப் போகும் வழியில் உள்ளது இந்தச் சிறிய நகரம். பழுப்பேறிய கட்டடங்களைக் கண்டவுடனே மனம் காலத்தின் பின் சரிந்துவிடுகிறது.&lt;br /&gt;உண்மையில் சரித்திரம் என்பதுதான் என்ன? மன்னர்களும் யுத்த களங்களும் இடிந்துபோன கோட்டை கொத்தளங்களும் மட்டும்தானா? இல்லையென்றே தோன்றுகிறது. கல்லில் அல்ல, ஒவ்வொரு மனிதனின் மனதில்தான் சரித்திரம் எழுதப்படுகிறது. உலகில் எத்தனை கோடி மனிதர்கள் இருக்கிறார்களோ, அத்தனை கோடி சரித்திர உண்மைகள் இருக்கின்றன. ஒவ்வொரு மனிதனும் ஒரு சரித்திர சாட்சிதான்!&lt;br /&gt;திப்புவின் அரண்மனையில் அவரது காலத்தைய நாணயங்கள், உடைவாள்கள் மற்றும் அரியணைகள் அப்படியே பராமரிக்கப்பட்டு வருகின்றன. அந்த உடைவாள்களையும் கவசங்களையும் பார்க்கும்போது, அடிமனதில் குதிரைகளின் குளம்பொலி தானாகவே கேட்கத் துவங்கிவிடுகிறது. குதிரைகள் இல்லாமல் சரித்திரத்தைப் பற்றிக் கனவு காண முடியுமா என்ன?&lt;br /&gt;வரலாறு என்பது அரசர்களுக்கு மட்டுமேயானதில்லை. அது ஒரு கால சாட்சி. ஒரு நூற்றாண்டு முடிந்து இன்னொரு நூற்றாண்டு பிறக்கும்போது முந்தைய நூற்றாண்டு முடிந்து விடுவதாக ஒரு தோற்றம் உருவாகிறது. அது நிஜமில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. உண்மையில் இப்போதும் குகையில் மனிதர்கள் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறார்கள். அப்படியானால் கற்காலம் இன்னமும் தொடர் கிறதா?&lt;br /&gt;இன்றும் உலகின் ஏதோ ஒரு மூலையில் மன்னராட்சி நடந்துகொண்டுதான் இருக்கிறது. ராஜ விசுவாசம் மட்டுமே வாழ்வியல் முறை யாக உள்ளது. அப்படியானால் மன்னராட்சி காலம் முடிய வில்லையா? வன்முறையும் பிரிவினையும் யுத்தமும் சேர்ந்து இன்றைய மனிதன் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவன் என்று பாகுபடுத்த முடியாத நிலையில் வைத்திருக்கிறது.&lt;br /&gt;எனக்கு திப்பு சுல்தானை ரொம்பவும் பிடிக்கும். அவன் ஒரு சாகசக்காரன்.&lt;br /&gt;திப்பு, ஸ்ரீரங்கப்பட்டினத்தின் பெருமாளுக்கும் ஏராளமாகத் திருப்பணிகள் செய்தவன். விதவித மான புலிகளை வளர்ப்பதில் நாட்டம் கொண்டவன். வங்காளப் புலியன்றை அடைவதற்காக வங்காளத்து அரசகுமாரியை மணந்துகொண்டவன். அவனிடம் புலிப்படை இருந்தது. அவன் இயந்திரப் புலி ஒன்றை உருவாக்கி வைத்திருந்தான். அதன் கண்கள் வைரத்தால் ஆனவை. அந்தப் புலி நிஜமாகவே உறுமவும் எதிரியின் மீது பாயவும் கூடியது போல அமைக்கப்பட்டிருந்தது.&lt;br /&gt;வெள்ளைக்காரத் துரைகள் விருந்துக்கு வரும்போது அவர்களை அந்த அறைக்குள் அழைத் துச் செல்வான் திப்பு. எதிர்பாராத ஒரு இடத்தில் இருந்து அந்த இயந்திரப் புலி உறுமியபடி பாய்ந்து வரும். அச்சத்தில் வெள்ளைக் காரத் துரைகளுக்குக் கைகால் நடுக்கம்வந்துவிடும். திப்பு அதைக் கண்டு வாய்விட்டுச் சிரிப் பான். திப்புவைப் பிடிப் பதற்கு நடந்த யுத்தத்தின் போதுதான் வெள்ளைக் காரர்கள் மக்கள் எழுச்சியை நேரடியாகக் கண்டார்கள். திப்பு மக்களின் நாயகனாக விளங்கியவன்!&lt;br /&gt;திப்புவின் அரண்மனையில் வாழ்ந்து அவனது தினசரி நடவடிக்கைகளை ஓவியமாக்கிய இரண்டு ஃபிரெஞ்ச் ஓவியர்களின் தைல வண்ண ஓவியங்களை ஒரு முறை டெல்லியில் கண்டிருக்கிறேன். திப்புவின் கம்பீரம் அவனது உடைகளில், அறைகளில் ஏன் காலணிகளில் கூடப் படிந்திருக்கிறது.&lt;br /&gt;திப்பு பிடிபட்ட பிறகு வெள்ளைக் காரர்கள் செய்த முதல் வேலை இந்தியா முழுவதும் நில அளவை எடுக்க வேண்டும்... ஒவ்வொரு பகுதிக்கும் துல்லியமான ஒரு வரைபடம் உருவாக்க வேண்டும் என்ற சர்வே பணியைத் துவக்கியதுதான். இந்தப் பணி சென்னையில் உள்ள தாமஸ் மவுண்ட்டில் தான் துவங்கியது. லாம்டன் சர்வே என்று அழைக்கப்படும் அதன் நினைவாக இப்போதும் மவுண்ட்டில் ஒரு நினைவுக் கல் இருக்கிறது. இந்த சர்வே யின் முடிவில்தான் எவரெஸ்ட் சிகரம் கண்டுபிடிக்கப்பட்டது.&lt;br /&gt;இப்படித்தான் காலம் ராவணனின் கோட்டையைப் போல ஒன்றுக்குள் ஒன்று சுற்றிச்சுற்றி வந்துகொண்டே இருக்கக் கூடியது. இந்தச் சுழல் பாதைக்குள் சுற்றி வரத் துவங்கினால் அதற்குமுடிவே இராது.&lt;br /&gt;காலத்தை ஒரு நீருற்றைப் போலத் தான் நான் கற்பனை செய்து கொள்கிறேன். காலம் சதா எல்லா திசைகளிலும் பொங்கி வழிந்துகொண்டு இருக்கிறது. நீருற்றின் வேகமும் விசையும் முன் அறிய முடியாதது.&lt;br /&gt;சரித்திரச் சின்னங்களை நோக்கிச் செல்லும்போதெல்லாம் என் மனதில் உருவாவது இத்தனை பெரிய கோயில் களை, அரண்மனைகளைக் கட்டுவதற்கு எத்தனை வருடங்கள் ஆகியிருக்கும்? எங்கே தங்கியிருப்பார்கள் அந்தக் கூலிகள்? வீட்டைப் பிரிந்து வந்து வருடக்கணக்கில் தங்கிவிட்ட சிற்பிகளுக்குத் தங்கள் குழந்தைகளின் முகமாவது நினைவில் இருக்குமா?&lt;br /&gt;உலகப் புகழ் பெற்ற தாஜ்மகால் உள்ள இடத்தில் என்றோ ஒருவன் ஆடு மேய்த்திருப்பான் இல்லையா? அப்போது அந்த இடத்தில் தாஜ்மகால் உருவாகவிருக்கும் சுவடு தெரிந்திருக்குமா அல்லது இன்றைய தாஜ்மகாலில் அந்த ஆட்டுக்குட்டிகளின் மூச்சொலியைத் தான் கேட்க முடியுமா?&lt;br /&gt;காலம் உடைவாட்களில் மட்டும் உறைந்திருப்பதில்லை. என் வீட்டு ஆட்டு உரல் நூறு வருடம் கடந்து விட்டிருக்கிறது. அருவாள்மணை ஐந்து தலைமுறை கடந்து வந்திருக்கிறது. வாசலடியில் நிற்கும் வேம்பு வெள்ளைக்காரர்களைக் கண்டிருக் கிறது. படுக்கையறையின் மரக் கட்டில் ஆயிரமாயிரம் முத்தங்களை அறிந்திருக்கிறது. சிலந்தி வலை போல காலம் யாவர் வீட்டிலும் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் படிந்து கொண்டுதான் வருகிறது என்றால், உலகத்துக்கு மிகவும் வயதாகிவிட்டதா என்றும் நினைக்கத் தோன்றுகிறது. நிஜம்தானே. நாம் பார்க்கும் சூரியன் எத்தனை ஆயிர வருடப் பழமையானது? இந்த நிலவு எத்தனை கோடிக் கண்கள் பார்த்துப் பழகியது? இந்த பூமிக்குள் எத்தனை லட்சம் எலும்புகள் புதையுண்டுகிடக்கின்றன? களிம்பேறிய பித்தளைப் பாத்திரம் போலப் பழமையானதுதானா உலகம்?&lt;br /&gt;இது உண்மை என்று ஏற்றுக் கொள்ளும்போது மனது புரண்டு கொண்டுவிடுகிறது. நேற்று பார்த்த வெயில் வேறு, இன்று பார்க்கும் வெயில் வேறு... நேற்றைய நிலவை மறைத்த மேகம் இன்றில்லை என்றால், ஒவ்வொரு நாளும் புதிதானதுதானே? ஒரே நேரத்தில் பழமையாகவும் மிகப் புதுமையாகவும் இருக்கிறது உலகம்!&lt;br /&gt;காலம் நூறு நாக்குகள் கொண்டது. அது எதையும் தனக்குள் சுருட்டி விழுங்கிக்கொள்ளத் தயங்குவதே இல்லை. உலகத்தையே வெற்றிகொள்ளப் புறப்பட்ட நெப்போலியனும், ஊரைவிட்டு வெளியே போய் அறியாத விவசாயியும் அதற்கு ஒன்றுதான். இருவரும் ஒரே மண்ணுக்குள்தான் அடங்கியிருக்கிறார்கள்.&lt;br /&gt;காலத்தில் மீதமிருப்பது எஞ்சிய பொருட்களும் சில சாட்சிகளும் மட்டும் தான். சாமுண்டீஸ்வரி மலையின் மீது நடந்து திரிந்தபோது அப்படித்தான் ஒரு குதிரையின் கால் எலும்பைக் கண்டெடுத்தேன். அந்த எலும்பைக் கையில் வைத்துப் பார்த்தபோதுதான் குதிரையின் பலம் எத்தகையது என உணர முடிந்தது. சரித்திரத்தின் நாயகனைப் போல கம்பீரமாக இருந்த குதிரைகள் இன்று கடற்கரை மணலில் சீந்த எவருமற்று ஒடுங்கி நிற்கின்றன. காலம் அதன் வாலில் சுழன்று ஆடிக்கொண்டே இருக்கிறது.&lt;br /&gt;சரித்திரத்தின் நினைவுகள் பீடிக்காத மனிதர்களே இல்லை. நம் ஜாடையில், நடையில், சுபாவத்தில் மூதாதையர்களின் சாயல் இருப்பது சரித்திரம்தானே. ஏராளமான வீரர்கள் இரவு பகலாகக் காவல் காத்த கொத்தள பீரங்கி இன்று காக்கை எச்சம் படிந்து கேட்பாரற்றுக் கிடக்கிறது. அதுதான் இன்றைய நிஜம்!&lt;br /&gt;ச.தமிழ்செல்வனின் கதையன்று காலத்தின் மீதான நமது விருப்பத்தையும் அது கலைந்துபோகும் அவலத்தையும் துல்லியமாகச் சித்திரித்துக் காட்டுகிறது. ‘வாளின் தனிமை’ என்ற அந்தக் கதை ஒரு வீரவாளைப் பற்றியது. ஒரு மத்திய தர வர்க்கத்து மனிதனின் வாழ்வுக்குள் அந்த வாள் எப்படி அடங்க மறுக்கிறது என்பதைப் பற்றியது.&lt;br /&gt;இந்தக் கதையில் தலைமுறை தலைமுறையாகச் சாகசம் செய்து வந்த வீரவாள் ஒன்றைத் தனது பைக்குள் வைத்துக்கொண்டு சுப்பையா என்ற குமாஸ்தா பயணம் செய்கிறான். பயணத்தின்போது அந்த வாள் அவனோடு பேசத் துவங்கிவிடுகிறது. சாகசம் செய்வதே வாழ்க்கை என்றிருந்த தன்னை இன்று சந்தனம், குங்குமம் இட்டு பூஜையில் வைத்துவிட்டார்களே என்று அந்த வாள் ஆதங்கப் படுகிறது.&lt;br /&gt;தன் முன்னோர்களின் வாளுக்கு இந்தக் கதியா என்று மனம் புழுங்குகிறான் சுப்பையா. அதன் பழைய பெருமையை மீட்டு எடுப்பது தன்னுடைய கடமை என்று கருதி ஒரு சாமுராயைப் போல தன்னோடு உடைவாளை எங்கே போனாலும் கூடவே கொண்டுபோகிறான்.&lt;br /&gt;இப்படிக் கொண்டுபோகும் சமயத்தில் போலீஸ் அவனை மடக்கிப் பிடித்து, பொது இடத்தில் ஆயுதம் கொண்டுபோகக் கூடாது என்று விசாரணை செய்கிறார்கள். அவனோ இது வீட்டு வாள்தானே என்று சமாதானம் செய்து தப்புகிறான். வாளுக்குத் தன்னை அவன் வீட்டு வாள் என்று சொன்னது, அசிங்கப் படுத்தியது போலிருக்கிறது.&lt;br /&gt;நாளுக்கு நாள் சுப்பையாவுக்கு வாளின் மீது பிடிப்பு அதிகமாகி வர வர, அவனது குடும்பம் மற்றும் உடன் வேலை பார்ப்பவர்கள் சுப்பையாவுக்கு லேசாகச் சித்தம் கலங்கிவிட்டதோ என்று சந்தேகப்படுகிறார்கள். சுப்பையா வாளிடமிருந்து அதன் கடந்த காலக் கதையைக் கேட்டு அறிந்துகொள்கிறான். அதன் வீரத்துக்கு எந்தப் பங்கமும் வந்துவிடாமல் அதைப் பாதுகாப்பது என்று முடிவு செய்து தன் தோளிலே தொங்கவிட்டுக்கொண்டு அலைகிறான்.&lt;br /&gt;அவனது செயல், வாளைப் போலவே அவனையும் புறக்கணிக்கும்படியான நிலையை உருவாக்குகிறது. முடிவில் குழந்தைகள் மட்டுமே சாகசங்களின் மீது விருப்பம்கொண்டு இருக்கிறார்கள் என்று உணர்ந்தவனைப் போல சிறுவர்கள் புடை சூழ, தனது வாளைச் சுழற்றிக்கொண்டு அலைகிறான். வாள் காற்றின் அடுக்குகளில் பாய்ந்து சிதறுகிறது.&lt;br /&gt;இக்கதை குடும்ப வரலாற்றின் மீதான மீள் பார்வையை முன்வைப்பதோடு, இன்றைய மனிதனின் பலவீனத்தையும் வெளிப்படுத்துகிறது. அதே நேரம் வீரமும் சாகசமுமே வாழ்க்கை என்றிருந்த அந்தப் பசுமையான காலம் எத்தனை நகைப்புக்குரியதாகி விட்டது என்ற ஆதங்கத்தையும் இக்கதையில் காண முடிகிறது.&lt;br /&gt;ஒரு கோப்பை தேநீரில் ஒரு மடக்கு குடித்து முடித்துவிட்டு, அடுத்த மடக்கு குடிப்பதற்கு கோப்பையை உயர்த்துவது கூட முக்கியமான சரித்திர நிகழ்வுதான். ஆனால், அந்த இரண்டு மடக்குகளுக்கு இடையில் என்ன நடக்கிறது என்பது ஒவ்வொரு தடவையும் மாறிக்கொண்டே இருக்கிறது. அதன் பெயர் தான் சரித்திரம் என்று ஜென் பௌத்தம் சொல்கிறது.&lt;br /&gt;சரித்திரம் திறந்தே கிடக்கும் ஒரு முடிவடையாத புத்தகம். நாம் அதை அறிந்து கொள்வதற்கும் வாசிப்ப தற்கும் பழகவில்லை. சில வேளைகளில் பயந்து விலகியும் விடுகிறோம். காலம் ராவணனின் பத்து தலையைப் போல ஒரே உடலும் வெவ்வேறு முகமும்கொண்டு இருக்கிறது. அது சரி, பத்து தலையுள்ள ராவணன் பத்து கனவுகள் காண்பானா இல்லை, ஒரேயரு கனவு மட்டும் காண்பானா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.vikatan.com/av/2005/jun/19062005/av0602.asp&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ச.தமிழ்செல்வன் கரிசல் வெக்கையைத் தனது எழுத்தில் பதிவு செய்த தனித்துவமான எழுத்தாளர். மிகக் குறைவான சிறுகதைகள் மட்டுமே எழுதியுள்ள இவர் மக்கள் இயக்கங்களில் நேரடிப் பங்கு கொண்டு வருபவர். அறிவொளி இயக்கம், அறிவியல் இயக்கங்களின் வழியாக மக்களை விழிப்படையச் செய்யும் தொடர்பணியை மேற்கொண்டு வருகிறார். இவரது Ôவெயிலோடு போய்...Õ என்ற சிறுகதைத் தொகுப்பு மிக முக்கியமானது. Ôவாளின் தனிமைÕ, Ôஅரசியல் எனக்குப் பிடிக்கும்Õ போன்றவை இவரது முக்கியப் படைப்புகள். ஐம்பது வயதாகும் இவர், மதுரகவி பாஸ்கரதாஸின் பேரன். தபால் துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற தமிழ்செல்வன் நெல்லை மாவட்டம் பத்தமடையில் வசித்து வருகிறார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14025163-111997294693505901?l=e-arc.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://e-arc.blogspot.com/feeds/111997294693505901/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14025163&amp;postID=111997294693505901' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14025163/posts/default/111997294693505901'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14025163/posts/default/111997294693505901'/><link rel='alternate' type='text/html' href='http://e-arc.blogspot.com/2005/06/blog-post_111997294693505901.html' title='ச.தமிழ்செல்வன்'/><author><name>Chandramukhi</name><uri>http://www.blogger.com/profile/16507154480362737534</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14025163.post-111997290043812232</id><published>2005-06-28T08:34:00.001-07:00</published><updated>2005-06-28T08:35:00.443-07:00</updated><title type='text'>மா.அரங்கநாதன்</title><content type='html'>எஸ்.ராமகிருஷ்ணன்&lt;br /&gt;முதல் அடி&lt;br /&gt;தற்செயலாக பழைய சாமான்கள் விற்கும் கடையின் வாசலில் பார்த்தேன் &amp; மணியடிப்பதற்காக பள்ளிகளில் தொங்கவிடப்பட்டு இருக்கும் இரும்புத் தண்டவாளத்தை!&lt;br /&gt;எங்கள் பள்ளியில்கூட மணியடிக்க அது போன்றதொரு இரும்புத் தண்டவாளம் வராந்தாவில் தொங்கும். மணியடிப்பதற்கென வயதான வாட்ச்மேன் இருந்தார். அவர் வராத நாட்களில், மாணவர்கள் அந்த மணியை அடிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சிற்பத்தைப் பார்ப்பது போல வியப்புடன் ஆழ்ந்து அந்தத் தண்டவாளத்தைக் கவனித்துக்கொண்டு இருந்தேன். எத்தனை முறை அதன் சத்தம் தொலைவில் கேட்டதும் ‘பள்ளிக்கு நேரமாகிவிட்டதே’ என்று ஓடி வந்திருப்பேன். எத்தனை நாட்கள் இந்த மணியடித்து ‘பள்ளி விடுமுறை விட்டுவிடாதா?’ என்று ஏங்கியிருப்பேன். இந்த மணியோசைக்குப் பின்னால் பால்யத்தின் வெளிப்படுத்தப்படாத நிசப்தம் புதைந்திருக்கிறது.&lt;br /&gt;கடைக்காரன் என்னைக் கவனித்திருக்கக்கூடும். ‘பள்ளிக்கூட பெல்லு சார். வேணுமா?’ என்றான். வாங்கிக்கொண்டு போய் என்ன செய்வது... எங்கே மாட்டிவைப்பது? மணியை வாங்குவதைவிடவும் அதை அடித்துப் பார்க்க வேண்டும் என்றுதான் மனது அதிக ஆசைகொண்டு இருந்தது. மிக உரிமையுடன் மணியை அடிப்பதற்காக வைத்திருந்த இரும்புக் கோலை எடுத்து மணியை அடித்தேன்.&lt;br /&gt;கடைக்காரன் சிரிப்போடு பார்த்தான். எங்கோ காஞ்சிபுரம் அருகில் உள்ள கிராமத்துப் பள்ளிக்கூடத்திலிருந்து கொண்டு வந்து தந்ததாகச் சொல்லி, இருநூறு ரூபாய் தந்து விட்டு எடுத்துப் போகும்படியாகச் சொன் னான். வாங்குவதற்கு பயமாக இருப்பதாகச் சொன்னேன். அதன் விலையைப் பற்றி சொல்வதாக நினைத்துக்கொண்டு, ஐம்பது ரூபாய் குறைத்துக்கொள்ளச் சொன்னான். பயம் விலை மீதல்ல. அந்த மணியோசை என்றோ ஏற்படுத்திய வலியிலிருந்து பயம் பிறப்பதை எப்படிப் புரியவைப்பது?&lt;br /&gt;இன்றும் மனதில் காலை வெயில் போல துல்லியமாகவும் வசீகரமாகவும் பள்ளியில் சேர்க்கப்பட்ட முதல் நாள் மினுமினுத்துக் கொண்டு இருக்கிறது. அப்போது பள்ளியில் சேர்வதற்கு இருந்த ஒரே சோதனை... வலது கையால் தலையைச் சுற்றி இடது காதை தொட்டுக் காட்ட வேண்டும். அது இருந்தால் போதும், முதல் வகுப்பில் சேர்த்துக் கொள்வார்கள்.&lt;br /&gt;படிய வாரிய தலையும் திருநீறு பூசிய நெற்றியும் ஒரே யரு உடைந்த குச்சி,சிலேட்டுமாக பள்ளியில் சேர நின்றுகொண்டு இருந்தபோது ஒரு பக்கம் பயமும் இன்னொரு பக்கம் அழுகையும் சேர்ந்து தொண்டையை இறுக்கியது.&lt;br /&gt;தலைமை ஆசிரியரின் அறைக்குள் நுழைந்தபோது அவரது மேஜையில் இருந்த பிரம்பும் சாக்பீஸ் டப்பாவும் அழுகையை அதிகப்படுத்தப் போதுமானதாக இருந்தது. டவுசர் பையில் வைத்திருந்த ஆரஞ்சு மிட்டாய் பாக்கெட்டை எடுத்து தலைமை ஆசிரியரிடம் நீட்டுவதற்குள், மருத்துவ மனைக்குள் போனதும் ஏற்படும் நடுக்கம் அன்று பள்ளியைப் பார்த்ததும்தானாக ஏற்பட்டது.&lt;br /&gt;வகுப்பில் உட்காரவைத்து விட்டு, அப்பா பள்ளியை விட்டு வெளியேறிப் போகத் துவங்கும் வரை அடக்கிக்கொண்டு இருந்த துக்கம், அவர் தலை மறைந்ததும் பீறிடத் துவங்கியது. வகுப்பில் உள்ள மாணவர்களுக்குக் கொடுப்பதற்காக கொண்டு வந்திருந்த ஆரஞ்சு மிட்டாய் களை எவருக்கும் கொடுக்க வேண்டும் என்றுகூட நினைப்பே இல்லை.&lt;br /&gt;டீச்சர், என் விசும்பல் சத்தம் கேட்டு என்ன என்று அருகில் வந்தாள். ‘காய்ச்சல் அடிக்குது’ என்று கலங்கிய குரலில் சொன்னதும் கழுத்தின் அடியில் கை வைத்துப் பார்த்தாள். குளிர்ச்சியாகத்தான் இருந்தது. அவள் தலையைக் கோதிவிட்டபடி, ‘சரியாப் போயிரும்... தண்ணி குடிச் சிக்கோ!’ என்றாள். இத்தனை நடந்தும் ஏன் காய்ச்சல் வரமாட்டேன் என்கிறது என்று என்மீதே ஆத்திரமாக வந்தது.&lt;br /&gt;திடீரென பிளாக்போர்டு மிக உயரத்திலிருப்பது போலத் தெரிந்தது. எங்கோ மலையடி வாரத்தில் இருந்து டீச்சர் பேசுவது போலக் கேட்டது. மனம் நிலைகொள்ளாமல் தத்தளித்தது. வராந்தாவில் தொங்கும் அந்தத் தண்டவாளத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தேன்.&lt;br /&gt;பன்னிரண்டரைக்குப் பெல் அடித்த போது கண்களை மூடிக்கொண்டு வீட்டுக்கு ஓடினேன். வீட்டுக்குப் போனதும் பையைத் தூர எறிந்துவிட்டு, என் மீது ஏன் இப்படி இரக்கமின்றி யாவரும் நடந்துகொள்கிறார்கள் என்று கோபமாக வந்தது. சாப்பிடக்கூட மனதின்றி ‘மதியம் பள்ளிக்கூடம் லீவு’ என்று பொய் சொல்லியபடி படுக்கை யில் சுருண்டு படுத்துக்கொண்டேன்.&lt;br /&gt;ஆனால், மறுநாள் பள்ளிக்குச் செல்ல வேண்டியிருந்தது. எத்தனை மெதுவாக நடந்து போக முடியுமோ அத்தனை மெதுவாகப் போவேன். வகுப்பைக் கவனிக்காமல் படியில் ஏறியிறங்கி விளையாடும் வெயிலைக் கவனித்துக்கொண்டு இருப்பேன்.&lt;br /&gt;பள்ளி நாட்கள் ஒரு விநோத மிருகத்தின் கால்களில் சிக்கிக்கொண்டது போல பயமாக மாறியிருந்தன. ஒவ்வொரு முறை பள்ளியின் பாதி மூடியிருந்த இரும்புக் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே போவது சிங்கத்தின் வாய்க்குள் தலையைக் கொடுத்து வெளியே எடுக்கும் சர்க்கஸ்காரனின் செயலைப் போலத்தான் இருந்தது.&lt;br /&gt;அப்போது, பள்ளி மிகப் பெரியதாகவும் வகுப்பறைகள் நீண்டதாகவும் டீச்சர் மிக உயரமானவள் போலவும் தோற்றம் தந்துகொண்டு இருந்தது. ஆனால், அந்தப் பள்ளியை விட்டு நீங்கி வேறு வேறு பள்ளிகளில் படித்து முடித்து, ஊரை விட்டு வெளியேறிய பல வருடங்களுக்குப் பிறகு, ஒரு முறை அந்தப் பள்ளியைப் பார்த்தபோது அது நான் முதல் நாள் சேர்ந்தபோது பார்த்த நிறம்கூட மாறாதது போல அப்படியே இருந்தது. ஆனால், ஒரேயரு வேறுபாடு, அப்போது பெரிய கோட்டை போலத் தெரிந்த பள்ளிக்கூடம், இப்போது சிறிய தீப்பெட்டி மாதிரி தெரிந்தது.&lt;br /&gt;அது ஒரு ஓடு வேய்ந்த கட்டடம் என்று இன்று திரும்பப் பார்க்கும்போதுதான் அதன் சிவப்பு ஓடுகள் தெரிந்தன. படிக்கட்டுகள், வகுப்பறைகள் யாவுமே உலர்ந்த திராட்சை போல சாறு வற்றிப் போய் சுருங்கி விட்டது போலத் தென்பட்டது.&lt;br /&gt;எனக்கு நடந்த சம்பவத்தைப் போலவேதான் என் பையனை எல்.கே.ஜி&amp;யில் சேர்த்த நாளும் நடந்தேறியது. அவனைப் பள்ளியில் சேர்த்துவிட்டு, முதல் நாள் என்பதால் கேட்டை தாண்டிச் சென்று வகுப் பறையைக் காட்டி விட்டு வெளியே வரும்போது, அவன் திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டே நடந்து போனான். வகுப்பறையின் அருகே போயும் உள்ளே போகாமல் தொலைவை வெறித்து பார்த்துக்கொண்டு இருப்பது தெரிந்தது. குழந்தையை முதன் முதலாகப் பள்ளியில் விட்டு வரும் அந்த நிமிடம் மிகவும் அபூர்வமானது. அதே நேரம் துக்ககரமானது. அது சொல்லி புரியவைக்க முடியாதது.&lt;br /&gt;பள்ளியில் மின்சார மணி அடித்தும் நான் வாசலின் வெளியே நின்றுகொண்டே இருந்தேன். அவன் வகுப்புக்குப் போய் விட்டான். ஆனால், நான் என்றோ காலத்தின் பின்னால் தூக்கி வீசப்பட்டது போல எனது முதல் வகுப்பின் நினைவுகளில் வீழ்ந்துகிடந்தேன். நான் நினைத்தது போலவே மாலை வீடு வந்த பையன் யாரோடும் பேசவே இல்லை. சாப்பிடு வதற்குக்கூட மனதின்றி படுக்கையிலே கிடந்தான். ஆனால், என்னைப் போலின்றி சில வாரங் களிலே அவன் பள்ளிக்குப் பழகத் துவங்கியிருந்தான். பிறகு பள்ளிக்கூடம் பற்றித்தான் எப்போதுமே பேச்சு. காலம் எவ்வளவு மாறியிருக்கிறது என்று அந்த நிமிடம் என்னால் உணர முடிந்தது.&lt;br /&gt;பிறந்த நாள், திருமண நாள் போல ஏன் பள்ளியில் சேர்ந்த முதல் நாளை நாம் கொண்டாடக்கூடாது, என்று சில சமயங்களில் தோன்றும். வகுப்பறைக்குள் ஒவ்வொரு மாணவனும் எடுத்துவைக்கும் முதலடி, நிலவில் இறங்கிய விண்வெளி வீரனின் காலடியைவிடவும் அதிமுக்கியமானதில்லையா! பள்ளியின் முதலடியிலிருந்துதானே அவனது அறிவும் திறனும் வளர்த்தெடுக்கப்படுகிறது.&lt;br /&gt;அந்தக் காலங்களில் கிராமங்களில் ஐந்து வயதில் Ôஏடு தொடங்குதல்Õ என்று ஒரு சடங்கு செய்வார்கள். குழந்தையை உட்காரவைத்து தாம்பாளத்தில் அரிசியைப் பரப்பி குழந்தையின் விரலைப் பிடித்து Ôஅனா ஆவன்னாÕ எழுத வைப்பார்கள். அந்தச் சடங்கு கோயிலில் நடக்கும். பிறகு, அங்கிருந்து வீட்டுக்கு வந்ததும் பனையோலைகளில் உயிரெழுத்து மட்டும் எழுதிக் கொடுத்து, படிக்க சொல்லித் தருவார்கள்.&lt;br /&gt;அப்படி ஏடு துவங்கும் சடங்கைச் செய்து வைப்பதற்கென ஒரு அண்ணாவியும் இருப்பார். அவர் தேவாரம், திருவாசகம் பாடவும், விளக்கி பொருள் சொல்லவும் தெரிந்தவராக இருப்பார். பள்ளிக்கூடம் வந்த பிறகு ஏடு தொடங்குதல் மறைந்து போகத் துவங்கியது. ஆனாலும் பள்ளியில் பிள்ளைகளுக்கு டீச்சர் கையைப் பிடித்து அனா ஆவன்னா எழுதித் தரும் பழக்கம் இருந்தது. பின்னாளில் அதுவும் மறைந்து, இன்று பள்ளிப் படிப்பு முடியும் வரை அனா ஆவன்னா என்றால் என்னவென்றே தெரியாத ஆங்கிலக் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது.&lt;br /&gt;உலகில் வேறு எந்தத் தேசமும் தனது தாய் மொழியின் அட்சரங்களைக் கூட கற்றுக்கொள்ளாமல் குழந்தை வேறு மொழியைக் கற்பதற்கு அனுமதிப்பதில்லை. நாம் எல்லாவற்றிலும் விதிவிலக்குதானோ?&lt;br /&gt;தமிழ் கற்றுக்கொள்வதற்காக இருந்த தமிழ்ப் பள்ளிகளும் தேவார \ திருவாசகப் பாடசாலைகளும், இன்று அடையாளமற்றுப் போய் விட்டன. தமிழ் நமது பேச்சிலிருந்து மட்டுமல்ல, நம் சிந்தனை, செயல் யாவிலிருந்தும் விலக்கப்பட்டு வருவதும் அப்படி விலக்கப்படுவது மேலான செயல் என்று பெருமை கொள்வதுமே நடந்து வருகிறது.&lt;br /&gt;தமிழ் வாழ்வைத் தனது படைப்பு களில் பதிவு செய்ததில் மிக முக்கியமான எழுத்தாளர் மா.அரங்கநாதன். இவரது கதைகள் ஆழ்ந்த தத்துவத் தளம் கொண்டவை. அவரது எழுத்தில் தமிழ் வாழ்வின் நுட்பங்களும் அறமும் மெய்தேடலும் நுண்மை யாகப் பதிவு செய்யப் பட்டுள்ளன.&lt;br /&gt;குறிப்பாக, இவரது ‘ஞானக்கூத்து’ என்ற சிறுகதைத் தொகுப்பில் உள்ள ‘ஏடு தொடங்கல்’ என்ற கதை. அன்றைய நாஞ்சில் வட்டார வாழ்வைச் சொல்வதோடு, ஏடு தொடங்குதலைப் பற்றிய நுட்பங்களையும் பதிவு செய்துள்ளது. அக்கதை மின்னல் வெட்டைப் போல நிமிட நேரமே கடந்து போகும் ஒரு அனுபவத்தைப் பதிவு செய்கிறது.&lt;br /&gt;ஊரில் ஒரு குழந்தைக்கு ஏடு தொடங்குவதாக அண்ணாவியை அழைக் கிறார்கள். அவர் வர இயலாமல் அவரது பையன் சுப்பையா வருகிறான். அவனுக்குப் பன்னிரண்டு உயிரெழுத்தும் தெரியும் என்றாலும் மணலில் எழுதும்போது கை நடுங்கும். சென்ற வருடம் ஏடு தொடங்கும் போது ஒரு குழந்தை மணலை வாறி அவன் கண்ணில் இறைத்ததால் அவன் ஏடு தொடங்கும் காரியத்துக்கு வருவதே இல்லை.&lt;br /&gt;இன்று வேறு வழியில்லாமல் வந்து சேர்கிறான். அந்த ஆட்டத்தில் ஒரு பதிகம் பாடச் சொல்கிறார்கள். அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. வேறு வழியில்லாமல் திருவாசகத்தை வாங்கிப் படிக்கத் துவங்குகிறான். சீர் பிரிக்காத பதிப்பு என்பதால் அவனால் படிக்க முடியவில்லை. அப்போது கறுப்புக் கண்ணாடி அணிந்தபடி எதையும் சட்டை செய்யாது ஊரில் சுற்றிக்கொண்டு வரும் முத்துக்கறுப்பன், அங்கே வந்து சேர்கிறான். அவனை திருவாசகம் படிக்கச் சொல்கிறார்கள்.&lt;br /&gt;அவன் புத்தகத்தைப் பார்க்காமலே ஒவ்வொரு சொல்லாகச் சொல்லி குழந்தையை திரும்பச் சொல்லச் செய்து, பதிகம் படிக்கவைக்கிறான். அந்தச் சம்பவம் முத்துக்கறுப்பன் மீது அந்த வீட்டில் நல்ல மதிப்பை உருவாக்கி விடுகிறது. அவனுக்கு அந்த வீட்டில் உள்ள பெண்ணைக் கொடுத்து மாப்பிள்ளையாக்கிக் கொள்கிறார்கள். அவன் அணிந்திருந்த கறுப்புக் கண்ணாடி பிடித்துப் போய், அந்த வீட்டுப் பெண் அவன் மீது ஆசைப்பட்டுவிட்டதாகச் சொன்னார்கள். ஆனால், எது நடக்க வேண்டுமோ, அது ஏதாவது ஒரு வழியாக நடந்துவிடுகிறது என்று சித்தாந்தம் பேசிக்கொண்டு இருந்தார் பெண் வீட்டில் ஒருவர். இரண்டுமே முத்துக்கறுப்பனைப் பொறுத்த வரை நிஜம்தான். இன்னொரு பக்கம் நிஜமில்லைதான்.&lt;br /&gt;மா.அரங்கநாதனின் இக்கதை விவரிக்கும் அந்த ஏடு துவங்கும் காட்சி, புகை மறைவது போல நாம் பார்த்துக்கொண்டு இருந்தபோதே வாழ்விலிருந்து மறைந்து போய்விட்டிருக்கிறது.&lt;br /&gt;பால்யம் சோப்பு நுரைகளைப் போல நூற்றுக்கணக்கான கனவுக் குமிழ்கள் மிதந்து செல்லும் வெளி போலும். கரும்பலகையின் கீழ் உதிர்ந்து கிடந்த சாக்பீஸ் தூசியைவிடவும்வகுப்பறையில் மாணவர்கள் தங்களுக்குள் பேசித் தீர்த்த சொற்கள் ஏராளமானவை. நட்சத்திரங்களைவிடவும் பள்ளியில் கண்ட கனவுகள் அதிகம். விரலில் பட்ட மைக்கறை அழிந்துபோய் பல வருடமாகி இருக்கலாம். ஆனால், மனதில் படிந்த பள்ளியின் நினைவுகள் என்றும் அழியா சுவடுகளாகவே இருக்கின்றன!&lt;br /&gt;தமிழில் ஆழ்ந்த புலமையும் தீவிர தேடுதலும் கொண்ட மா.அரங்கநாதன், 1950&amp;amp;களில் சிறுகதைகள் எழுதத் துவங்கியவர். இவரது ‘பொருளின் பொருள் கவிதை’ என்ற கட்டுரை நூல் 1983&amp;amp;ல் வெளியாகி, தமிழ் இலக்கியப் பரப்பில் சலனத்தை உருவாக்கியது. நாஞ்சில்நாட்டில் பிறந்த இவர், சென்னை மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ‘முன்றில்’ என்ற இலக்கிய இதழின் ஆசிரியர். இவரது வீடு பேறு சிறுகதைத் தொகுப்பும் பறளியாற்று மாந்தர் நாவலும் குறிப்பிடத்தக்க படைப்புகள். சிவனொளிபாதம் என்ற புனைபெயரிலும் கட்டுரைகள் எழுதியுள்ள இவர், சாகித்ய அகாதமிக்காக சில சிறுகதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார். இவரது கதைகள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் வெளியாகியுள்ளன. தமிழ் வாழ்வின் நுட்பங்களைப் பேசும் தனித்துவமான எழுத்து இவருடையது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14025163-111997290043812232?l=e-arc.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://e-arc.blogspot.com/feeds/111997290043812232/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14025163&amp;postID=111997290043812232' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14025163/posts/default/111997290043812232'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14025163/posts/default/111997290043812232'/><link rel='alternate' type='text/html' href='http://e-arc.blogspot.com/2005/06/blog-post_111997290043812232.html' title='மா.அரங்கநாதன்'/><author><name>Chandramukhi</name><uri>http://www.blogger.com/profile/16507154480362737534</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14025163.post-111997285957816755</id><published>2005-06-28T08:34:00.000-07:00</published><updated>2005-06-28T08:34:19.583-07:00</updated><title type='text'>பாவண்ணன்</title><content type='html'>http://www.vikatan.com/av/2005/jun/05062005/av0602.asp&lt;br /&gt;பரிகாரம்&lt;br /&gt;எஸ்.ராமகிருஷ்ணன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யானைகளைப் பார்ப்பதற்காகவே சிறு வயதில் நான் கோயிலுக்குப் போவேன். அப்போது யானைகள் வீதி வீதியாக வரும். முகப்படாம் பூட்டிய யானையின் அருகில் நடக்கும்போது, அதைத் தொட்டுப் பார்க்க வேண்டும் போலிருக்கும்.&lt;br /&gt;ஒரு முறை, பாரதியாரை நேரில் பார்த்துப் பழகிய கல்யாணசுந்தரம் என்பவரைக் காண்பதற்காக கடையத்துக்குச் சென்றிருந்தேன். அவர் சிறுவனாக இருந்தபோது, பாரதியார் கடையத்தில் வசித்திருக்கிறார். ஆகவே, அவருக்கு பாரதியுடன் பழக்கம். பாரதியார் அந்த நாட்களில் சாதி விலக்கம் செய்யப்பட்டு, ஊருக்கு வெளியே வாழ்ந்துகொண்டு இருந்தார். அதனால் சாப்பாடு கொண்டு போய்க் கொடுப்பது, மற்றும் தபால் அலுவலகத்தில் போய்க் கடிதங்களைப் போடுவது போன்ற சிறிய வேலைகளுக்கு கல்யாணசுந்தரம் பயன்பட்டிருக்கிறார்.&lt;br /&gt;அவர் தமது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டு இருந்தபோது, ‘பாரதியாருக்கு யானைகள் என்றால் ரொம்பவும் பிடிக்கும். ஆசையோடு யானையின் தும்பிக்கையைத் தடவிக் கொடுத்தபடி இருப்பார். சில வேளைகளில் யானையின் தும்பிக்கையைப் பிடித்து, தனது பற்களால் மெதுவாகக் கடித்து விளையாடுவார்’ என்று தான் கேள்விப்பட்டிருப்பதாகச் சொன்னார். நிஜமா, வெறும் கற்பனையா எனத் தெரியவில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அதைக் கேட்டதும் பாரதியின் மீது இனம்புரியாத நெருக்கம் உருவானது. குழந்தைகள்தான் தன் கையில் பிடித்த எதையும் கடித்துப் பார்க்கும் சுபாவம் கொண்டவர்கள். பாரதியாருக்குள்ளும் அதுபோன்றதொரு குழந்தைமை மேலோங்கி இருந்திருக்கிறது.&lt;br /&gt;யானையிடம் எனக்கு ரொம்பவும் பிடித்தது, அதன் காதுகள்! ஒரு தாமரை இலை அசைவது போல, அது தன் காதை ஆட்டிக்கொண்டே இருக்கிறது. உலகின் மொத்த ஓசையையும் அது தனக்குள்ளாக வாங்கிக்கொள்ள ஆசைப்படு கிறதோ என்று தோன்றும்.&lt;br /&gt;யானையைப் பார்க்கச் சென்று, யானைப் பாகனையும் யானையை நேசிக்கும் மனிதர்களையும் காணத் துவங்கினேன். குறிப்பாக, ஒரு பெண்மணி எல்லா நாளும் மாலை ஆறு மணிக்குக் கோயிலுக்கு வந்து நிற்பார். யானையின் அருகே வந்து நின்றபடி, அதை வியப்போடு பார்த்துக்கொண்டே இருப் பார். அவருக்கு யானை களைச் சங்கிலியிட்டுக் கட்டுவது பிடிக்காது. ஒவ்வொரு நாளும் அந்தக் கனத்த சங்கிலியைத் தன் கைகளால் தூக்கிப் பார்த்துவிட்டு, Ôஇதையா கட்டுகிறார்கள்?Õ என்பது போல முகம் சுளிப்பார்.&lt;br /&gt;பிறகு, ஒரு தூணில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு, இரவு எட்டு மணி வரை யானையை அணுஅணுவாக ரசித்துக் கொண்டு இருப்பார்.&lt;br /&gt;அவர் ஒரு கல்லூரியில் கணிதப் பேராசிரியையாக வேலை செய்கிறார் என்றும், திருமணமாகி சில மாதங்களிலேயே பிறந்த வீட்டுக்குத் திரும்பி வந்துவிட்டதாகவும், அதன்பிறகு வேலைக்குச் செல்லத் துவங்கி, அன்றி லிருந்து தனது சம்பளத்தில் முக்கால்வாசியை கோயில் யானைக்குக் கொடுத்து விடுவதாகவும் கேள்விப் பட்டபோது ஆச்சர்யமாக இருந்தது.&lt;br /&gt;எதற்காக அவர் யானையை நேசிக்கிறார்? யானையைப் பார்த்துக் கொண்டு இருப்பதே தன் வாழ்வின் உயர்ந்த நிமிடங்கள் என்று எண்ணுகிறாரா?&lt;br /&gt;கோயில் யானையை அழைத்துக் கொண்டு போய் யாசகம் கேட்பதைக் கண்டால், அவர் கடுமையாகக் கோபப் படுவார். மற்றபடி, அவர் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிடுவதோ, நெற்றியில் திருநீறு அணிவதோகூடக் கிடையாது. பாகன்கள் அவரை Ôயானைக்காரம்மாÕ என்றே அழைப்பார்கள்.&lt;br /&gt;யானைகளுக்கும் பாகன்களுக்கும் உள்ள உறவு வித்தியாசமானது. அவன் தனது தூக்கத்திலும் யானையைப் பற்றியேதான் நினைத்துக்கொண்டு இருப்பான். யானையும் அவனது சிறு கண்ணசைவுகளைக்கூட கவனித்து நடந்துகொள்ளக்கூடியது.&lt;br /&gt;யானைக்கு மதம் பிடித்த நாட்களில், அது முதலில் பாகனைத்தான் தேடும் என்பார்கள். பழிவாங்குவதற்காக அல்ல, தனது சுகமோ, துக்கமோ... அது பகிர்ந்துகொள்வதற்கு இருக்கும் ஒரே நபர் பாகன்தானே!&lt;br /&gt;யானைப் பாகன்கள் யானையை அடிப்பதைக்கூட எளிதாகச் செய்து விடுவார்கள். ஆனால், யானையைப் பற்றி திட்டுவதை மிகக் கவனமாகத்தான் செய்வார்கள். பெரும்பாலும் தவிர்த்து விடுவார்கள்.&lt;br /&gt;பெண்கள் எவரும் யானைப் பாகனாக இருந்தோ, யானைகளின் மீதேறிச் சென்றோ நான் பார்த்தது இல்லை. சிறுகுழந்தைகளில்கூட பெண் பிள்ளைகள் ஏறும்போது, Ôபொம்பளை பிள்ளைக்கு என்னடி யானை சவாரி?Õ என்று திட்டுவார்கள். ஒரு நாள் யானைக்காரம்மாவிடமே இதைக் கேட்டுவிடுவது என்று அருகில் சென்று கேட்டேன். Ôநீங்கள் யானை மேலே சவாரி போயிருக்கீங்களா?Õ&lt;br /&gt;அவர் அந்தக் கேள்வியை எதிர்பார்த்திருக்க வில்லை. சத்தமாகச் சிரித்தபடி, யானைப் பாகனைப் பார்த்து, Ôஇந்தப் பையன் என்ன கேட்கிறான், பார்த்தியா?Õ என்று என் கையைப் பிடித்துக்கொண்டார். அவர் கை மிகக் குளிர்ச்சியாக இருந்தது.&lt;br /&gt;அவர் தன் கண்ணாடியைச் சரிசெய்த படியே, Ôஎனக்கும் சின்ன வயசிலே இருந்து ஆசைதான். ஆனா, நான் ஆசைப்பட்ட எதுவுமே நடக்கலையே! இது மட்டுமா சரியா வந்துடப் போகுது?Õ என்றபடி, Ôஉனக்கு யானையை ரொம்பப் பிடிக்குமா?Õ என்று கேட்டார். அவர் சொன்ன பதிலைவிடவும் அவளது குரலில் ஒளிந்திருந்த துக்கம்தான் என்னை அவரோடு அதிகம் நெருக்க மாக்கியது.&lt;br /&gt;அதன்பிறகு Ôயானைக்காரம்மாவின் விருப்பத்துக்குரிய சிறுவன்Õ என்ற விசேஷ அந்தஸ்தால், நான் பல நேரம் யானையின் அருகில் பாகனைப் போல் நிற்பதற்கும், யானையின் துதிக்கையில் இருந்து காசை வாங்குவதற்கும் அனுமதிக்கப்பட்டு இருந்தேன். (யானையின் துதிக்கை வழியாக வரும் காற்று, உள்ளங்கையில் படும் அனுபவம் இன்றுவரை சிலிர்ப்பு ஊட்டக்கூடியது!).&lt;br /&gt;ஒரு நாள் யானையின் அருகில் நின்றபடி நானும் யானைக்காரம்மாவும் பேசிக்கொண்டு இருந்தபோது, ஒரு குடும்பம் கைக்குழந்தை யோடு கோயிலுக்கு வந்தது. அந்தக் குழந்தையை யானையிடம் ஆசி வாங்க வைப்பதற்காக, பாகனிடம் கொடுத்தார்கள். ஆனால், யானை ஏனோ ஆசி தர மறுத்தது. பாகனுக்கு Ôஅது ஏன் இப்படி நடந்து கொள்கிறது?Õ என்று புரியவில்லை. அதைக் கவனித்தது போல, யானைக்காரம்மா தயக்கத்துடன் அந்தக் குழந்தையைத் தன்னிடம் தருமாறு பெண்ணிடம் கேட்டார். அவள் தன் கணவனைப் பார்க்க, அவர் முகத்தில் சலனமே இல்லை. குழந்தையை யானைக் காரம்மா கையில் கொடுத்தாள். யானைக்காரம்மா கையில் குழந்தை யோடு யானையிடம் நீட்டியதும், யானை ஆசி தந்தது. அந்தப் பெண் வியப்போடு குழந்தையைத் திரும்ப வாங்கிக்கொண்டு வெளியேறிப் போனாள்.&lt;br /&gt;பின்பு யானைக்காரம்மா சொன்னார், Ôஅவர்கள் என் கணவரும், அவரது இரண்டாவது மனைவியும்Õ என்று. பாகன் துக்கத்தால் தலை கவிழ்ந்தார்.&lt;br /&gt;பெண்கள் வாழ்நாள் முழுவதும் படகின் இரண்டு துடுப்பைப் போல பிறந்த வீடு, புகுந்த வீடு என்ற இரண்டு வீடுகளுக்குள் ஊசலாடுகிறார் கள். அதிலும், பெண்ணின் வாழ்வும் தாழ்வும் அவள் திருமணத்தைச் சுற்றித்தான் பின்னப்பட்டிருக்கிறது. வீட்டு நாய்கள்கூட பழகிய மனிதர் களை, இடங்களைவிட்டுப் பிரிந்து போக இயலாமல் தத்தளிக்கும்போது, பெண் மட்டும் கண்ணை மூடிக்கொண்டு, யாவையும் மறந்து, இன்னொரு இடத்தில் வாழ வேண்டிய கட்டாயம் உருவாக்கப் பட்டு இருக்கிறது.&lt;br /&gt;படித்த கல்வி, தனித்திறன், விளை யாட்டு யாவும் ஒடுக்கப்பட்டு, எத்தனையோ ஆயிரம் பெண்கள் வீட்டின் சுவர்களுக்குள் அடங்கி வாழ் கிறார்கள். வாழ்தலின் சுவை, அவர் களுக்குப் பழக்கப்படுத்தப்படவே இல்லை. அவர்கள் வாழ்வின் நறுமணத்தை ஆழமாக முகரவே இல்லை. அதற்குள் வயதேறி, நரையும் நோயும் பற்றிக்கொண்டுவிடுகிறது.&lt;br /&gt;புறக்கணிப்பு என்ற அகன்ற கைகளின் உக்கிரத்துக்குப் பயந்துதான் பெரும்பான்மையான பெண்கள் வாழ்கிறார்கள். புறக்கணிக்கப்பட்ட பெண்ணின் வாழ்வு, முணுமுணுப்புகள் நிரம்பியது.&lt;br /&gt;பாவண்ணன், பெண்களின் அகவுலகச் சிக்கல்கள் குறித்துக் கூர்ந்த அக்கறை கொண்டவர். சிறந்த தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்களில் ஒருவர்.&lt;br /&gt;அவரது ‘அடி’ என்ற கதை, புறக் கணிக்கப்பட்ட பெண்ணின் துயரக் குரலை வெளிப்படுத்துகிறது. பச்சை மரங்களில் விழுந்த வெட்டு போல, இக்கதை வாசகனின் மனதில் ஆழமான வடுவை உருவாக்கிவிடக் கூடியது. கதை, விலக்கி வைக்கப்பட்ட ஒரு பெண்ணைப் பற்றியது. திருமணமாகிச் சேர்ந்து வாழ்வதற்கு இஷ்டமில்லாமல் விலக்கி வைக்கப்பட்ட பெண் ஒருத்தி, தன் கணவனைத் திரும்பத் தேடி வருவதில் கதை துவங்குகிறது.&lt;br /&gt;திருமணமாகிச் சேர்ந்து வாழப் பிடிக்காமல், பெண்ணால் விலக்கி வைக்கப்பட்டவன் என்று ஏதாவது ஒரு ஆண் இருக்கிறானா என்று எனக்குத் தெரியவில்லை!&lt;br /&gt;தங்கசாமி, ராதா இருவரும் சில ஆண்டுகள் சந்தோஷமாக வாழ்ந்து, அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறக்கிறது. ஒரு நாள் ராதா, ஏதோ வீட்டு வேலையில் இருந்தபோது, குழந்தை தவழ்ந்து போய், புழக்கடை கிணற்றில் விழுந்து இறந்துவிடுகிறது. அந்தச் சம்பவம் ராதாவைச் சித்தம் கலங்கச் செய்துவிடுகிறது.&lt;br /&gt;ஆனால், தங்கசாமி சில மாதங்களில் யாவையும் மறந்து, குடும்பம் நடத்த முயல்கிறான். ராதாவால் அந்த நினைவிலிருந்து மீள முடியவில்லை. மேலும், குழந்தைச் சாவை தங்கசாமி மறந்துபோனதைத் தாங்க முடியாமல், வெறிகொண்டவளாகிறாள்.&lt;br /&gt;சொந்தக்காரர்கள் ஏற்பாட்டின் பேரில், தங்கசாமி இரண்டாம் திருமணம் செய்துகொண்டுவிடுகிறான். அவளுக்குக் குழந்தைகள் பிறக்கின்றன. ராதாவைத் தள்ளி வைத்துவிட்டு, அவளுக்கு அவ்வப்போது ஏதாவது உதவிகள் செய்கிறான்.&lt;br /&gt;ராதா எப்போதாவது தங்கசாமி வீட்டின் முன்பு வந்து, மிகக் கொச்சையான வசைகளைத் திட்டி, அவனோடு சண்டையிடுவாள். பிறகு துரத்திவிடுவார்கள்.&lt;br /&gt;கதை துவங்கும்போதும் அப்படி ராதா வந்து தெருவில் நின்றுகொண்டு கத்துகிறாள். அதைச் சகிக்க முடியாமல் தங்கசாமி அவளை அடிஅடியென அடித்துவிடுகிறான். அடிபட்ட வலியுடன் தெருவில் புரண்டபடி அவனைப் பார்க்க வேண்டும் போல மனதில் இருந்ததாகவும், அதனால் சும்மா பார்த்துப் போகத்தான் வந்த தாகவும் சொல்கிறாள். அது பைத்தியத் தின் குரலாகத் தெரியவில்லை. கூட்டம் கூடிவிடுகிறது. அவிழ்ந்து கிடந்த தனது உடைகளைச் சரிசெய்தபடி, ராதா திரும்பவும் கல்லை எடுத்து தங்கசாமி மீது வீசியபடி கத்திக்கொண்டு தெருவில் நடந்து போகிறாள். யார் பைத்திய மாக நடந்துகொண்டது என்ற புதிர் கதையைச் சுற்றிலும் படர்ந்து விடுகிறது.&lt;br /&gt;‘உறவிலே வேகிறதைவிட, ஒரு கட்டு விறகிலே வேகலாம்!’ என்று ஒரு சொலவடை இருக்கிறது. வாழ்வுக்கு வலு சேர்ப்பதற் காக உருவாக்கப்பட்டது தான் எல்லா உறவுகளும்! அது கலையாவதோ, சுயநலமாவதோ எப்போதும் சரியானதல்ல.&lt;br /&gt;உறவு இரண்டு வகைப் பட்டது. ஒன்று  பாலில் ஒரு சொட்டுத் தயிரை விட்டதும் மொத்தப் பாலும் தயிராவது போல, ஒரு உறவின் வழியாக எல்லா உறவுகளும் ஒன்றுக்குள் ஒன்று ஐக்கியமாகிவிடுவது. மற்றது  பாலில் ஒரு சொட்டு உப்பு கலந்து விடுவது போல. அது, மொத்தப் பாலையும் திரியச்செய்துவிடும்.&lt;br /&gt;மிருகங்களைப் பழக்கி, நம் இஷ்டப்படி வேலை செய்யச் செய்வது எளிதானது. ஆனால், மனிதர்களைப் பழக்கி நெறிப்படுத்துவது எளிதானதல்ல. காரணம், மிருகங்கள் தங்களைப் பற்றி ஒருபோதும் பெருமை பேசிக் கொள்வதோ, அதீத சுய கற்பனை கொள்வதோ இல்லை!&lt;br /&gt;பாவண்ணன், தமிழ்ச் சிறுகதைகளில் தனித்துவமான கதை சொல்லும் முறை கொண்டவர். பாண்டிச்சேரியில் பிறந்த இவர், தற்போது பெங்களூரில் வசிக்கிறார். கன்னட இலக்கியங்களைத் தமிழுக்கு மொழியாக்கம் செய்து, அதற்காக மொழி பெயர்ப்புக்கான Ôசாகித்ய அகாடமிÕ விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என்று நீண்ட எழுத்து இயக்கம் கொண்டவர். இவரது Ôபாய்மரக் கப்பல்Õ நாவல் குறிப்பிட்டத்தக்கதாகும். இணையத்திலும் சிறு பத்திரிகைகளிலும் தொடர்ந்து எழுதி வரும் பாவண்ணன், தொலைதொடர்புத் துறையில் வேலை செய்கிறார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14025163-111997285957816755?l=e-arc.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://e-arc.blogspot.com/feeds/111997285957816755/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14025163&amp;postID=111997285957816755' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14025163/posts/default/111997285957816755'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14025163/posts/default/111997285957816755'/><link rel='alternate' type='text/html' href='http://e-arc.blogspot.com/2005/06/blog-post_111997285957816755.html' title='பாவண்ணன்'/><author><name>Chandramukhi</name><uri>http://www.blogger.com/profile/16507154480362737534</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14025163.post-111997283038512362</id><published>2005-06-28T08:33:00.000-07:00</published><updated>2005-06-28T08:33:50.390-07:00</updated><title type='text'>ஜி.நாகராஜன்</title><content type='html'>பொய் சிரிப்பு&lt;br /&gt;எஸ்.ராமகிருஷ்ணன்&lt;br /&gt;நேற்று பிற்பகலில் ஓர் இளம்பெண் என் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினாள். கதவைத் திறந்து பார்த்தபோது, அவளுக்கு இருபது வயது இருக்கும். புதிதாக அறிமுகமாகி இருக்கும் ஒரு ஐஸ்கிரீமை விற்பதற்காக கூல்பாக்ஸ் நிறைய கொண்டு வந்திருந்தாள். வெயிலில் வெகுதூரம் அலைந்து வந்திருக்கக்கூடும். அவளால் கோவையாகப் பேசக்கூட முடியவில்லை. நா வறட்சியுடன், கலைந்த தனது தலையைச் சரிசெய்தபடி, பழக்கப்படுத்தப்பட்ட கிளி பேசுவதுபோல விவரங்களை கடகடவென ஒப்பித்தாள். நான் சிரித்துக்கொண்டே,‘தண்ணீர் குடிக்கிறீர்களா?’ என்று கேட்டேன். அவள் தலையசைத்தாள்.&lt;br /&gt;ஜில்லென்று குளிர்ந்த தண்ணீர் பாட்டிலை வாயில் கவிழ்த்துக் கடகடவெனக் குடித்தாள். தண்ணீர் அவளது கழுத்திலிருந்து வழிந்தோடியது. இப்போது முகத்தில் சிரிப்பு துளிர்க்கத் துவங்கியது. விற்பனைப் பெண்களுக்கு என்றே ஒரு சிரிப்பு இருக்கிறது. அல்லது, அவர்கள் அப்படி சிரிக்கப் பழக்கப் படுத்தப்படுகிறார்கள். அந்தச் சிரிப்பு ஒரு காகிதத்தில் வரையப்பட்ட சித்திரம் போல அளவாகவும், சரியாகத் தோன்றி சரியாக நிறுத்தப்படு வதாகவும் இருக்கும். அதைப் பார்க்கும்போது, எவ்வளவு மில்லி மீட்டர் வாயைத் திறந்து எப்படிச் சிரிக்க வேண்டும் என்றுகூட பழக்கிவிடுகிறார் களோ என்று சற்று ஆத்திரமாக வும் இருக்கும்.&lt;br /&gt;ஆனால், என் முன் நிற்பவள் முகத்தில் சிரிப்பு, பாலில் ஆடை மிதந்துகொண்டு இருப்பது போல உதட்டோடு ஒட்டி இருந் தது. வீட்டில் யாருமில்லையோ என்பதைக் கண்டுகொண்டவள் போல, ‘ஊருக்குப் போயிருக் காங்களா சார்?’ என்று கேட்டாள். தலையாட்டினேன். அவள் பார்வையில் நாற்காலி யில் கிடந்த புத்தகம் கண்ணில் பட்டிருக்க வேண்டும். தலை யைக் கோதியபடியே, ‘அந்த புக்கை பார்க்கலாமா?’ என்று கேட்டாள்.&lt;br /&gt;நான் அந்தப் புத்தகத்தை எடுத்து அவளிடம் கொடுத் தேன். அது ஆதவனின் காகித மலர்கள். அவள் மிக ஆசையுடன் அதைப் புரட்டிப் பார்த்தபடி, ‘எனக்கு தி.ஜானகிராமன் எழுத்து ரொம்பப் பிடிக்கும் சார். படிச்சிருக்கேன்’ என்றபடி, அடுத்து எங்கே போவது என்று யோசித்தாள். ஆச்சர்ய மாக இருந்தது. தி.ஜானகிராமன் படித்த விற்பனைப் பிரதிநிதி ஒருத்தியை முதல்முறையாகச் சந்திக்கிறேன். அவ ளிடம் ஏனோ பேச வேண்டும் போல இருந்தது. ‘உனக்கு ஐஸ்கிரீம் சாப்பிடப் பிடிக்குமா?’ என்று கேட்டேன்.&lt;br /&gt;இதை எதிர்பாராத அவள், குடத்து தண்ணீர் விளிம்புக்கு உள்ளாகவே ததும்பிக் கொள்வது போன்று உதட்டுக்குள்ளாகவே ஒரு சிரிப்பு சிரித்த படியே, ‘இது தொழில் சார்! எனக்கு டீ குடிக்கத்தான் பிடிக்கும்’ என்றாள். ‘ஆமாம், இந்த வெயிலில் டீ குடிப்பது இதமாகத்தான் இருக்கும்’ என்று நான் சொன்னதும், உதட்டில் கரை தட்டி நின்ற சிரிப்பு வெளிப்பட்டு விட்டது. Ôஇப்போ இல்லை சார்! சாயங்காலம் குடிப் பேன். ஆனா, வழியில எங்கா வது டீக்கடையில நின்னு டீ குடிக்கலாம்னா ஒரே தொல்லையா இருக்கு. பொம்பளை ரோட்ல நின்னு டீ குடிக்கக் கூடாதாம். ஓட்டல்ல போயி காபி சாப்பிடச் சொல்றாங்க. இவங்க அசிங்கமா ரோட்ல நின்னு ஒண்ணுக்குப் போறது தப்பில்லையாம். நாங்க டீ குடிச்சா தப்பாம்!Õ என்றாள்.&lt;br /&gt;அந்தக் கோபம் உண்மையாக இருந்தது. உண்மை தானே! கண்ணுக்குத் தெரியாத ஒரு மின்சார வேலி பெண்களை நுழையவிடா மல் எத்தனையோ இடங் களில் தடுத்துக்கொண்டு தானே இருக்கிறது! விற்ப னைப் பெண் தயங்கித் தயங்கிக் கேட்டாள்... Ôஉங்க டாய்லெட்டை நான்கொஞ் சம் யூஸ் பண்ணிக்கலாமா?Õ&lt;br /&gt;‘தாராளமாக!’ என்றேன்.&lt;br /&gt;ஐஸ்கிரீம் பேக்கை ஓர மாக வைத்துவிட்டு, உள்ளே சென்றாள். விளக்கிச் சொல்ல முடியாத ஆயிரம் பிரச்னைகளை சுமந்துகொண்டுதான் விற்பனைப் பிரதிநிதிகள் தெருக்களில் அலை கிறார்கள். நினைக்கை யில் மாநகர் மீது ஆத்திர மாக வந்தது. சுகாதாரமான கழிப்பறைகளைக்கூட உருவாக்கித் தர முடியாத இந்த நகருக்கு எதற்காக இத்தனை பேர் தினமும் வந்து குவிகிறார்கள்?&lt;br /&gt;விற்பனை பிரதிநிதியின் முகத்தில் ஈரம் வழிந்தது. ‘ரொம்ப தேங்க்ஸ் சார்!’ என்றவள், Ôரெண்டு வருஷமா இந்த வேலை பாக்குறேன். வீடு வீடா நடந்து கால் தேய்ஞ்சு போச்சு சார்! அது கூடப் பரவாயில்லை... தனியா வர்ற பொண்ணு தானேனு பல்லை இளிக்கிறாங்க பாருங்க, அதைத்தான் சகிக்க முடியலை. அப்படியே பல்லைத் தட்டி உடைக்கலாமானு வருது. ஒரு நாள் வேலை செஞ்சா ஐம்பது ரூபா கிடைக்கும். அதுக்குத் தெரு நாய் போல அலையுறோம். இருபது வயசு ஆனாலும் சரி, அறுபது வயசு ஆனாலும் சரி... ஆம்பிளைப் புத்தி ஒண்ணுதான் சார். பொம்பளைன்னா வாயிலே தானா எச்சில் ஒழுகுது பாருங்க. சகிக்க முடியலைÕ என்றபடி தனது சுமைகளைத் தூக்கிக் கொண்டாள். ஏதோ நினைத்துக் கொண்டவள் போல, ‘தப்பா ஏதாவது பேசியிருந்தா மன்னிச்சிருங்க. மனசிலே தோணுச்சு... பேசிட்டேன்!’ என்று சொல்லிவிட்டு விடுவிடுவென வெயிலில் இறங்கிப் போய்விட்டாள்.&lt;br /&gt;அவள் போன நெடுநேரத்துக்கு அந்த உக்கிரம் அறையில் வழிந்தோடிக் கொண்டு இருந்தது. காமம்தான் இப்படி அலைக்கழிக்கிறதா... இல்லை, காம உணர்ச்சிகளின் போர்வையில் நமது மன வக்கிரங்கள் வெளிப் படுகின்றனவா?&lt;br /&gt;மேற்கு மலைத் தொடரில் உள்ள ஆதிவாசிகளைப் பார்த்திருக்கிறேன். அங்கு ஆண்களும் பெண்களும் சமமாகவே நடத்தப்படுகிறார்கள். பெண்களைக் கேலி செய்வதோ, அசிங்கமாக நடந்துகொள்வதோ கிடையாது. ஆண்களைவிடவும் பெண்கள் கடுமையான உடல் உழைப்பாளிகள். கர்ப்பிணிப் பெண் தலையில் ஒரு சுமையும், இடுப்பில் ஒரு சுமையுமாக சர்வ சாதாரணமாகப் பாறையில் ஏறி, நடந்து வந்துகொண்டு இருப்பாள். உண்மையில் காலத்தில் பின்தங்கிப் போனது நாமா, அவர்களா?&lt;br /&gt;சரித்திரம் முழுவதும் பெண்களின் உடல்மீது படிந்த ரத்தக் கறையைத்தான் காண முடிகிறது. இந்தியப் பிரிவினை யின்போது கொல்லப்பட்ட வர்களை விடவும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்கள்தான் அதிகம். இதைவிடவும் மிகக் கொடுமையானது, அப்படி வன்கொடுமையால் பாலியல் உறவு கொள்ளப்பட்ட பெண்கள் கர்ப்பமாகி, அந்தக் கர்ப்பத்தைக் கலைப்பதற்காக பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசே முகாம்களை நடத்தியது. ஒரே நாளில் இருபதாயிரம் பெண்கள் கர்ப்பத்தைக் கலைத்துக்கொண்டார்கள். சூறையாடப்பட்ட நகரங்களைவிட சிதைக்கப்பட்ட பெண் உடல்கள் அதிகம். வன்முறையின் இலக்கு எப்போதுமே பெண் உடல்தான்!&lt;br /&gt;எத்தனையோ இரவுகளில் காரில் பயணம் செய்யும்போது நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் புளிய மரங்களின் அடியில் நின்றபடி லாரி களின் முகப்பு வெளிச்சத்துக்கு கண் கூசி நிற்கும் பெண்களைக் கண்டிருக்கிறேன். வாழ்வின் எந்த நெருக்கடியிலும் இந்த அளவு தன்னை விற்று வாழும் நிலையை ஆண் அடைந்ததே இல்லை. அவனுக்குப் பெண்ணின் துயரம் புரியவே புரியாது.&lt;br /&gt;தான் வாழ வேண்டும் என்பதற்காக எவரையும் ஏமாற்றி, திருடி வாழத் தயங்காதவன் ஆண். தன் உடலில் ஒரு சிறிய வேனல் கொப்பளம் வந்தால்கூடக் கூச்சல் போடுகின்றவன். உடல் அவனுக்கு கேளிக்கையின் சாதனம். புல்தரையைக் கண்ட பசு மேய்வது போல, அவனுக்குப் பெண்கள் வெறும் இச்சையை தீர்க்கும் பொருள் மட்டும்தான்!&lt;br /&gt;வளர்ந்த சமூகமாக இருந்தாலும் சரி, பின்தங்கிய சமூகமாக இருந்தாலும் சரி, பெண்களை நடத்தும் விதத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படவே இல்லை. பெண்கள் மீதான ஒடுக்குமுறை யும் வன்முறையும் இல்லாத சமூகம் இருக்கிறதா என்ன? குறிப்பாக, குடும்பம் என்ற அமைப்பு பெண்கள் மீது செலுத்தி வரும் வன்முறை குறித்து இன்று இலக்கியத்தில் தீவிர கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.&lt;br /&gt;இந்தக் கேள்விகளை பல ஆண்டுகளுக்கு முன்பாகவே எழுப்பியவர் ஜி.நாகராஜன். இவர் தமிழின் விதிவிலக்கான எழுத்தாளர். மரபான கதை உலகை விட்டு விலகிய கலகக்குரல் இவருடையது. இவரது கதையுலகம் முழுவதும் பெண்களால் நிரம்பியது. இந்தப் பெண்களில் பெரும்பான்மையோர் பாலியல் தொழிலாளர்கள். ஒடுக்கப்பட்ட இந்தப் பெண்களின் வாழ்வை, அக நெருக்கடிகளை, மூச்சுத் திணறலை தனது எழுத்தில் நுட்பமாகப் பதிவு செய்தவர் ஜி.நாகராஜன். இவரது ஆண்மை என்ற கதை மிகச் சிறப்பானது.&lt;br /&gt;பாலியல் தொழில் புரியும் ஒரு பெண்ணைப் பற்றியது இக்கதை. அவள் தன் அப்பா மற்றும் தம்பியோடு பேருந்து நிலையத்தில் வந்து நின்றுகொண்டு ஆள் பிடிக்கிறாள். அவளிடம் காசு கொடுத்து இன்பம் பெறுவதற்காக வந்து சேர்கிறான் ஓர் இளைஞன். படுக்கை அறையில் அந்தப் பெண்ணிடம், எதற்காக அவள் அப்பாவும் தம்பியும் இது போன்ற வேலைக்கு துணை செய்வதற்கு நிற்கிறார்கள் என்று மனச் சங்கடத்துடன் கேட்கிறான்.&lt;br /&gt;தன் அப்பா பிசினஸ் செய்து அதில் தோற்றுப் போய்விட்டதாகவும். அப்பாவின் நிலையை நினைத்து நினைத்து அம்மாவுக்குப் புத்தி பேதலித்துப் போனதாகவும், அன்றிலிருந்து அம்மாவைக் குணப்படுத்துவதற்காக அவர் எதையும் செய்யத் துணிந்துவிட்டார் என்றும், ‘வீட்டை மாமாதான் பராமரிக்கிறார். அவருக்கு நான் இப்படியரு தொழில் செய்வது தெரிந்தால் விஷம் கொடுத்துக் கொன்றுவிடுவார்’ என்றும் சொல்கிறாள்.&lt;br /&gt;குடும்பச் சுமையின் காரணமாக பெத்த பெண்ணைத் தகப்பனே கூட்டிக்கொடுப்பதை இளைஞனால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அவளுக்குப் பணம் கொடுத்துவிட்டு வெளியேறுகிறான். ஏன் அவளோடு உறவுகொள்ளவில்லை என்று அவள் கேட்டதற்கு, தான் ஒரு பேடி, ஆண்மையற்றவன் என்று சொல்லிவிட்டு அவசரமாக வெளியேறி விடுகிறான் என்பதோடு கதை முடிகிறது.&lt;br /&gt;கதையை வாசித்து முடிக்கும்போது ஒரு கத்தி ஆழமாக உடலில் இறங்குவது போல வலியும் துக்கமும் ஏற்படுகின்றன. அதிநவீன கணிப்பொறியும், அணு ஆயுதங்களுமாக உலகம் தனது வெற்றியின் களிப்பை ஒருபக்கம் கூச்சலிட்டுக்கொண்டு இருக்கும்போது, இன்னொரு பக்கம் துடைத்துப் போட்ட காகிதங்களைப் போல பெண்களைச் சர்வ அலட்சியமாக நடத்தும் சூழலும் இருந்து வருகிறது.&lt;br /&gt;இந்தியாவில் உள்ள ஆறுகளுக்கெல் லாம் பெண் பெயரிட்டது ஆற்றைப் போலவே பெண்களும் எவரும் கவனிக்கப்படாமலும், ஆக்ரமிப்புக்கும் அத்துமீறலுக்கும் உள்ளதாவதால்தானோ என்று சில சமயம் எனக்குத் தோன்றுகிறது. என்ன செய்வது..! நாடே கொண்டாடும் சத்தியவான் அரிச்சந்திரன்கூட தன் மனைவியை ஏலம் போட்டு விற்றவன் தானே? ஜி.நாகராஜன் மதுரையைச் சேர்ந்தவர். தமிழ்ச் சிறுகதையுலகில் இவருக்கென்று தனியான இடம் உண்டு. பாலியல் ஒடுக்குமுறை குறித்து தீவிர விவாதங்களை உருவாக்கும் எழுத்து நாகராஜனுடையது.&lt;br /&gt;கல்லூரிப் பேராசிரியராக வாழ்வைத் துவக்கிய நாகராஜன், போதையின் பிடியில் சிக்குண்டு நாற்பது வயதுக்குள்ளாகவே சுய அழிவைத் தேர்வு செய்துகொண்டவரானார். இவரது கதைகள் வாழ்வின் போலித்தனத்தை, இழிவை விமர்சனம் செய்கின்றன. நிழல் உலகமாக இருந்து வரும்பாலியல் தொழிலாளர்களின் வாழ்வு இவரது படைப்புகள் எங்கும் உக்கிரமாக வெளிப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;குறத்தி முடுக்கு, நாளை மற்றும் ஒரு நாளே போன்றவை இவரது முக்கிய படைப்புகள்!&lt;br /&gt;http://www.vikatan.com/av/2005/may/29052005/av0602.asp&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14025163-111997283038512362?l=e-arc.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://e-arc.blogspot.com/feeds/111997283038512362/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14025163&amp;postID=111997283038512362' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14025163/posts/default/111997283038512362'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14025163/posts/default/111997283038512362'/><link rel='alternate' type='text/html' href='http://e-arc.blogspot.com/2005/06/blog-post_111997283038512362.html' title='ஜி.நாகராஜன்'/><author><name>Chandramukhi</name><uri>http://www.blogger.com/profile/16507154480362737534</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14025163.post-111997277395514514</id><published>2005-06-28T08:32:00.000-07:00</published><updated>2005-06-28T08:32:53.960-07:00</updated><title type='text'>நகுலன்</title><content type='html'>எஸ்.ராமகிருஷ்ணன்&lt;br /&gt;நினைவுப் பாதை&lt;br /&gt;ஒவ்வொரு முக்கிய எழுத்தாளரையும் தேடிச் சென்று பார்ப்பது என்று எனது இருபது வயதில் புறப்பட்டபோது, அது ஒரு சாகசப் பயணம் போல அமையக்கூடும் என்றே நினைத்தேன்.&lt;br /&gt;பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழிலும் மற்ற இந்திய மொழிகளிலும் எழுதிக்கொண்டு இருக்கும் எத்தனையோ எழுத்தாளர்களைச் சந்தித்திருக்கிறேன். இந்தச் சந்திப்பில் ஒன்றிரண்டைத் தவிர, பெரும்பாலானவை கசப்பான அனுபவங்களே!&lt;br /&gt;எழுத்தாளன் ஒரு விசித்திரப் பிறவி என்பதில் நம்பிக்கையற்றவன் நான். எழுதுவது என்பது ஒரு வேலையல்ல, பொறுப்பு உணர்ச்சி என்று நம்புகிறவன்.&lt;br /&gt;தாலூகா அலுவலகம் ஒன்றில், ரேஷன்கார்டு கேட்டு விண்ணப்பம் செய்வதற்காகச் சென்றிருந்தேன். அங்கே உள்ள அதிகாரி, Ôஎன்ன வேலை செய்கிறீர்கள்?Õ என்று கேட்டதும், Ôரைட்டர்Õ என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அதிகாரி பென்சிலை உருட்டிக் கொண்டே, Ôஎந்த ஸ்டேஷன்ல?Õ என்று கேட்டார். எனக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. கேள்வியும் புரியவில்லை. அவராகவே Ôபோலீஸ் ரைட்டர்தானே?Õ என்ற பிறகுதான் கேள்வியின் பின்புலம் எனக்குப் புரிந்தது. எழுத்தாளர்களைத் தேடிக் காண்பது என்ற எனது ஊர்ச் சுற்றலில்தான் நகுலனை முதன்முதலாகச் சந்தித்தேன். நகுலன் ஒரு நல்ல கவிஞர், நாவலாசிரியர்.&lt;br /&gt;திருவனந்தபுரத்தில் அவரது வீடு, கௌடியார் என்ற பகுதியில் இருக்கிறது. நான் பார்க்கச் சென்ற நாட்களில், அவரது Ôநாய்கள்Õ என்ற நாவல் வெளியாகியிருந்தது. Ôநாய்களைப் பற்றி ஒருவர் நாவல் எழுதியிருக்கிறாரே!Õ என்று ஆச்சரியத்துடன் அதை வாசிக்கத் துவங்கினேன். நாவலில் ஓர் உருவகமாக, நாய் என்ற படிமத்தைப் பயன்படுத்தி இருந்தார்.&lt;br /&gt;நாவல் முழுவதும் மெல்லிய கேலியும் கவித்துவமும் தத்துவத் தெறிப்புகளும் நிறைந்திருந்தன. முன்னதாக நகுலன் கவிதைகள் மீது கொண்ட ஈடுபாடு, இந்த வாசிப்பினை அதிகப்படுத்தவே, அவரைக் காண்பதற்காகச் சென்றிருந்தேன்.&lt;br /&gt;நகுலன் திருமணம் செய்துகொள்ளாதவர். ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி, ஓய்வுபெற்று தனிமையில் வாழ்பவர். அவருக்குள்ள ஒரே துணை  ஒரு பூனை மட்டும்தான்!&lt;br /&gt;ஒரேயரு வேலைக் காரப் பெண் உண்டு. அவர், பல வருடங்களாக அந்த வீட்டில் வேலை செய்து, நகுலனின் சகோதரி போல, அவர் மீது அதிக அக்கறை கொண்டவராக இருந்தார்.&lt;br /&gt;தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் முதுகலைப் பட்டம் பெற்றவர் நகுலன். அவரது வீடெங்கும் புத்தகங்களே நிரம்பி இருந்தன. பசுமையான மரங்களடர்ந்த ஒரு சரிவில் உள்ளது அவரது வீடு. நகுலன் தன்னைத் தேடி வருபவர்களோடு கொள்ளும் உறவு விசித்திரமானது. சந்தித்த மறு நிமிடமே, ஒரு குழந்தையைப் போல ஏதேதோ கேட்கத் துவங்கிவிடுவார். அது ஒருவிதமான நட்பாக வளர்ந்து செல்லும்.&lt;br /&gt;‘Ôநீங்கதான் ராமகிருஷ்ணனா?’Õ&lt;br /&gt;‘Ôஆமாம்!’Õ என்று தலையாட்டினேன்.&lt;br /&gt;அவர் சிரித்துக்கொண்டே, ‘Ôநீங்கதான் ராமகிருஷ்ணன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?’Õ என்று கேட்டார். இந்தக் கேள்விக்கு எப்படிப் பதில் சொல்வது என்று தெரியாமல், நானும் சிரித்தேன்.&lt;br /&gt;நகுலன் தனது புன்னகை படரும் முகத்தோடு, Ô‘எவ்வளவு வருஷமா ராமகிருஷ்ணனா இருக்கீங்க?’Õ என்று கேட்டார். கேலியாக இருந்தாலும், இந்தக் கேள்வி எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது.&lt;br /&gt;Ô‘பிறந்ததிலிருந்து ராமகிருஷ்ணனாகவே இருக்கிறேன்’Õ என்றேன். அவர் அதை ரசித்தவர் போல, ‘Ôபிறந்ததில் இருந்தா?’Õ என்று சத்தமாகச் சிரித்தார். Ôஅந்தச் சிரிப்பின் ஆழம் எத்தகையது?Õ என்று வியப்போடு பார்த்தேன்.&lt;br /&gt;அவர் கட்டிலின் அருகில் வந்து, பூனை சுருண்டு படுத்துக்கொண்டது. அவர் பூனையைப் பார்த்தபடியே, ‘Ôநான் என் பூனைக்குப் பெயரே வைக்கவில்லை. அது ஏதாவது ஃபீல் பண்ணுமா?Õ’ என்று கேட்டார். எனக்கு எப்படிப் பதில் சொல்வது என்றே புரியவில்லை. நான் அமைதியாக, ‘Ôபூனையை எப்படிக் கூப்பிடுவீர்கள்?’Õ என்று கேட்டேன். Ô‘பூனையைப் பூனை என்றுதான் கூப்பிடுவேன். அதுதானே சரியான முறை?’Õ என்றார்.&lt;br /&gt;இந்த உரையாடலை வேற்று மனிதன் யாராவது கேட்டால், Ôஎன்ன இது பிதற்றல்?Õ என நினைப்பான். ஆனால், அதுதான் நகுலன்!&lt;br /&gt;அவரது பரிகாசமும் ஒவ்வொன்றின் மீது அவர் எழுப்பும் கேள்விகளும் குழந்தைகளைப் போலவே விசித்திரமானதும் ஆழமானதும் ஆகும். உலகின் மீதான அவரது வியப்பும் ஈடுபாடும் தர்க்கங்களை மீறியது.&lt;br /&gt;பேச்சு எங்கெங்கோ சுற்றி, எழுத்தாளர்களைப் பற்றிய தாகத் திரும்பியது. நகுலன், தான் ஒரு எழுத்தாளரைப் பார்க்கப் போனதைப் பற்றி நினைவுகூர்ந்தார்.&lt;br /&gt;1980&amp;amp;களில் பிரபலமாக இருந்த ஒரு நாவலாசிரியரைப் பார்க்க நகுலன் சென்று இருந்தார். எழுத்தாளர் ஒரு வியாபாரியாகவும் இருந்தார். நகுலன் பார்க்கச் சென்றபோது, அவர் தனது கடையில் இருந்துகொண்டே, Ôஆள் ஊரில் இல்லைÕ என்று எதனாலோ சொல்லி அனுப்பி விட்டார். நகுலனுக்கு Ôஅவர் உள்ளேதான் இருக்கிறார்Õ என்று உறுதியாகத் தெரிந்தது. ஆகவே, மாலை வரை அங்கேயே காத்திருந்து, எழுத்தாளர் வெளியே வந்ததும், பின்னாடியே சென்று முதுகில் ஒரு தட்டுத் தட்டி, Ôசார்... நானும் ஊரில் இல்லைÕ என்று சொல்லிவிட்டு, மறு நிமிடமே புறப்பட்டு திருவனந்தபுரம் வந்துவிட்டாராம். இதைச் சொல்லி முடித்த நிமிடத்தில், நகுலன் கண்களில் இருந்த கேலி, சிறுவர்களுக்கு மட்டுமே உரியது.&lt;br /&gt;நான் பேசிக்கொண்டு இருந்த காலையில், மருத்துவச் சோதனை ஒன்றுக்காக அவர் வெளியே செல்ல வேண்டிய அவசியம் இருந்தது. மதியம் சந்திப்பதாகச் சொல்லிவிட்டு, வெளியே வந்துவிட்டேன். திரும்பவும் மாலையில் நான் சென்றபோது, காலையில் கேட்ட கேள்விகளையே மறுபடி கேட்டார்.&lt;br /&gt;‘Ôநீங்கதானே ராமகிருஷ்ணன்?’Õ&lt;br /&gt;‘Ôஆமாம்!’Õ&lt;br /&gt;‘Ôஅப்போ, காலையில் Ôராமகிருஷ் ணன்Õனு ஒருத்தர் வந்திருந்தாரே, அவர் உங்களுக்குத் தெரிந்தவரா?Õ’ ‘Ôஓரளவுக்குத் தெரியும்’Õ என்றேன். நகுலனின் சிரிப்பு பீறிட்டது. ‘Ôஅப்போது அவரிடம் பேசிக்கொண்டு இருந்ததை உங்களிடமும் பேசலாம், இல்லையா?Õ என்று கேட்டார். உரையாடலைத் தத்துவத்தின் உயர்ந்த நிலைகளை நோக்கி நகர்த்திப் போகும் கலை அவருக்கே உரியது.&lt;br /&gt;ஒரு நாள் முழுவதும் நகுலனோடு இருந்தேன். மாலை, நானும் அவரும் திருவனந்தபுரம் சாலையில் நடந்து சென்றோம். அவர் அழகான இளம்பெண் ஒருத்தியைக் காட்டி, Ôஇவள் அழகாக இருக்கிறாளா?Õ என்று கேட்டார். மிக அழகாக இருப்பதாகச் சொன்னேன். அவர், Ôகண்ணில் பார்த்தாலே அழகு தெரிந்துவிடுகிறது, இல்லையா? அது எப்படி சார்?Õ என்று கேட்டார். என்ன சொல்வதென்றே தெரியவில்லை.&lt;br /&gt;நகுலன் சாலையில் செல்லும் சைக்கிள்காரனைப் பற்றி, தெருநாயைப் பற்றி, கோடையில் பெய்த மழையைப் பற்றி, இறந்துபோன அம்மாவைப் பற்றி எனப் பேச்சின் சுழல்வட்டத்துக்குள் நீண்டுகொண்டு இருந்தார்.&lt;br /&gt;அவரைச் சந்தித்து வந்த நீண்ட காலத்துக்கு, அந்தக் கேள்வி என் மனதில் நீந்திக்கொண்டே இருந்தது. நான் ராமகிருஷ்ணன் என்று எனக்கு எப்படித் தெரியும்?&lt;br /&gt;சிறுவர்களின் தீரா விளையாட்டைப் போல, உலகை ரசிக்கும் பக்குவமும் மனதும் அவரிடம் இருந்ததை அறியத் துவங்கினேன். அதன் பிறகு பலமுறை நகுலனைச் சந்தித்திருக்கிறேன். ஒவ்வொரு சந்திப்பும் ஒரு தனித்த அனுபவம்!&lt;br /&gt;ஒரு முறை நகுலன் தன் வீட்டின் வாசலில் உட்கார்ந்தபடி, சாலையில் போகிறவர்களுக்குக் கையசைத்துக்கொண்டு இருந்தார். பள்ளிச் சிறுவர்கள் சிலர் கையசைத்துப் போனார்கள். அவர் கையசைத்தபடியே என்னிடம் கேட்டார்...&lt;br /&gt;Ô‘நான் இறந்துபோன பிறகு, Ôஇந்த வீட்டில் கை காட்டும் கிழவன் ஒருவன் இருந்தான்Õ என்று குழந்தைகள் நினைப் பார்கள், இல்லையா? அதற்குத்தான் கையசைக்கிறேன்’Õ என்றார். இந்த ஆதங்கத்தின் கீழ் இருந்த துக்கம், ஒரு தேளின் விஷக்கடுப்பைப் போல என் உடலெங்கும் தாக்கியது.&lt;br /&gt;நகுலனை Ôஎழுத்தாளர்களின் எழுத்தாளர்Õ என்பார்கள். அவருக்கு வயது முற்றி, எண்பத்து இரண்டைத் தாண்டி நீள்கிறது. ஆனாலும், அவர் மனதில் இலவம் பஞ்சு காற்றில் பறப்பது போல வார்த்தைகள் பறந்து கொண்டே இருக்கின்றன.&lt;br /&gt;நகுலனின் கதைகளில் பிடித்தமானது, Ôஎட்டு வயதுப் பெண் குழந்தையும், நவீன மலையாளக் கவிதையும்Õ என்ற கதை. இதைக் கதை என்று சொல்ல முடியாது. ஒரு நிகழ்வு!&lt;br /&gt;அதுவும், ஒரு சிறுமி நகுலனின் வீட்டுக்கு வந்து, அவரோடு பழகியதைப்பற்றிய ஒரு நினைவுக் குறிப்பு என்றுகூடச் சொல்லலாம். இக்கதை கவிதையின் சூட்சுமம் பற்றியது.&lt;br /&gt;சிமி என்ற எட்டு வயதுச் சிறுமி, அவரது பக்கத்து வீட்டில் வசிக்கிறாள். அவள் ஒரு நாள் Ôபடிப்பதற்காக ஏதாவது புத்தகம் வேண்டும்Õ என்று நகுலனின் வீட்டுக்கு வருகிறாள்.&lt;br /&gt;நகுலன், அவள் படிப்பதற்காக குஞ்சுண்ணி என்ற மலையாளக் கவிஞரின் புத்தகத்தைத் தருகிறார். அந்தக் கவிதைத் தொகுதியை வாசித்து விட்டு, குழந்தை மறுநாள் Ôசிமி குமி உமிக்கரிÕ என்று ஒரு கவிதையை எழுதி வந்து காட்டுகிறது.&lt;br /&gt;அக்கவிதைகூட குஞ்சுண்ணி கவிதை போலவே சந்தமும் சொற்சிக்கனமும் கொண்டு இருக்கிறது. நகுலன் அந்தச் சிறுமியின் கவிதையை ரசித்தபடி, Ôநல்ல கவிதை, வாசிப்பவரை உடனே அதைப் போல ஒன்றை உருவாக்கச் செய்வதுதான்Õ என்று பாராட்டுகிறார்.&lt;br /&gt;அதோடு, Ôகவிதை என்பது சப்த ஒழுங்கால் உருவாவது என்று சிறுமிக்குப் புரிந்திருக்கிறதுÕ என்று பாராட்டுகிறார்.&lt;br /&gt;இக்கதை வழக்கமான கதைகளைப்போலப் பெரிய சம்பவம் எதையும் சொல்லவில்லை. மாறாக, குழந்தைகளின் விளையாட்டைப் போலத்தான், கவிதையும் ஒரு எதிர்பாராமையும் அழகும் கொண்டு இருக்கிறது என்ற நிதர்சனமான உண்மையை வெளிப் படுத்துகிறது.&lt;br /&gt;எழுத்தின் ரகசியங்களைக் கற்றுக்கொள்வதற்கு நாம் எழுத்தாளனை அணுகினால், அது நிச்சயம் ஏமாற்றமாகவே முடியும்.&lt;br /&gt;Ôபெரிய கத்தியைத் தேர்ந்தெடுக்கிறாயா, இல்லை, சிறிய கத்தியைத் தேர்ந்தெடுக்கிறாயா என்பது முக்கியம் இல்லை. எதிரியின் இதயத்துக்கும் உன் கத்தி முனைக்கும் உள்ள இடைவெளி எவ்வளவு இருக்கிறது என்பதுதான் முக்கியம்Õ என்று யுத்த சாஸ்திரம் கூறுகிறது.&lt;br /&gt;அந்த நூலை எழுதியவன் ஒரு பௌத்த பிக்கு. ஒருவகை யில் இதுதான் எழுத்தின் ரகசியம். இதைக் கற்றுத் தருபவன், கதையை எழுதியவன் இல்லை. மாறாக, ஒரு நாடோடி.&lt;br /&gt;கற்றுக் கொள்வதற்கு ஆசானை விடவும் மனம்தான் முக்கியமாகத் தேவைப்படுகிறது. மனதைக் குழந்தையைப் போல வைத்துக்கொள்வது எளிதானதா என்ன?&lt;br /&gt;நகுலன் திருவனந்தபுரத்தில் வாழ்ந்துவருபவர். எண்பத்திரண்டு வயதான இவர், தமிழ்ச் சிறுகதைகளில் பல புதிய பரிசோதனைகள் செய்தவர்.&lt;br /&gt;பழந்தமிழ் இலக்கியத்திலும் நவீன ஆங்கில இலக்கியத்திலும் மிகுந்த ஈடுபாடுகொண்டவர். Ôஎழுத்துÕ இதழில் எழுதத் துவங்கியவர்.&lt;br /&gt;நகுலன் கவிதைகள், நாய்கள், ரோகிகள், வாக்குமூலம், மஞ்சள்நிறப் பூனை போன்றவை இவரது குறிப்பிடத்தக்க படைப்புகள். இவர் தொகுத்த Ôகுரு«க்ஷத்திரம்Õ இலக்கியத் தொகுப்பு, தமிழில் மிக முக்கியமானதாகும். விளக்கு விருது, ஆசான் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் நகுலன்.&lt;br /&gt;http://www.vikatan.com/av/2005/may/22052005/av0602.asp&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14025163-111997277395514514?l=e-arc.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://e-arc.blogspot.com/feeds/111997277395514514/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14025163&amp;postID=111997277395514514' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14025163/posts/default/111997277395514514'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14025163/posts/default/111997277395514514'/><link rel='alternate' type='text/html' href='http://e-arc.blogspot.com/2005/06/blog-post_111997277395514514.html' title='நகுலன்'/><author><name>Chandramukhi</name><uri>http://www.blogger.com/profile/16507154480362737534</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14025163.post-111997274154130126</id><published>2005-06-28T08:31:00.001-07:00</published><updated>2005-06-28T08:32:21.546-07:00</updated><title type='text'>வண்ணநிலவன்</title><content type='html'>எஸ்.ராமகிருஷ்ணன்&lt;br /&gt;தொட்டில் வாசனை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஊரிலிருந்து சென்னைக்கு கைக்குழந்தையோடு இடம் மாறி வந்த நாளில், என் மனைவி சிறிய பொட்டலம் ஒன்றை முடிந்து கையோடு எடுத்து வந்திருந்தாள். அந்தப் பொட்டலம் நீண்ட நாட்களாக குழந்தையின் தொட்டில் கம்பில் கட்டித் தொங்கவிடப்பட்டு இருந்தது.&lt;br /&gt;ஒவ்வொரு முறை அதைக் காணும்போதும், என்ன இருக்கிறது அதில் என்று கேட்க வேண்டும் என்று தோன்றும். குழந்தையின் கண் திருஷ்டிக்காக எதையாவது கட்டி வைத்திருப்பார்கள் என்று கேட்காமலே விட்டுவிடுவேன். பையன் தொட்டிலில் உறங்கும் வயதைக் கடந்து வந்துவிட்ட பிறகு, இனி தொட்டிலின் தேவை முடிந்துவிட்டது என்பதுபோல அவிழ்த்துக்கொண்டு இருந்தார்கள். அந்தப் பொட்டலம் சுருங்கிச் சின்னதாகிக் கீழே விழுந்தது.&lt;br /&gt;என்னதான் இருக்கிறது அந்தப் பொட்டலத்தில் என்று எடுத்துப் பிரித்துப் பார்த்தேன். உள்ளே பிடி மண் இருந்தது. என் முகத்தைப் பார்த்தபடியே மனைவி சொன்னாள்...&lt;br /&gt;Ô‘பிறந்த இடத்தின் மண் இல்லாவிட்டால் குழந்தை நிம்மதியாகத் தூங்காது. அதற்காக ஊரிலிருந்து வரும்போது ஒரு பிடி மண்ணைக் கொண்டுவந்து கட்டினேன்!ÕÕ&lt;br /&gt;வியப்பாக இருந்தது. பிறந்த மண்ணின் வாசனையும் நெருக்கமும் இல்லாவிட்டால் குழந்தைகளுக்கு நல்ல தூக்கம் வராது என்பது எத்தனை ஆழ்ந்த நம்பிக்கை! அப்படியென்றால், பையன் தன் உறக்கத்திலும் கனவிலும் என் ஊரைத்தான் நுகர்ந்துகொண்டு இருந்திருக்கிறானா? ஊரின் வாசம்தான் உறக்கத்தை வரவழைக்கக் கூடியதா? இப்படிப் பிறந்ததிலிருந்து மண் வாசனையை நுகர்ந்துகொண்டு இருந்த நாம், வளர்ந்த பிறகு அதை எப்படி மறந்துவிடுகிறோம்? மண்ணோடு மனிதனுக்கு உள்ள உறவு விசித்திரமானதுதான், இல்லையா?&lt;br /&gt;ஊரைப் பிரிந்து வருவது எளிதானதில்லை. புகழ்பெற்ற ருஷ்ய எழுத்தாளரான டால்ஸ்டாய், தனது கிராமத்திலிருந்து நகரத்துக்கு இடம் பெயர்ந்தது பற்றி அவரது வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் குறிப்பிடும்போது, ‘ஒரு நூறு வருடப் பழைமையான ஓக் மரம் தன் வேரைத் துண்டித்துக்கொண்டு ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு நகர்ந்து சென்றது போலிருந்தது அந்த நிகழ்ச்சி’ என்று எழுதுகிறார். ஊரின் அழகு அதன் விஸ்தாரணத்திலோ, வளத்திலோ இல்லை. மாறாக, அதோடு நாம் கொள்ளும் உறவில்தான் இருக்கிறது. ஒவ்வொரு ஊரும் ஒரு கண்ணுக்குத் தெரியாத பதிவேட்டைக் கொண்டு இருக்கிறது. அதில் எண்ணிக்கையற்ற நிகழ்ச்சிகள் பதிவாகின்றன. பிறந்தவர் எத்தனை, செத்தவர் எத்தனை, வாழ்ந்து உயர்ந்தவர் யார், வாழ்ந்து கெட்டவர் யார்... இப்படி எத்தனை ஆயிரம் கணக்குகள்! ஊரின் விசித்திரம் அதன் வெளிப்படுத்தப்பட முடியாத மௌனம்தான். கரும்புகை சுழல்வது போல நிசப்தம் ஒவ்வொரு ஊரையும் சுற்றிப் படர்ந்திருக்கிறது.&lt;br /&gt;மண் திமிறுகிறது என்று விவசாயிகள் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். உண்மைதான். நிலம் சதா புரண்டுகொண்டேதான் இருக்கிறது. மண் நம் காலடியில் கிடக்கிறது என்பதற்காக, அற்பமானது என்பதுபோலப் புரிந்துகொண்டு இருக்கிறோம். உண்மையில் மண் ஒரு விசை. மண் ஒரு உயிர்ப் போராட்டம். மண்ணின் குணம் மிக விநோதமானது!&lt;br /&gt;ஒரு கொய்யாப்பழத்தைத் தின்னும்போது, அதன் ருசியாக இருப்பது அந்த மண்வாகுதான். கிராமத்துப் பெண்கள் கத்திரிக்காயை எந்த ஊர்க் காய் என்று கேட்டுதான் வாங்குவார்கள். மண்வாகு காய்கறிகளுக்கு காரலையோ, கசப்பையோ கொண்டு வருகின்றன. இளநீரின் ருசி அது விளையும் மண்ணைத் தான் சார்ந்திருக்கிறது! கொய்யாப்பழமாக, இளநீராக, அரிசியாக, கீரைகளாக மண் தன் ருசியை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது. இன்றுவரை மண்ணை நாம் புரிந்துகொள்ளவே இல்லை.&lt;br /&gt;மண்ணின் கருணைதான் மனிதர்களை வாழ வைக்கிறது. காய்கறிகளுக்கே இப்படி ருசியும், சத்தும் மண் தருகிறதென்றால், இந்தக் காய்கறிகளையும், கீரைகளையும், பழங்களையும் உண்டு வாழ்ந்து அந்த மண்ணில் புரண்டு திரியும் மனிதனை எத்தனை உரமேற்றியிருக்கும்!&lt;br /&gt;ஊர் ஒவ்வொருவர் உடல் மீதும் கண்ணுக்குத் தெரியாத சில முத்திரைகளைக் குத்தி அனுப்பிவிடுகிறது. அந்த மண் கவிச்சிதான் நம் பேச்சில், சாப் பாட்டில், பழக்கவழக்கத்தில், உடை களில், உறவில் வெளிப்படுகிறது.&lt;br /&gt;பழைய டெல்லியில் சுற்றித் திரிந்துகொண்டு இருந்தபோது, ஓட்டல் நடத்தும் ஒரு தமிழ்க் குடும்பம் பரிச்சயமானது. அவர்களிடம் பேச்சுவாக்கில் டெல்லி பிடித்திருக்கிறதா என்று கேட்டேன். அவர்கள் பிழைப்பதற்கு மிக உதவியாக இருக்கிறது என்றார்கள். ஊருக்கு வரும் யோசனை இருக்கிறதா என்று கேட்டதும் ஓட்டல் நடத்தும் நபரின் மனைவி, ‘அங்கே என்ன இருக்கு, வருவதற்கு? எங்களுக்கு எல்லாமே இனி இந்த ஊர்தான்’ என்றாள். நான் வேண்டுமென்றே ‘இந்த ஊரில் உங்களை வெளியாள் என்றுதானே சொல்கிறார்கள்?’ என்று கேட்டேன். அந்தப் பெண், குரல் உடைந்து போனவளாக, ‘எங்களோட ஒரு வயசுக் குழந்தை குளிர்காய்ச்சல் வந்து செத்துப் போய் இந்த ஊர்லதான் புதைச் சிருக்கோம். டெல்லி மண்ணுல என் பிள்ளையோட எலும்பும் கலந்திருக்கு. எங்களை வெளியாள்னு சொல்றதுக்கு யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது சார்! நாங்க இந்த ஊர்தான்!’ என்றாள்.&lt;br /&gt;அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருந்தது. பிறப்பு மட்டுமல்ல, சாவும்தானே ஊரோடு உள்ள பந்தம்!&lt;br /&gt;ஊரைப் பிரிந்து செல் வதைப் பற்றிய கதைகளில் மிக அபூர்வமானதும் உயர் வானதும் வண்ணநிலவன் எழுதிய ‘எஸ்தர்’ சிறுகதை. வண்ணநிலவனின் நுட்பமான விவரிப்பும் மொழியும், துக்கத்தை வெளிப்படுத்தும் பாங்கும் இக்கதையை என்றும் உயிர் வாழும் சாஸ்வதமான கதையாக மாற்றியிருக்கின்றன. எஸ்தரை எத்தனை முறை வாசித்திருப்பேன் என்று கணக்கிட்டுச் சொல்லவே முடியாது. வண்ணநிலவன் கதைகள் தமிழ்ச் சிறுகதைகளை இன்னொரு பரிமாணத்துக்கு உயர்த்தியவை. அவர் எதையும் உரத்துச் சொல்பவரில்லை. ஆனால், அவரது கதைகள் ஏற்படுத் தும் வலியும் துக்கமும் ஒரு வடுவைப் போல நீண்ட நாட்கள் நம்மோடு கூடவே இருக்கக் கூடியவை.&lt;br /&gt;வண்ணநிலவனின் கதாபாத்திரங்கள் பெரும் பாலும் பெண்கள். அவர்கள் சூழலால் அலைக்கழிக்கப் படுபவர்கள். ஆனாலும், தங்களின் தைரியத்தாலும், எளிய அன்பினாலும்தான் உலகம் இயங்குகிறது என்னும் உண்மையை வெளிப்படுத்துபவர்கள்.&lt;br /&gt;‘எஸ்தர்’, மழையற்றுப் போய் பஞ்சம் பீடித்த ஒரு ஊரின் கதையைச் சொல்கிறது. ‘முடிவாக பாட்டியையும் ஈசாக்கையும் விட்டுச் செல்வதென்று ஏற்பாடாகியது’ என்று தொடங்கும் இக்கதை... ஒரு கிறிஸ்துவ குடும்பத்தின் வாழ்க்கைப் பாடுகளை விவரிக்கிறது.&lt;br /&gt;மரியதாஸ் என்பவரின் பிள்ளைகள் அகஸ்டினும் டேவிட்டும். இருவரது மனைவியர் பெயரும் அமலம். ஆகவே, ஒருத்தி யைப் பெரிய அமலம் என்றும், மற்றவளை சின்ன அமலம் என்றும் அழைக்கிறார்கள். அவர்களுடன், வயதான பாட்டி ஒருத்தி கூரையைப் பார்த்தபடி தனது அந்திம நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறாள்.&lt;br /&gt;இந்த வீட்டை நிர்வகிப்பது எஸ்தர் சித்தி. புருஷனோடு வாழப் பிடிக்காமல் பல வருட காலத்துக்கு முன்பு, அந்த வீட்டுக்கு வந்து தங்கிவிட்டவள். வீட்டின் சகலபாடுகளையும் கவனித்துக் கொண்டு, வீட்டை தன் கைக்கூட்டுக்குள் பொத்தி காப்பாற்றி வருகிறாள். வீடே சித்திக்காக இயங்கியது. வேலைக்காரர்கள்கூட சித்திக்காகத்தான் வேலை செய்தார்கள். எஸ்தர் சித்தி மிக அன்பானவள். யாரையும் ஒரு சொல் திட்டாதவள். வீட்டு வேலைகளை அவளைப்போல் அக்கறையாக யாரும் செய்ய முடியாது.&lt;br /&gt;பஞ்சகாலத்தில், வீட்டில் உணவு தட்டுப்பாடாகியது. மனிதர்களை விடவும், ஆடு மாடுகளின் தீவனத்துக்காக அதிகம் அலைந்து திரிய வேண்டி இருந்தது. வீட்டில் ஒரேயரு தீப்பெட்டிதான் இருந்தது. ஆகையால் தீக்குச்சிகளைக்கூட எஸ்தர் சித்தி பாதுகாத்து வைத் திருக்கிறாள். பீடி புகைக்கும் டேவிட், ஒரு தீக்குச்சியை ரகசியமாக எடுத்து உரசும்போது, அதன் சத்தம் கேட்டு வந்து பார்க்கும் சித்தியின் கண்களில் படிந்துள்ள வேதனை, டேவிட்டை மிகவும் துக்கப்படுத்துகிறது. பஞ்சம், வீட்டு மனிதர் களின் சுபாவத்தை முற்றிலும் ஒடுக்கிவிடுகிறது. யாவரும் மனக்கலக்கம் கொண்டவர்களாக நடந்துகொள்கிறார்கள்.&lt;br /&gt;பஞ்சம் பீடித்த ஊரில் ஆட்கள் காலி செய்து போய்விடவே, தெருவில் ஆள்நடமாட்டம் குறைந்து போய், ஊரெங்கும் அழிவற்ற இருட்டு பெருகியது. பேச்சரவம் ஓய்ந்து போய், ஊறிய இருட்டு ஊரெங்கும் பயத்தைப் பெருக்கியது. அதோடு இருட்டு சதா எதையோ முணுமுணுத்துக்கொண்டு இருப்பது போலிருந்தது.&lt;br /&gt;எஸ்தர் சித்தி இருட்டின் குரலைக் கேட்டுக் கொண்டு இருந்தாள். ‘நீயும் உனக்குப் பிரியமானவர் களும் இங்கிருந்து போவதைத் தவிர, வேறு வழி என்ன? மழை பெய்வதற்காகக் காத்திருந்து மடிவீர்களா?’ என்று இருட்டு, எஸ்தர் சித்தியிடம் கேட்டது. வீட்டில் நிலைகுத்திப்போன கண்களுடன் பாட்டி கூரையைப் பார்த்தபடி இருந்தாள். அப்படி என்னதான் பார்க்கிறாள் என்று எஸ்தருக்குப் புரியவே இல்லை. ஊரைவிட்டுச் செல்லும்போது பாட்டியை என்ன செய்வது என்று அவளுக்கு யோசனையாகவே இருந்தது.&lt;br /&gt;மதுரைக்குச் சென்று கொத்து வேலை செய்தாவது பிழைத்துக்கொள்ளலாம் என்று அந்தக் குடும்பம் முடிவு செய்கிறது. அன்றிரவு சித்தி எழுந்து பாட்டியின் அருகில் போய்ப் படுத்துக்கொள்கிறாள். மறுநாள் காலை பாட்டி இறந்துபோயிருப்பது தெரிய வருகிறது. மலிவு விலையில் வாங்கிய ஒரு சவப்பெட்டி யில் வைத்து பாட்டியைக் கல்லறைத் தோட்டத்தில் புதைத்துவிட்டு, ஊரைவிட்டு விலகிப் போகிறார்கள். அதன்பிறகு, நெடு நாட்களுக்கு எஸ்தர் சித்திக்கு மட்டும் கூரை பார்த்தபடியிருந்த பாட்டியின் ஈரமான கண்கள் நினைவுக்கு வந்தபடி இருந்தன என்பதோடு கதை முடிகிறது.&lt;br /&gt;எஸ்தர் சித்தி பாட்டியைக் கருணைக் கொலை செய்து விட்டாளா... இல்லையா என்று தெரியாதபடி கதை ஓர் இடைவெளியை விட்டுச் செல்கிறது. ஊரின் மீதுள்ள வேர் பிடிப்பும், மழையற்றுப் போன பஞ்ச காலமும் மனிதர்களை வாட்டி எடுக்கும் சோகமும் கதையெங்கும் நீக்கமற நிரம்பியிருக்கிறது. வண்ணநிலவன் அடங்கிய குரலில், கவித்துவமும் நுட்பமான சித்திரிப் போடும் இக்கதையை எழுதியிருக்கிறார்.&lt;br /&gt;தினமும் ஆயிரம் பறவைகள் பறந்தபோதும், வானில் எந்தப் பறவையின் சுவடும் இருப்பதே இல்லை. மண் அப்படி இல்லை. அதில், நம் வாழ்வின் சுவடுகள் பதிந்து கிடக்கின்றன. மண்ணின் பாடல் முடிவற்ற ஒரு சங்கீதமாக எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கிறது. அதை நின்று கேட்டுப் போவதற்கோ, புரிந்து கொள்வதற்கோ நாம் தயாராகவும் இல்லை... விரும்பவும் இல்லை!&lt;br /&gt;வண்ணநிலவன் என்று அழைக்கப்படும் உ.நா.ராமச்சந்திரன் தமிழ் இலக்கியத்தின் அரிய சாதனையாளர்களில் ஒருவர். திருநெல்வேலியைச் சேர்ந்தவர்.&lt;br /&gt;1948&amp;amp;ல் பிறந்த வண்ண நிலவன், துக்ளக் பத்திரிகை யில் சில காலம் பணியாற்றி உள்ளார். இவரது Ôகடல்புரத்தில்Õ நாவல் இலக்கிய சிந்தனை பரிசு பெற்றுள்ளது. எஸ்தர், பாம்பும் பிடாரனும், தேடித் தேடி, உள்ளும் புறமும், தாமிரபரணிக் கதைகள் போன்றவை இவரது முக்கிய சிறுகதைத் தொகுதிகள்.&lt;br /&gt;சிறந்த நாவலுக்காக தமிழக அரசின் பரிசை வென்றது இவரது Ôகம்பா நதிÕ நாவல். இவரது Ôரெயினீஸ் ஐயர் தெருÕ தமிழ் நாவல்களில் மிகவும் தனித்துவமானது. திரைப்படத் துறையில் கொண்ட ஈடுபாடு காரணமாக, Ôஅவள் அப்படித்தான்Õ படத்தின் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார் வண்ணநிலவன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14025163-111997274154130126?l=e-arc.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://e-arc.blogspot.com/feeds/111997274154130126/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14025163&amp;postID=111997274154130126' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14025163/posts/default/111997274154130126'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14025163/posts/default/111997274154130126'/><link rel='alternate' type='text/html' href='http://e-arc.blogspot.com/2005/06/blog-post_111997274154130126.html' title='வண்ணநிலவன்'/><author><name>Chandramukhi</name><uri>http://www.blogger.com/profile/16507154480362737534</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14025163.post-111997270267491602</id><published>2005-06-28T08:31:00.000-07:00</published><updated>2005-06-28T08:31:42.680-07:00</updated><title type='text'>புதுமைப்பித்தன்</title><content type='html'>http://www.vikatan.com/av/2005/may/08052005/av0602.asp&lt;br /&gt;எஸ்.ராமகிருஷ்ணன்&lt;br /&gt;நடுநிசி&lt;br /&gt;இன்றைக்கும் இரவு மணி பன்னிரண்டு அடிக்கும்போது, விளக்கிச் சொல்ல முடியாத ஒரு பயம் ஏற்படுகிறது. கடிகார ஒசையைக் கேட்ட மறு நிமிடமே, பூரான் நெளிவது மாதிரி சத்தமில்லாமல் பயம் மனதில் நெளியத் துவங்கிவிடுகிறது. காரணம், இரவு பன்னிரண்டு மணி நம்முடைய நேரமல்ல! அது பேய்கள் நடமாடும் நேரம் என்று நாலைந்து வயது முதல் நம்பி வந்த பயம். (எதற்காகப் பேய்கள் எப்போதும் நடுநிசி பன்னிரண்டு மணிக்கு நடக்கத் துவங்குகின்றன என்று இன்று வரை எனக்குப் புரியவேயில்லை).&lt;br /&gt;பேய்கள் நம் பால்ய காலத்தின் பிரிக்க முடியாத தோழர்கள். எந்த இடத்தில் பேய் இருக்கிறது, எந்த இடத்தில் இல்லை என்று வேறுபடுத்தித் தெரிந்துகொள்ள முடியாத வயது அது. அதை உறுதி செய்வது போலவே ஊரெங்கும் பேய்க் கதைகள் நிரம்பியிருந்தன. (கதைகள் இல்லாத பேய்கள் இருக்க முடியுமா என்ன?) பேய்களைப் பார்த்தவர்களும், அதோடு பேசிப் பழகியவர்களும் அக்கம்பக்கத்து வீடுகளில் இருந்த காலம் அது!&lt;br /&gt;பேய் பிடித்து விரட்டுவது அன்றாடக் காட்சியாக இருந்தது. (ஆண்களுக் குப் பேய் பிடித்து நான் பார்த்ததே இல்லை. பாட்டியிடம் கேட்டபோது, ஆண்கள் ஏற்கெனவே பிசாசுகள்தான். பேய் வேறு பிடிக்கணுமாக்கும் என்பாள்.) பேய்கள் யாருமற்ற வீடுகளில்தான் குடியிருக்கின்றன. யாருமற்ற பாதைகளில்தான் நடமாடித் திரிகின்றன. யாருமற்ற கிணற்றிலே குளிக்கின் றன. என்றால், தனிமையின் பெயர்தான் பேயா? பேய்கள் சிறுவயதில் என்னைக் கடுமையாக அலைக் கழித்தன. குறிப்பாக, கிணற்றில் தனியாகக் குளிக்கப் போகும்போது, கனகவல்லி காலைப் பிடித்துக் கொள்வாள் என்ற பயம் வீட்டில் இருந்து கிளம்பும்போதே துவங்கிவிடும். இதற்காக சிலரைத் துணைக்கு அழைத்துப் போக வேண்டும்.&lt;br /&gt;ஒவ்வொரு பேய்க்கும் ஒரு இடமிருந்தது. கனகவல்லிக்கு ஒற்றைப் பனையடி கிணறு. ஜோதிக்கு கண்மாய்க் கரை பாதை. சண்முகத் தாய்க்கு காரை வீடு. இப்படி ஒருவருக் கொருவர் சண்டை சச்சரவின்றி அவரவர் பகுதியில் அவரவர் நிம்மதி யாகத்தான் இருந்தார்கள். நாம் எப்போதாவது அவர்கள் பகுதியைக் கடந்து போனால், அது அத்துமீறல்! ஆகவே, அவர்கள் நம்மைப் பிடித்து வைத்துக்கொள்வார்கள். சிறுவர் களை பேய்கள் பிடித்து வைத்துக்கொள்வது இல்லை. மாறாக, பய முறுத்தித் துரத்திவிடும்.&lt;br /&gt;பேய்கள் விநோத மானவையே! அவை சிறுவர்களைக் கொஞ்சுவதில்தான் அதிக அக்கறை எடுத்துக்கொள் கின்றன. என்னோடு படித்த பாண்டிய ராஜனை ஒரு பேய் தாடையைப் பிடித்து மாறி மாறிக் கொஞ்சி யதாகவும், அதன் விரல்கள் ஐஸ்கட்டி உருகியது போலிருந் ததாகவும் சொன்னான் அவன். (பெற்றவர்கள் குழந்தைகளைக்கொஞ்சுவதில்லை என்ற ஆதங்கத்தைப் பேய்கள் தீர்த்து வைக்கின்றபோலும்.)&lt;br /&gt;பேயாக அலையும் ஆண்கள் அதிகத் தொல்லை தருவது இல்லை. மாறாக, யாராவது கறிச் சோறு கொண்டுபோனால் மட்டும், அந்த ஆளை அடித்துப் போட்டுவிட்டுக் கறிச் சோற்றைச் சாப்பிட்டுவிடும் (செத்தும் சாப்பாட்டு ஆசை போகாது போல). கிட்ணதேவர் செத்துப் பல வருடமாகியும், தனியாகச் சைக்கிளில் போகிறவர்களின் பின்னால் டபுள்ஸ் ஏறிக்கொண்டு பீடிக்கு நெருப்பு கேட்பாராம். அவரைத் திரும்பிப் பார்த்தாலோ, பேச்சுக் கொடுத்தாலோ மாட்டிக்கொள்வார்கள். (அவர் வாழ்ந்த நாட்களிலும் இதுதானே நடந்தது!)&lt;br /&gt;என் பயம் கனகவல்லி பற்றி மட்டுமே! கணவனுடன் சண்டை யிட்டுக்கொண்டு கிராமத் தில் இருந்த கிணற்றில் குதித்துச் செத்துப் போனவள் கனகவல்லி. அவள் மிக அழகாய் இருப்பாள் என்றார்கள். குழந்தையில்லாத அவள் மீது தினமும் புருஷன் ஏச்சும் பேச்சுமாக இருக்கவே, மனத் துயரம் தாங்க முடியா மல் அவள் கிணற்றில் விழுந்து செத்துப் போனாள். அன்றிலிருந்து அவள், கிணற்றில் தனியே யாராவது குதித்துக் குளித்தால் அவர்களின் கால்களைப் பிடித்து உள்ளே இழுத் துக் கொண்டுபோய்க் கெஞ்சுவாள். கட்டிக் கொண்டு, வெளியே போகவிடாமல் பிடித்து வைத்துக்கொள்வாள். அது நிஜம் என்பது போல, கிணற்றில் குதித்தவுடன் காலைப் பற்றிக்கொண்டு யாரோ இழுப்பதுபோல் தண்ணீரின் விசை கடுமையாகிவிடும். எப்படி எழும்பினாலும் மேலே போக முடியாது. மேலும், தண்ணீருக்குள் பார்வை துல்லியமாக இருக்காது என்பதால், யாரோ இருப்பது போல ஒரு மங்கலான தோற்றம் இருக்கும். கிணற்றில் தண்ணீர் வற்றிப் போன காலங்களில் கனகவல்லி அழுதுகொண்டு இருக்கும் சத்தம் கேட்கும் என்பார்கள். எப்படியோ, ஒவ்வொரு நாளும் அவளுக்குப் பயந்து தான் குளிக்கவேண்டியிருந்தது.&lt;br /&gt;கிராமத்து இரவுகள் ஆற்றுப் படுகை போல பயத்தின் படுகையாக இருந்தன. எங்கே தோண்டினாலும் பயம் ஊற்றெடுக்கத் துவங்கிவிடும். அதன் காரணமாக, தாக மெடுத்தால்கூட எழுந்து சமையலறைக்குப் போய் தண்ணீர் குடிக்கப் பயமாக இருக்கும். எப்போதாவது வயல் வரப்பில் தனியே நடந்து வரும்போது வாய்க்கு வந்த பாடல் களைச் சத்த மாகப் பாடிய படி வர வேண் டியதிருக்கும். அப்படியும், பயம் அடங்காது போனால், கண்களை மூடிக்கொண்டு ஓடி வர வேண்டிய நிலையும் உண்டாகும்.&lt;br /&gt;ஊரில் வாழ்பவர்களை விடவும், செத்துப் போனவர் களே ஊர் மீது அதிகப் பற்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் எங்கள் ஊரை விட்டு வேறு ஊர்களுக்கு போவதே இல்லை. பேய்கள் காற்றில் அலைந்து திரியக்கூடியவை என்றபோதும், ஊர் விட்டு ஊர் போவதே இல்லை. அவற்றுக்கு எல்லைக் கோடுகள் இருக்கின்றன.&lt;br /&gt;பெண் பேய்கள் எப்போதுமே வெள்ளை உடையைத்தான் அணிகின் றன. (உலகமெங்கும் பேய்கள் ஒரே நிறத்தில்தான் உடை அணிகின்றன.) தலையை விரித்துப் போட்டுக்கொண்டு இருக்கின்றன. (இப்போதாவது நிம்மதி யாக தன் விருப்பம்போல இருக்கட்டுமே!) ஆண் பேய்கள் இது போல வெள்ளைச் சட்டை, வேட்டி அணிவது கிடையாது. மாறாக, கறுப்பு உடை அணிந்திருக்கும் என்பார்கள்.&lt;br /&gt;எங்களோடு எட்டாம் வகுப்பில் படித்துப் பெயிலாகி, அந்த வருத்தம் தாள முடியாமல் தங்கம் என்ற மாணவி பூச்சிமருந்தைக் குடித்துவிட்டாள். உடனே, ஊர்க் களத்தில் இருந்த ஒரு மாட்டுவண்டியைக் கவிழ்த்துப் போட்டு, அவளை சக்கரத்தின் மீது வைத்துக் கட்டி, கிறுகிறுவெனச் சுற்றினார்கள். அவள் மஞ்சளும் கோழையுமாக வாந்தியெடுத்தாள். கசக்கியெறிந்த காகிதம்போல அவள் உடல் சுருண்டு கிடந்தது. கண்கள் கிறங்கிப் போயிருந்தன. அவளைக் கண்டு ஊர் ஜனங்கள் வேதனை தாங்க முடியாமல் அழுது கூப்பாடு போட்டார்கள். அவள் உதடுகள் நடுங்கிக்கொண்டு இருந்தன.&lt;br /&gt;தங்கம் தேய்ந்து போன குரலில், ‘குடிக்கத் தண்ணி வேணும்’ என்று கேட்டாள். ‘தண்ணீர் கொடுக்க வேண்டாம். குரல் சுருங்கிவிடும்’ என்று ஊர்ப் பெரியவர்கள் தடுத்து விட்டார்கள். யாவரும் பார்த்துக்கொண்டு இருந்தபோதே, தங்கம் இறந்து போனாள். ஆனால், அதன் பிறகு... எங்கள் வகுப்பில் மாணவர்கள் குடிப்பதற்கு வைத்திருக்கும் மண்பானையில் இருந்து அவள் டம்ளர் டம்ளராக தண்ணீர் மோந்து மோந்து குடிப் பதாகவும், பள்ளிக்கூடத்தையே சுற்றிக்கொண்டு இருப்பதாகவும் சொல்லத் துவங்கினர்கள். இதை மெய்ப்பிப்பது போல சில நாட்கள் இரவு நேரம் டியூஷன் படிக்கும் போது யாவரும் பாடத்தைச் சத்தமாக வாசித்துக்கொண்டு இருப்போம். எங்கள் யாவரின் சத்தமும் ஓய்ந்துபோன ஒரு நிமிடத்தில், யாரோ முணு முணுக்கும் சத்தம் கேட்கும். அது தங்கம்தான் என்றும், அவளும் எங்களோடு படித்துக் கொண்டு இருக்கிறாள் என்றும் நம்பினோம். அவளை நினைக் கும் போது மட்டுமே இன்று என் தொண்டையில் நெறி கட்டியது போல வலி உண்டாகிறது.&lt;br /&gt;கிராமத்துக்குள் பேருந்து வந்து போகத் துவங்கிய நாளில் பேய்களின் பயம் கரைந்துபோகத் துவங்கியது. ஊருக்குள் வேற்று மனிதர்கள் வரத் துவங்கி னார்கள். மின்சாரம் அறிமுக மானது. குளியல் அறைகள் அறிமுகமாகின. டெலிபோனும் தொலைக்காட்சியும் சாத்திய மாயின. பேய்கள் இந்த மாற் றத்தினால் கோபம் கொண்டு யாரையும் பிடிக்கவே இல்லை. அவை பிடிவாதமான கிராமத்து விவசாயியைப் போல யாரோ டும் பேசக் கூடப் பிடிக்காமல் வம்படியாக தனியே ஒதுங்கிக் கொண்டு விட்டன.&lt;br /&gt;கடவுளைக் கவனிக்கவே நேரமில்லாத மனிதர்களுக்குப் பேய்கள் எம்மாத்திரம்? அவற்றை மறந்தே விட்டார்கள். கனகவல்லி இருந்த கிணற்றில் குளிப்பதற்கு யாரும் வராமல் போய் பத்து வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது. தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் கிடக்கும் கண்மாயில் வேலிமரங்களைத் தவிர, ஜோதிக்கு வேறு துணையில்லை.&lt;br /&gt;இன்றுள்ள மெட்ரிக் பள்ளியில், பேய்களாக இருந்தாலும் தமிழில் பேசமுடியாது என்பதால் பயந்து எந்தப் பேயும் பள்ளியின் பக்கமே போகவில்லை. உண்மையிலே இடிந்த வீடுகளையும் யாருமற்ற பாதைகளையும் தவிர பேய்கள் வேறு போக்கிடமற்றுப் போய் விட்டன. அங்கும் அவற்றைச் சீந்துவார் இல்லை. அதனால் தானோ என்னவோ, எனக்குப் பேய்களைப் பிடிக்கத் துவங்கி இருக்கிறது.&lt;br /&gt;பேயை நம்புகிறீர்களா, இல்லையா என்று என்னை எவராவது கேட்டால், ‘நம்ப மாட்டேன். ஆனால் பயமாகத் தான் இருக்கிறது’ என்று புதுமைப்பித்தன் சொன்ன பதிலைத்தான் சொல்வேன்.&lt;br /&gt;புதுமைப்பித்தன் தமிழ்ச் சிறுகதையுலகின் உன்னதக் கலைஞன். பாரதியைப் போல அசலானதொரு தமிழ்க் கலைஞன். அவரது கற்பனையும் மொழியும், தமிழ் சிறுகதை உலகுக்கு ஒரு புது பாய்ச்சலை உருவாக்கியது.&lt;br /&gt;இவரது ‘காஞ்சனை’ என்ற கதை பேயைப் பற்றியது. அல்லது, பேய் பற்றிய பயத்தைப் பற்றியது. (பயமும் பேயும் வேறு வேறா என்ன?) ஒரு எழுத்தாளரின் வீட்டில் இக்கதை நடக்கிறது. அவருக்கு ஒரு நள்ளிரவில் தூக்கம் பிடிக்காமல் விழிப்பு வந்து விடுகிறது. எங்கிருந்தோ பிணம் எரிப்பது போல நாற்றம் வருவதை நுகர முடிகிறது. வீட்டில் எப்படி இந்த நாற்றம் வருகிறது என்று சுற்றிலும் தேடிப் பார்க்கிறார். கண்டுபிடிக்க முடியவில்லை. சில நிமிஷங்களில் அந்த நாற்றம் கமகமவென நறுமணமாகிறது. அதுவும் எங்கிருந்து வருகிறது என்று தேடிக் கண்டுபிடிக்க முடிய வில்லை. மனைவியை எழுப்பிக் கேட்கிறார். அவள் உறக்கம் கலையாமல் ‘பக்கத்தில் யார் வீட்டி லாவது ஊதுபத்தி ஏற்றி வைத்திருப்பார்கள், பேசாமல் படுத்துத் தூங்குங்கள்’ என்கிறாள்.&lt;br /&gt;மறுநாள், அவர்கள் வீட்டுக்கு ஒரு பிச்சைக்காரி வருகிறாள். அவளை எழுத்தாளரின் மனைவி, உழைத்துப் பிழைக்கக்கூடாதா என்று கேட்கவே, எந்த வேலை கொடுத்தாலும் செய்வதாகச் சொல்கிறாள் பிச்சைக்காரி. எழுத்தாளரின் மனைவியும், மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கும் தனக்கு உதவியாக இருக்கட்டுமே என்று அவளை வேலைக்குச் சேர்த்துக் கொள்கிறாள். அவருக்கு இது பிடிக்கவில்லை. பிச்சைக்காரியை உற்றுப் பார்க்கும்போது, அவள் கால்கள் தரையில் இல்லாமல் அந்தரத்தில் மிதப்பது போலவே இருக்கின்றன. மனப்பிரமையா இல்லை நிஜமா என்று தெரியாமல் விழிக்கிறார்.&lt;br /&gt;சில நாட்களில், பின்னிரவில் வேலைக்காரி காஞ்சனை உறங்குகிறாளா இல்லையா என்று பார்க்கப் போகிறார். அவள் படுக்கை காலியாகக் கிடக்கிறது. எங்கே போயிருப் பாள் என்று அவர் வெளியே தேடிப் பார்க்கும் நிமிஷத்தில் அவள் திரும்பவும் படுக்கையில் இருக் கிறாள். எப்படி என்று புரியவேயில்லை. இது போலவே மறுநாள் இரவு ஆழ்ந்த தூக்கத்தில் தன் குரல்வளையை யாரோ அழுத்திக் கடிப்பது போல அவருக்குத் தோன்றுகிறது. திடுக்கிட்டு எழுந்து பார்க்கிறார். தொண்டையில் லேசான ரத்தத் துளி இருக்கிறது. காஞ்சனையைப் படுக்கையில் காணவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பயத்துடன் ஜன்னலைத் திறந்து வேடிக்கை பார்க்கும் அவரை யாரோ ஒருவன் அழைத்து சுடலைச் சாம்பல் தந்து, அவரது மனைவி நெற்றில் பூசினால் யாவும் சரியாகிவிடும் என்கிறான். அதன் பிறகு காஞ்சனை அவர்கள் வீட்டுக்கு வரவே இல்லை. எங்கே போனாள் என்றும் தெரியவில்லை என்பதோடு கதை முடிகிறது.&lt;br /&gt;பேய்கள் நிஜமா, பொய்யா எனத் தெரியவில்லை. ஆனால், அது ஒரு மன விசித்திரம். மனம் கொள்ளும் தடுமாற்றத்தின் பெயர்தான் பேய் போலும்! சமீபத்தில் இந்தியில் வெளியான பேய்ப் படம் ஒன்று பார்த்தேன். அதில், காட்டுக்குள் புகைமூட்டத்தோடு அலையும் பெண் பேய், ஹைஹீல்ஸ் செருப்பு அணிந்திருந்தது. நல்லவேளை, காலத்தில் பேய்கள் பின்தங்கிவிடவில்லை என்று மனதில் சந்தோஷம் பொங்கியது. இன்று பேய்கள் இடத்தை வேறு ஏதோ பயம் நிரப்பிக் கொண்டுவிட்டது. எனது இப்போதைய பயம் பேய்கள் அல்ல... டெலிவிஷன் மெகா சீரியல்கள் மட்டுமே!&lt;br /&gt;உலகின் சிறந்த சிறுகதை ஆசிரியர்கள் எவரோடும் சமமாக வைத்துப் பேசப்படக்கூடிய எழுத்து புதுமைப்பித்தனுடையது. திருநெல்வேலியில் 1906&amp;ல் பிறந்த இவரது பெயர் விருத்தாசலம். முதல் கதை, மணிக்கொடி இதழில் 1934\ம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு தொடர்ந்து பதினாலு ஆண்டுகள் சிறுகதை, கவிதை, நாடகம், சினிமா, அரசியல் கட்டுரைகள், மொழிபெயர்ப்புக் கதைகள் என பன்முகத் தன்மைகொண்ட கலைஞனாக விளங்கினார். இவரது கதைகளை தமிழ்வாழ்வின் நாடித் துடிப்புகள் எனலாம். கடவுளைக்கூட காபி கிளப்புக்கு அழைத்துச் செல்லும் அபூர்வமான பகடி கொண்ட எழுத்து புதுமைப்பித்தனுடையது. காசநோய் தாக்கி 42 வயதில் மரணமடைந்த இந்த அபூர்வ கலைஞன், புதிய தமிழ்ச் சிறுகதைகளுக்கு மூலவித்தாக தனது படைப்புகளை விட்டுச் சென்றிருக்கிறார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14025163-111997270267491602?l=e-arc.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://e-arc.blogspot.com/feeds/111997270267491602/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14025163&amp;postID=111997270267491602' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14025163/posts/default/111997270267491602'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14025163/posts/default/111997270267491602'/><link rel='alternate' type='text/html' href='http://e-arc.blogspot.com/2005/06/blog-post_111997270267491602.html' title='புதுமைப்பித்தன்'/><author><name>Chandramukhi</name><uri>http://www.blogger.com/profile/16507154480362737534</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14025163.post-111997264934897987</id><published>2005-06-28T08:30:00.000-07:00</published><updated>2005-06-28T08:30:49.356-07:00</updated><title type='text'>கு.அழகிரிசாமி</title><content type='html'>ஒரு பிடி சோறு&lt;br /&gt;எஸ்.ராமகிருஷ்ணன்&lt;br /&gt;எனது நண்பனும், ஆங்கிலத்தில் எழுதும் கவிஞனுமான ரஞ்சன் மகோபாத்ரா வந்திருந்தான். அவன் அமெரிக்காவில் ஆங்கில இலக்கியத்தில் ஆய்வு செய்பவன். பல வருடங்களுக்குப் பிறகு சென்னைக்கு வருகிறான். மாநகர வாழ்வும், கடற்கரையும், சாப்பாடும் அவனுக்குத் தன் சொந்த ஊரில் இருப்பது போலவே தோன்றுவதாகச் சொன்னான். நூலகம், சினிமா என இரு வார காலம் கடந்து போன பிறகு, ‘தமிழ்நாட்டில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம் என்று ஏதாவது இருந்தால் சொல்லு, போகலாம்!’ என்றான். உடனே மனதில் ஒரு இடம் தோன்றியது!&lt;br /&gt;மறுநாளின் அதிகாலையில், நானும் அவனும் காரில் பயணம் செய்யத் துவங்கினோம். எங்கே செல்கிறோம் என அவன் கேட்கவே இல்லை. நாங்கள் அந்த ஊருக்குள் போய்ச் சேர்ந்தபோது காலை பத்து மணி. சிறிய கிராமம் போன்ற இடத்துக்கு வந்திருக்கிறோமே என்ற தயக்கத்துடன், ‘இங்கே ஏதாவது சோழர்களின் கற்கோவில் இருக்கிறதா?’ என்று கேட்டான். ‘நான் பார்த்து இன்று வரை வியந்தும் பெருமைப்பட்டும் வரும் ஒரு ஊர் இது. நீயே வந்து பார்!’ என்று அழைத்தேன். அது ராமலிங்க வள்ளலார் வாழ்ந்த வடலூர்!&lt;br /&gt;அறுங்கோண வடிவத்துடன் உள்ள அந்த மண்டபம் சுற்றிலும் கம்பி பாய்ச்சப்பட்டிருந்தது. சத்ய ஞான சபை எனப்படும் அந்த மண்டபம் ‘அன்பே கடவுள்!’ என்ற உயர்ந்த கோட்பாட்டைப் பிரதிபலிப்பது!&lt;br /&gt;1871&amp;ல் வள்ளலாரால் துவங்கப்பட்ட அந்த சபையில் உள்ளே நானும் அவனும் நடந்து சென்றோம். புறாக்களின் விம்மும் குரல் எங்கிருந்தோ கேட்டுக்கொண்டே இருந்தது. மிக வயதான ஒருவர் எங்களைப் பார்த்து, ‘அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை’ என்று கூறியபடி கையெடுத்து வணங்கினார். மண்டபத்தின் உள்ளே அணையாத தீபம் ஒன்று எரிந்துகொண்டு இருந்தது. விளக்கின் முன்னால் ஏழு நிறத் திரைகள் இருந்தன. ஒவ்வொரு திரையும் மனிதனின் அஞ்ஞானத்தை குறிப்பதாக, வயதானவர் விளக்கம் சொன்னார்.&lt;br /&gt;சபையின் உள்ளே சிலர் தியானத்தில் லயித்திருந்தனர். பார்வையற்ற ஒரு பெண் சப்பணமிட்டு அமர்ந்தபடி திரு அருட் பாவை முணுமுணுக்கும் குரலில் பாடிக்கொண்டுஇருந் தார். இருவரும் வெளியே வந்தபோது ரஞ்சன், இது போன்ற தியான மண்டபங் களை கொல்கத்தாவில் பார்த்து இருப்பதாகச் சொன்னான். ‘நீ இன்னும் முழுமையாகப் பார்க்கவில்லை. அமைதியாக என்னுடன் வா’ என்று வெளியே அழைத்து வந்தேன். வெளியே வெயில் உச்சிக்கு வந்திருந்தது. ‘நூற்றாண்டு காலமாக பசித்தவர்களுக்கு உணவு அளிக்கும் அறச் சாலையை பார்’ என்று நான் காட்டிய கட்டிடம் ஒரு கோவிலைப் போல மௌனமாக இருந்தது. உள்ளே, மதிய உணவு தயாராகிக்கொண்டு இருந்தது. இந்த அறச்சாலையில் தினமும் ஆயிரம் பேருக்கு மேல் உணவு அருந்துகிறார்கள். ‘நூறு வருடங்கள் கடந்தும் இன்னும் அணையாமல் எரிந்துகொண்டே இருக்கும் அடுப்பு இது!’ என்று காட்டி னேன். நீளமான அடுப்பு அது. அதில் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பின் சப்தம், ‘உலகில் உள்ள மனிதர்களின் பசியைப் போக்குவது மட்டுமே தனது பெரும்பணி!’ என்று உரத்து சொல்லிக் கொண்டு இருப்பது போலிருந்தது.&lt;br /&gt;ரஞ்சன் அந்த நெருப்பை வியப் போடு பார்த்தான். ‘இரவில்கூட இதை அணைக்க மாட்டார்களா?’ என்று கேட்டான். ‘ஆம், இது எப்போதும் எரிந்துகொண்டே தான் இருக்கும்... பக்கத்தில் வந்து பாருங்கள்’ என்று சொன் னார் சமையல் செய்பவர். ஏதோ ரகசியம் பேசுவது போல நெருப்பின்குரல்கேட் டது. ‘சாதிசமய பேதமின்றி, யாவரும் சமம் என்ற உயர்ந்த எண்ணத்தில் உணவு அளிக்கிறோம். இருந்து நீங்களும் சாப்பிட்டுவிட்டுச் செல்லுங்கள்!’ என்றார் சமையல் செய்பவர்.&lt;br /&gt;வாழை இலை போட்டு வடை பாயசத்துடன் அறுசுவை உணவு படைத் தார்கள். எங்களோடு பந்தி யில் அமர்ந்து சாப்பிட்ட வர்களில் பாதிப்பேர் வயதானவர்கள். ஏதேதோ ஊர்களில் இருந்து வந்து தங்கிவிட்டவர்கள். ஒன்றிரண்டு பண்டாரங்கள், நோயாளிகள், கிராமத்து விவசாயிகள், குழந்தைகள் எனப் பந்தியில் இருநூறு பேருக்கு மேலிருக்கும். அத்தனை சுவையான உணவை வேறு எங்கும் நான் சாப்பிட்டது இல்லை. தைப்பூசம் அன்று அங்கே ஒரு லட்சம் பேருக்கும் மேல் உணவு அளிக்கப்படுமாம். எங்கள் எதிரில் அமர்ந்திருந்த பார்வையற்ற பெண் கைகளைக் குவித்து முதலில் உணவை வணங்கி னாள். பிறகு கொஞ்சம்கொஞ்சமாக எடுத்து சுவைத்துச் சாப்பிட்டாள். அவள் முகத்தில் சாந்தியும் அமைதியும் படிந்திருந்தது. சாப்பிட்டு முடித்ததும் சமையல் செய்தவர்களுக்கும், பரிமாறியவர்களுக்கும் கைகூப்பி நன்றி சொல்லியபடி வெளியே வந்து மர நிழலில் உட்கார்ந்தாள். அவளது வாயிலிருந்து அருட்பா திரும்பவும் கசிந்து வரத் துவங்கியது. ரஞ்சனால் இந்த காட்சியை நம்ப முடியவில்லை. அவளிடம் சென்று, ‘வள்ளலாரின் கவிதைகளுக்கு உங்களுக்கு அர்த்தம் புரிகிறதா?’ என்று கேட்டான். அவள் சிரித்த படியே, ‘அன்புதானே பாடலுக்கு ருசியைத் தருகிறது. சொற்கள
